[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1271

விளமையைத் தோற்றுவித்தற் காரணமான பெண்ணும் ஆணும். கூர்மை - பெருந்தகை - "சிறுமையொடு பெருமையுமாம் பேராளன்" (தேவா); மருந்து - பிறவி நோய் தீர்ப்பவனாதல் குறிப்பு; - (2) பாறு - கழுகு; மாறிலி - பெயர்; ஒப்பில்லாதவர்; - (5) துறை - தொழில் - உயிர் முயற்சிகள் செல்லும் துறைகளும் செயல்களும். அவன் - பற்றுக்கோடாகி இயக்குபவன்;- (8) மாதி - பெரியவன்.
தலவிசேடம் :- திருமாற்பேறு - III - பக்கம் 553 பார்க்க.
திருவல்லம்
2901
திருமாற்பே றுடையவர்தந் திருவருள்பெற் றெழுந்தருளித்
கருமாலுங் கருமாவாய்க் காண்பரிய கழறாங்கி
வருமாற்றன் மழவிடையார் திருவல்லம் வணங்கித்தம்
பெருமாற்குத் திருப்பதிகப் பெரும்பிணைய லணிவித்தார்.

1003

(இ-ள்) திருமாற்பேறு உடையவர்தம்....எழுந்தருளி - திருமாற்பேறுடைய இறைவரது திருவருள் விடைபெற்று அங்குநின்றும் எழுந்தருளிச் சென்று; கருமாலும்....வணங்கி - கரிய நிறமுடைய விட்டுணுவும் தாம் பன்றியிருவெடுத்துக் காண இயலாத திருவடிகளைச் சுமந்து வரும் வலிமை பெற்றுள்ள இளமையுடைய இடபத்தினையுடைய இறைவரது திருவல்லம் என்றும் பதியினை வணங்கி; தம்பெருமாற்கு....அணிவித்தார் - தமது பெருமானுக்குத் திருப்பதிகமாகிய பெரிய மாலையினை அணிவித்தருளினர்.
(வி-ரை) திருவருள் பெற்று - திருவருள் விடை பெற்று.
கருமாலும்....மழவிடையார் - கருமா - பன்றி; பன்னியுருவெடுத்துத் தேடிய போது இறைவரது கழல்கள் திருமாலுக்குக் காண்பரிதாயின. ஆனால் அத்திருமால் விடையாயினபோது காண்பது மட்டுமேயன்றித் தாங்கி வரு மாற்றலும் வந்தது என்பதாம். ஆணவம் முற்பட்டபோது வெளிப்படாத இறைவர் அடிமைத்திறத்தின் முன் வெளிப்படுவர் என்பது குறிப்பு; கருமாலும் ஆற்றல் பெற்ற மழவிடை என்று கூட்டிப் பொருள் கொள்க; உம்மை உயர்வுசிறப்பு. கருமாலும்....கழறாங்கி - இவ்வடி முற்றுமோனை.
திருவல்லாமீ வணங்கி - முதலிற் பதியினை வணங்கி; "திருவல்லம் கண்டு சென்று" (11) என்ற பதிகக் குறிப்பும் காண்க.
பெரும் பிணையல் அணிவித்தார் - பிணையல் - மாலை; பிணைத்தலால் வருவது பிணையல்; பிணையல் என்றதற்கேற்ப அணிவித்தார் என்றார்.
மருவாற்றல் - என்பதும் பாடம்.

1003

திருவல்லம்
திருச்சிற்றம்பலம்

பண் - வியாழக்குறிஞ்சி - 1-ம் திருமுறை

எரித்தவன் முப்புர மெரியன்மூழ்கத், தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்,
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு, தெரித்தவ னுறைவிடந் திருவல்லமே.

(1)

கற்றவர் திருவல்லங் கண்டுசென்று, நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன,
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார், பற்றுவரீவன்பொற் பாதங்களே.

(11)

திருச்சிற்றம்பலம்