|
| மகிழ்ந்துகொண் டருளி"(1146) என்று அம்மை வேண்ட இறைவர் "விரும்பு பூசனை மேவி வீற்றிருந்" தருளினார் (1147) என்றது காண்க. |
| முன்னினார் - முன்னாக - அணித்தாகச் - சென்றருளினார். |
| 992 |
2891 | கம்ப வாணர் கோயில்வாயில் கண்டு கைகு வித்தெடுத் தும்ப ரோங்கு கோபுரத்தின் முன்னி றைஞ்சி யுள்ளணைந் தம்பொன் மாளி கைப்புறத்தி லன்ப ரோடு சூழவந் திம்பர் ஞால முய்யவந்த பிள்ளை யாரி றைஞ்சுவார்; | |
| 993 |
| வேறு |
2892 | செம்பொன்மலைக் கொடிதழுவக் குழைந்தருளுந் திருமேனிக் கம்பரைவந் தெதிர்வணங்குங் கவுணியர்தங் காவலனார் பம்புதுளிக் கண்ணருவி பாய்ந்துமயிர்ப் புளகம்வரத் தம்பெருகு மனக்காத றள்ளநில மிசைத்தாழ்ந்தார். | |
| 994 |
2893 | பலமுறையும் பணிந்தெழுந்து பங்கயச்செங் கைமுகிழ்ப்ப மலருமுக மளித்ததிரு மணிவாயான் "மறையா"னென் றுலகுய்ய வெடுத்தருளி யுருகியவன் பென்புருக்க நிலவுமிசை முதற்றாள நிரம்பியநீர் மையினிகழ, | |
| 995 |
2894 | பாடினார்; பணிவுற்றார்; பரிவுறுமா னந்தக்கூத் தாடினா ரகங்குழைந்தா; ரஞ்சலிதஞ் சென்னியின்மேற் சூடினார்; மெய்ம்முகிழ்த்தார்; சூகரமு மன்னமுமாய்த் தேடினா ரிருவருக்குந் தெரிவரியார் திருமகனார்; | |
| 996 |
2895 | மருவியவே ழிசைபொழிய மனம்பொழியும் பேரன்பாற் பெருகியகண் மழைபொழியப் பெரும்புகலிப் பெருந்தகையார் உருகியவன் புள்ளலைப்ப வுமைதழுவக் குழைந்தவரைப் பருகியமெய் யுணர்வினொடும் பரவியே புறத்தணைந்தார். | |
| 997 |
| 2891. (இ-ள்) கம்பவாணர்....எழுந்து - ஏகம்பவாணராகிய இறைவரது திருக்கோயில் வாயிலினைக் கண்டு கைகளைக் கூப்பித் தலையின்மேல் தூக்கி வணங்கி; உம்பர்...இறைஞ்சி - வானத்தின்மேல் ஓங்கும் திருக்கோபுரத்தின் முன்னே பணிந்து; உள் அணைந்து....வந்து - திருக்கோயிலினுள்ளே சேர்ந்து அழகிய பொன்மாளிகையின் புறச்சுற்றிலே அன்பர்களுடனே சூழ்ந்து வலம் வந்து; இம்பர்...இறைஞ்சுவார் - இந்நிலவுலகம் உய்யும்படி திருவவதரித்த பிள்ளையார் வணங்குவாராகி, |
| 993 |
| 2892. (இ-ள்) செம்பொன்மலைக் கொடி...கவுணியனார் - செவ்விய பொன் மலையரசனுக்கு மகளாராகிய கொடிபோன்ற காமாட்சியம்மையார் தழுவியிடக் குழைந்து காட்டியருளிய திருமேனியினை உடைய திரு ஏகாம்பநாதரைத் திருமுன்பு வந்து எதிரே வணங்கும் கவுணியர் பெருமானாராகிய பிள்ளையார்; பம்பு....புளகம் வர - ததும்பும் துளிகளாகப் பெருகி அருவிபோலக் கண்ணீர் பாய்ந்தொழுகத் திருமேனியில் மயிர்ப்புளக முண்டாக; தம்பெருகு....தாழ்ந்தார் - தமது திருமனத்தினிறைந்து பெருகுகின்ற பெருவிருப்பம் உந்த நிலத்தின்மேல் வீழ்ந்து வணங்கியவராகி, |
| 994 |