[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1275

(வி-ரை) திருவிற்கோலம் - இது கூவம் என வழங்கப்படுகின்றது.
பொருட் பதிகத் தொடைமாலை - பொருள் - உண்மைப் பொருள். பொருட் பதிகம் - உண்மைப் பொருள் காட்டுதலை உட்கிடையாகக் கொண்ட பதிகம். இப்பதிகத்தின் உட்கிடையாவது புரமெரித்தபடியினைப் பாடுதலாம். முப்புரமெரித்தல் - உயிர்களுக்கு மும்மலஞ் சிதைத்தல் என்பர் திருமூல தேவர்.
புரமெரித்தபடி பாடி - படி - நிலைமையினை - படியினை - இரண்டனுருபு விரிக்க. புரமெரித்தல் - பதிகக் குறிப்பும் தலவிசேடமும் பார்க்க.
தக்கோலம் - பதியின் பெயர்; வழக்கில் உள்ளது.
திருவூறல் - இறைவர் திருக்கோயில் கொண்ட இடம்.
விருப்பினுடன் திருவூறல் மேவினார் - திருவூறலின்கண் எப்பொழுதும் விளங்கப் பொருந்தியருளும் இறைவர்; இங்குக் கங்காதரேசுவரர் கோயிலைச் சுற்றிலும் எப்போதும் நீரூற்றுப் பெருகி ஓட இறைவர் மகிழ்ந்து எழுந்தருளும் நிலை குறித்தது. "அமர்ந்த பிரான்" (பதிகம் 7) என்ற குறிப்பு; தலவிசேடம் பார்க்க. ஆண்டகையார் - விருப்பினுடன் - பணிந்தார் - என்று பிள்ளையார்பால் கூட்டி உரைக்கவும் நின்றது கவிநயம்.

1005

திருவிற்கோலம் (கூவம் = கூகம்)
திருச்சிற்றம்பலம்

பண் - காந்தார பஞ்சமம் - 3-ம் திருமுறை

உருவினா ருமையொடு மொன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினா னுறைவிடந் திருவிற் கோலமே.

(1)

சிற்றிடை யுமையொரு பங்க னங்கையில்
உற்றதோ ரெரியின னொருச ரத்தினால்
வெற்றிகொ ளவுணர்கள் புரங்கள் வெந்தறச்
செற்றவ னுறைவிடந் திருவிற் கோலமே.

(2)

கோடல்வெண் பிறையனைக் கூக மேவிய
செடன செழுமதிற் றிருவிற் கோலத்தை
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன்
பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.

(3)

திருச்சிற்றம்பலம்.

பதிகப் குறிப்பு :- உமையொரு பங்கன் - ஒரு சரத்தினால் அவுணர்கள் புரங்கள் வெந்தறச் செற்றவன் - செருவினான் - உறைவிடம் திருவிற்கோலமே.
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) உருவினார் - உருவத்தால் நிறைந்த; செருவினான் - போர்க் கோலத்துடன் நிற்பவர்; இத்தலப் பெயர்க் குறிப்பும் தலவரலாற்றுக் குறிப்பும் காண்க. 2 - 3 - 6 - 7 - 9-வது பாட்டுக்களும் பிறவும் பார்க்க;- (2) வெற்றிகொள் - அதுவரை வெற்றிகொண்டிருந்த; - (3) அதிசயன் - இன்னதென் றறியவாராத பெருந்தன்மைகளை யுடையவர்; ஐயன் - பெரியவர்; தலவிசேடம் பார்க்க; - (4) விதைத்தவன் - வித்தை புகட்டியவன்; விதை - பகுதி; உளதாதற் பொருட்டு வித்திடுதல்; முனிவர்க்கு அறம் முதலியவற்றை உளவாக்கியவன்; - (5) மூவர் - அயன், அரி, அரன்; கூகம் - பதியின் பெயர்;