1328திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

2936
கற்றை வார்சடை முடியினா ரடியவர் கலப்பில்
உற்ற செய்கையி லொழிவின்றி யுருகிய மனமும்
பற்றி லாநெறிப் பரசம யங்களைப் பாற்றுஞ்
செற்ற மேவிய சீலமு முடையராய்த் திகழ்வார்,

1036

2937
ஆன நாள்செல வருமறைக் கவுணியர் பெருமான்
ஞான போனக நுகர்ந்தது நானில முய்ய
ஏனை வெஞ்சமண் சாக்கிய மிழித்தழித் ததுவும்
ஊன மில்புக ழடியர்பாற் கேட்டுவந் துளராய்,

1037

2928
செல்வ மல்கிய சிரபுரத் தலைவர்சே வடிக்கீழ்
எல்லை யில்லதோர் காதலி னிடையறா வுணர்வால்
அல்லு நண்பக லும்பிந் தவரருட் டிறமே
சொல்ல வுஞ்செயல் கேட்கவுந் தொழிலின ரானார்.

1038

2934. (இ-ள்.) கற்றை...மனமும் - கற்றையாகிய நீண்ட சடையினையுடைய முடியவரது அடியார்களுடன் கூடிய கூட்டத்துடன் பொருந்திய செய்கையில் இடைவிடாது உருகிய மனத்தினையும்; பற்றிலா....சீலமும் - சிவபெருமானிடத்தில் அன்பு இல்லாத நெறிகளையுடைய பரசமயங்களை நீக்கும் செற்றம் பொருந்திய நல்லொழுக்கத்தினையும்; உடையராய்த் திகழ்வார் - கொண்டுடையவராகிய விளங்குவாராய்,

1036

2935. (இ-ள்.) ஆன நாள் செல - அவ்வாறாயின நாள்கள் பல கழிய; அருமறை...இழித்தழித்ததுவும் -அரிய வேததியராய்க் கவுணியர் குலத் தலைவராகிய பிள்ளையார் சிவஞான அமுதுண்டருளியதனையும்
உலகமுய்தற் பொருட்டுப் புறச் சமயங்களாகிய கொடிய சமண் சாக்கியச் சமயங்களின் கீழ்நிலையை விளக்கி இழித்து எடுத்துக் காட்டும் வகையாலே அவை அடைந்திருந்த முதன்மையை ஒழித்ததனையும்; ஊனமில்...உவந்துளராய் - குற்றமில்லாத புகழினையுடைய அடியார்கள் வந்து சொல்லக் கேட்டு மகிழ்ந்தனராகி;

1037

2936. (இ-ள்.) செல்வ மல்கிய...உணர்வால் - அருண்ஞானச் செல்வம் நிறைந்த சீகாழித் தலைவராகிய பிள்ளையாரது திருவடிகளில் அளவில்லாத ஒப்பற்ற பெருவிருப்புடன் இடையறாத அன்புபூண்ட வுணர்ச்சியினாலே; அல்லும்...ஆனார் - இரவும் பகலும் அடைவிடாது நினைந்துகொண்டு அவரது அருளின் தன்மைகளையே தாம் வாக்கினாற் புகழ்ந்து பாராட்டுதலும் அருட்செயல்களை அன்பர்களிடம் கேட்பதுமாகிய இவையே தமது வாழ்க்கைக்குரிய தொழில்களாக மேற்கொண்டவராயினார்.

1038

இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபுகொண் டுரைக்கநின்ற; முன் ஒரு பாட்டைத் தனிமுடிபாகக் கொண்டுரைத்து, ஏனை யிரண்டினையும் ஒருமுடிபாக்கியுரைக்கினு மிழுக்கில்லை. பொருட்டொடர்பும் சொன்முடிபும் பற்றி இவ்வாறுரைக் கப்பட்டது.
2934. (வி-ரை.) அடியவர் கலப்பில் உற்ற செய்கையில் - அடியார் கூட்டத்திற் பொருந்தும் தன்மையில். செய்கை - இங்குத் தன்மை என்றற பொருளில் நிகழ்ச்சி என்றலுமாம்.