[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1327

இருநிதிப் பெருஞ் செல்வம் - இருநிதி - முன்கூறிய எவ்வகை நிதித் திறங்களும். பெருஞ் செல்வம் - அவற்றுடன் மனை - விளைநிலம் - முதலியனவும். "தேடிய மாடு நீடு செல்வமும்" (470).
எல்லையில் வளத்தார் - வளம் - நிதி, செல்வம், நாணயம், பொறுப்பு முதலிய எல்லாவற்றாலும் வரும் உலக அனுபவ நிலைகளின் தொகுதி; எல்லையில் - அளவில்லாத. வளத்தார் - வளத்தை உடையவராகி; எச்சம்; வளத்தார் - சிவநேசரென்பார் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.
மனைப்படப் படிக்கவர் நிரப்பும் - என்பதும் பாடம்.

1034

2933. (வி-ரை.) தம்மை...செயும் - உள்ளவாறு அறிதலாவது இறைவராகிய பதி முழுமுதல்வர் என்றும், உயிர்களாகிய பசுக்கள் எல்லாம் அவருக்கு அடிமைகள் என்றும், அடிமைசெய்து பாசங்களினீங்கி வீடுபேறடைவதே உயிர்கள் அடையும் உறுதிப் பொருளாவது என்றும், அதன்பொருட்டே மானிடப் பிறவியும் புவனபோகங்களும் தரப்பட்டன வென்றும் ஞானநூல்களுள் உரைக்கப்பட்ட உண்மைகளை ஆரவார நீர்மையிலன்றி உள்ளபடி உணர்ந்து அவ்வழியிலே ஒருகாலும் வழுவாது ஒழுகும் வகையால் அரனுக்கு அடிமை செய்கின்ற என்பதாம்.
சங்ககரன் - இன்பஞ் செய்பவன்; இவ்பெயராற் கூறினார், உள்ளவாறறிந்தவர்கள் யாவரும் பிறவி துன்பமுடையதென் றுணர்வார்களாதலின் அதனை நீக்கி இன்பஞ்செய்வோனை அடைவது இயல்பாமென்ற குறிப்புத் தருவதற்கு. இவ்வாறே "அளவில் செல்வத்து வளமையி னமைந்தார்...அடிமைத் திறத்தின் மிக்கவ" ராகிய முதல் வணிகர்பெருமானார் இயற்பகையாரும் "முன்கொடுக்கு மியல்பி னின்றவர்" என்றது (405) காண்க.
விருப்புடன் மிக்கதோர் அன்பால் - அன்பு - அடிமைசெய்தற்கு வேண்டப்படும் இன்றியமையாத அடிப்படை; விருப்பு - அது செய்தற்கண் சேறும் மன எழுச்சி.
பொய்ம்மை நீக்கி மெய்ப்பொருளிது எனக்கொளும் உள்ளச் செம்மையே புரி - பொய்ம்மை -உலகப் பற்றாகிய நிலைகளின் மயக்கம்; "பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும் மருள்" (குறள்).
மெய்ப்பொருள் இது - இறைவன் பற்றாகிய நிலைகளின் சார்பு. "சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின்"(குறள்).

இது எனக்கொளும் உள்ளச் செம்மையே புரி - முன் கூறிய துணிபை உள்ளத்தில் முடிவாகத் துணிந்துகொண்டமையால் மேற்கொண்ட சைவ நன்னெறியில் ஒழுக்கத்திலே இடைவிடாது நினைந்து நின்ற.

சிவநேசர் என்பார் - "விருப்புடன்...மனத்தினார்" என்றது சிவநேர் என்ற பெயர் அவருக்குக் காரண இடுகுறியாயமைந்த நிலையை விளக்கியவாறு என்பார் - எனப்படுபவர்; படு விகுதிதொக்கு வந்தது, "இல்வாழ்வா னென்பான்" (குறள்) என்புழிப்போல.
தன்மை....செய்யும் - என்றது காரணமும், "விருப்புடன்.....புரி" என்றது அதன் விளைவாகிய காரியமும் ஆம். சிவநேசர் - பெருவணிகர் தோன்றலாரின் பெயர்.
விருப்பினின் - நீக்கிய - என்பனவும் பாடங்கள்.

1035