|
| சேடர் பயில் - சேடர் - பெருமையுடையோர்; பெருமையாவது "மெய்ம்மை நெறி வழுவாத விழுக்குடிமைச் செம்மை"; சேடர் - அறிவுடையோர் என்றலுமாம். |
| திருப்பதியைத் தொழுது - உட்புகாமையின் புறத்திருந்தபடியே பதியைத் தொழுது. |
| தொழுது போற்றி - என்பதும் பாடம். |
| 1011 |
| 2910. (வி-ரை) திருப்பாசூர் அணைந்தருளி - திருப்பாசூர் மருங்கு சென்ற (2909) பிள்ளையார் அந்நகரிற் சேர்ந்து. |
| புராதனர் - "முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளா" யுள்ளவர். |
| வேய் இடங்கொண்ட புனிதர் - வேய் - மூங்கில்; சுவாமி இப்பதியில் மூங்கிலடியில் முளைத்து எழுந்தருளியுள்ளார் என்பது தலவிசேடமாதலின் அதுபற்றிக் கூறியருளினார். பாசு - மூங்கில். அதுபற்றிப் பாசூர் என்ற ஊர்ப்பெயரும் போந்ததென்பர். |
| முகிழ்த்தல் - மயிர்ப்புளகம் கொள்ளுதல். |
| அருட்கருணைத் திருவாளன் - அருட்கருணை - ஒருபொருட் பன்மொழி; மிகுதி குறித்தது; திரு - அருட்டிரு; அழியாத முத்தித்திரு என்றலுமாம். |
| நாமம் "சிந்தை யிடையார்" என்று - சிந்தையிடையார் - தலையின்மிசையார் - செஞ்சொல்லார் - என்மனத்துள்ளார் - மைந்தர் - மணாளர் - முதலியனவாகப் பதிகத்துக் கூறப்படுவன எல்லாம் அவரது திருநாமங்களேயாகி, அவற்றை எடுத்துச் சொல்லிப் போற்றியது பதிகக் குறிப்பு என்றவாறாயிற்று. |
| இசைப் பதிகம் - இசையுடன் கூடிய பதிகம். இசை - புகழ் என்றலுமாம்; இசைப்பா என்புழிப்போல. |
| 1012 |
| திருப்பாசூர் |
| திருச்சிற்றம்பலம் |
| பண் - காந்தாரம் - 2-ம் திருமுறை |
| சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார் மைந்தர் மணாளர் என்ன மகிழ்வா ரூர்போலும் பைந்தண் மாதவிச் சோலை சூழ்ந்த பாசூரே. | |
| (1) |
| ஞான முணர்வான் காழி ஞான சம்பந்தன் தேனும் வண்டு மின்னிசை பாடுந் திருப்பாசூர்க் கானம் முறைவார் கழல்சேர் பாட லிவைவல்லார் ஊன மிலரா யும்பர் வானத் துறைவாரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு : - அருட்கருணைத் திருவாள னாமஞ் "சிந்தை யிடையார்" என்பது முதலியனவாகப் போற்றியது என 2910-ல் ஆசிரியர் காட்டியருளினர். |
| பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) சிந்தை இடையார் - சிந்தையினை இடமாகக் கொண்டுள்ளவர். இடையார் - மிசையார் - சொல்லார் - முதலியனவாக இப்பதிகப் பாட்டுக்கள்தோறும் வருவனவெல்லாம் இறைவரது பேரருட்டன்மகளைப் பற்றி எடுத்துக் கூறும் வகையால் அடியார்கள் சொல்லிப் பரவு நாமங்களாம் என்றவாறு; சிந்தையிடையார்...தலையின்மிசையார் - "சிந்தையி னுள்ளுமென் சென்னியி னுஞ் |