1248திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

யினைத் திருமுடியில் அணிந்த இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் பதிகள் பலவற்றையும் சென்று துதித்து; மங்கை பாகர்....போய் - உமைபங்கராகிய இறைவர் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் வயல்கள் சூழ்ந்த திருமாகறலைப் போற்றிச் சென்று; கொங்கு...குறுகினார் - மணம் பொருந்திய மலர்களையுடைய நீர் சூழ்ந்த திருக்குரங்கணின் முட்டத்தினருகு சென்று சார்ந்தருளினர்.
(வி-ரை) பதிகள் பல - இவை புரிசைநாட்டுப் புரிசை, திருவன்பார்த்தான் பனங்காட்டூர், விலிவலம் முதலாயின என்பது கருதப்படும்.
வயல்மாகறல் - "விங்கு விளைகழனி" (1), "மடைகொள் புனலோடு வயல்"(11) என்று பதிகத் தொடக்கத்தும் இறுதியிலும் வயலின் சிறப்புப்பற்றி வரும் குறிப்புப்படக் காட்டியவாறு; இவ்வயலின் சிறப்பு இன்றும் காணவுள்ளது.
கொங்கு மலர் நீர் - (முட்டம் என்னும்) காக்கை வழிபட்டு மூக்கினாற் கீறிய காக்கைமடு கோயிலைச் சுற்றியுள்ள நீர்ச்சிறப்பும் தலவிசேடமும் குறிப்புப் பெற இவ்வாற்றாற் கூறினார். கொங்கு - வாசம்; மணம். தலவிசேடம் பார்க்க. "கழுநீர் கொழுநீர்" என்ற பதிகமும் பார்க்க.
குறுகினார் - அணிமையிற் சென்றருளினார்.

984

திருமாகறல்
திருச்சிற்றம்பலம்

திருவிராகம்

பண் - சாதாரி - 3-ம் திருமுறை

விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடலரவம்
மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி நீடுபொழின் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்க டீவினைக டீருமுடனே.

(1)

கடைகொணெடு மாடமிக வோங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தனுரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளானடியையே
யுடையதமிழ் பத்துமுணர் வாரவர்க டொல்வினைக ளொல்குமுடனே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு:- செஞ்சடையினான் - செங்கண்விடை யண்ணல் - என்பன முதலிய தன்மைகளாற் போற்றப்படும் மாகறலுளாராகிய இறைவரது அடிசேர்பவர்களது தீவினைகள் உடனே தீரும். பதிக முழுதும் வினைத்தீர்வுக் குறிப்புக் காண்க.
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) விங்கு - மஞ்சள் என்பர்; மங்குலொடு நீள் - மேகம்வரை நீண்ட; அரவம்மிகு கழனியும், கொடிகள் மலி மாடமும் நீடுபொழிலும் உடைய மாகறல் என்க;- (2) இலையின்மலி - இலைவடிவுள்ள;- (3) துந்துபிகள் முதலாயின காலையொடு மாலையிலும் முழக்கி வழிபாடு செய்து என்பதாம்; பாலை அன - பாலைப்போன்ற வெண்மை நிறமுடைய; - (4) இங்கு - தங்கும்; "இங்கு சுவையின்னமிர்தம்"(சிந்தா);- (5) துஞ்சு நறு தீலம் - இரவில் இதழ் விரியாத நீலமலர்; இருள் நீங்க - இரவுபோய் விடிய; ஒளி தோன்றும் - பகலில் மலர்ந்து தனது நிறம் விளங்கும்;- (6) படிமம் - உருவம்; ஒல்க - சுருங்க;- (7) வெய்ய வினை நெறிகள் செல - பிராரத்தம் அனுபவித்துக் கழிய; வந்