1336திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

ஓராண்டு - தளர்நடை
2943
திங்க டோறுமுன் செய்யுமத் திருவளர் சிறப்பின்
மங்க லம்புரி நல்வினை மாட்சியிற் பெருக
அங்கண் மாநக ரமைத்திட, வாண்டெதி ரணைந்து
தங்கு பேரொளிச் சீறடி தளர்நடை பயில;

1045

ஏழு ஆண்டு
2944
தளரு மின்னினங் குரமெனத், தமனியக் கொடியின்
வளரி ளந்தளிர்க் கிளையென, மணிகிள
ரொளியின்
அளவி லஞ்சுடர்க் கொழுந்தென, வணைவுறும் பருவத்
திளவ னப்பிணை யனையவர்க் கேழியாண் டெய்த.

1046

கழல் அம்மனை பந்து
2945
அழகின் முன்னிளம் பதமென, வணிவிளக் கென்ன,
விழவு கொண்டெழும் பேதைய ருடன்விளை யாட்
கழலொ டம்மனை கந்துக மென்றுமற் றினைய
மழலை மென்கிளிக் குலமென மலையிடை யாடி,

1047

சிற்றில் சிறுசோறு ஊசல்
2946
பொற்றொ டிச்சிறு மகளிரா யத்தொடும் புணர்ந்து
சிற்றின் முற்றவு மிழைத்துட னடுந்தொழிற் சிறுசோ
றுற்ற வுண்டிகள் பயின்றொளி மணியூச லாடி
மற்று மின்புறு வண்டலாட் டயர்வுடன் வளர.

1048

2947
தந்தை யாருமத் தளிரிளங் கொம்பனா டகைமை
இந்த வையகத் தின்மையா லின்புறு களிப்பு
வந்த சிந்தையின் மகிழ்ந்து, "மற் றிவண்மணம் பெறுவான்
அந்த மில்லென தருநிதிக் குரிய"
னென் றறைந்தார்.

1049

2943. (இ-ள்.) திங்கள் தோறும்......அமைத்திட - மாதந்தோறும் முன் செய்யப்படும் அந்தச் செல்வம் வளரும் மங்கலங்களாகிய சடங்குகளும் ஏனை நல்வினைகளும் மாண்பு பொருந்தப் பெருகும்படி அங்குப் பெரிய நகரத்தினர்கள் அமைவுபடுத்தியிட; ஆண்டெதி ரணைந்து.....பயில - ஓராண்டு நிறைந்து தங்கும் பேரொளியினையுடைய சிற்றடிகள் தளர்நடை பயில;

1045

2944. (இ-ள்.) தளரும்...அங்குரமென - துவள்கின்ற மின்னலின் முளைபோலவும்; தமனியக் கொடியென....கிளையின் - பொன்னலாகியதோர் கொடியினது வளர்கின்ற இளந் தளிரினது கிளைபோலவும்; மணிகிளர்......கொழுந்தென - இரத்தின மணிகளினின்றும் கிளர்கின்ற ஒளியினது அளவுட்படாத அழகிய சுடர்க்கொழுந்து போலவும்; அணைவுறும் பருவத்து - சார்கின்ற பருவங்களிலே; இள அ(ன்)னப் பிணை யனையவர்க்கு ஏழ்யாண்டு எய்த - இளவன்னப்பேடை போலும் அவருக்கு ஏழு ஆண்டுகளின் பருவம் பொருந்த,

1046

2945. (இ-ள்.) அழகின்.....விளக்கென்ன - அழகு என்றதொரு பொருளின் முதலிற் பெறப்படும் இளம்பத மென்னவும், அணிவிளக்கு என்னவும் கூறும்படி வளர்ந்து; விழவு...பேதையருடன் - விழக்கொண்டு கூடி எழுகின்ற சிறுமியருடனே கூடி; விளையாட்டில்....ஆடி - விளையாடல் பயில்வதில் கழல் - அம்மானை - பந்து என்று இன்னவற்றை மழலை ததும்பும் நிலை மெல்லிய கிளிக்கூட்டங்கள் போலப் பாடி எழ மனையினுள்ளே ஆடி,

1047