[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1313

உள்ளதென்பர்; இருடிகேசம் (ரிஷிகேஷ்) நிலையத்தினின்றும் 146 நாழிகையளவிலும் அடையலாகும் என்பர்.
2925. (வி-ரை.) கோகரணம் பாடி - பதிகம் "கோகரணமே" என்று பதியினைப் பற்றியது என்பது குறிப்பு.
பருப்பதத்தின் கொள்கை - இப்பதியின் தன்மைகளையும் வழிமொழிகளையும் பற்றிய பதிகக் குறிப்புப்பெறக் கொள்கை என்றார்; நம்பிகள் பதிகமும், 1614-ல் தலவிசேடமும் (III-பக். 526) பார்க்க.
மற்றிருவர் தானம் போற்றிய சொன்மலர் மாலை பிறவும் பாடி - இவை இன்னவென் றறியக்கூடவில்லை; வடநாட்டில் உள்ள வாரணாசி முதலிய பதிகளையும் குடக்கில் உள்ள ஏனைப் பதிகளையும் பாடிய பதிகங்கள் போலும்; இவை கிடைத்தல!
நீற்றினணி கோலத்துத் தொண்டர் - "திசையனைத்து நீற்றினொளி தழைப்ப" (2917); இவர்களைப்பற்றி முன் (2916) உரைத்தவை பார்க்க. புனிதமாகும் - ஆகும் - செய்யும்; ஆக்கும் எனப் பிறவினைப் பொருளில் வந்தது.
நெடிது - மிகவும்; நீண்டகாலம் என்றலுமாம்.
நிலவுகின்றார் - நிலவுதல் - தங்கியிருத்தல். ஆளுடைய அரசுகளும் இம்மலையிற்றிருப்பணியாயின செய்து தங்கியருளினார் (1612) என்பதும் இங்கு நினைவுகூர்க. நிலவுகின்றாராய்ப் போற்றி - உன்னி - மீள்வார் - போந்தார் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. நிலவுகின்றார் - முற்றெச்சம்.
பாடி மகிழ்ந்திறைவர் தானம் - என்பதும் பாடம்.

1027

திருக்கோகரணம்
திருச்சிற்றம்பலம்

திருவிராகம்

பண் - சாதாரி -3-ம் திருமுறை

என்றுமரி யானயல வர்க்கியலி சைப்பொருள்க ளாகியயெனதுள்
நன்றுமொளி யானொளிசி றந்தபொன்மு டிக்கடவு ணண்ணுமிடமாம்
ஒன்றியம னத்தடியர் கூடியிமையோர்பரவு நீடரவமார்
குன்றுகணெ ருங்கிவிரி தண்டலைமி டைந்துவளர் கோகரணமே.

(1)

கோடலா வீனும் சாரன்மு னெருங்கிவளர் கோகரணமே
ஈடமினி தாகவுறை வானடிகள் பேணியணி காழிநகரான்
நாடியத மிழ்க்கிளவி யின்னிசைசெய் ஞானசம் பந்தன்மொழிகள்
பாடவல பத்தரவ ரெத்திசையு மாள்வர்பர லோகமெளிதே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு:- எனதுள் நன்றும் ஒளியான் - ஒளிசிறந்த பொன்முடிக் கடவுளாகிய சிவன் நண்ணுமிடம் கோகரணமே.
பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) அயலவர்க்கு என்றும் அரியான் என்க. அரியான் - அறிதற்கரியவன். இயலிசை....ஒளியான் - இயலு மிசையுமாகிய தமிழின் வரும் பொருள்களாகி என்னுள்ளே நின்று நன்கு காட்டியருளும் ஞானவொளியானவன்; ஒளி...கடவுள் - பேரொளிப் பிழம்பாகிய திருமேனியுடையவர்; பேரொளியாகக் கோடிசூரியப் பிரகாசமுடையவராகத் தியானித்தல்வேண்டுமென்பது சிவாகமங்களின் விதி. "ஓவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி" (முருகு); நீடரவமார் குன்றுக ணெருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர் - நாட்டுச் சிறப்பினை உள்ளபடி தன்மையணி