| யாதலினால்" (1728) எனவரும் அம்மையார் புராண வரலாறு ஈண்டுச் சிந்திக்கற்பாலது. ஆண்டுத் தனதத்தனார் போலவே சிவநேசரும் பெருங்குடி வணிகராதலும் கருதுக. |
| மற்று இவள் - முன் கூறியபடி இந்த வையகத்தில் ஒப்புவே றில்லாத் தகைமையுடைய இவள் என்க. மற்று - வேறாகிய என்பது. இனி, இவள் மணம்பெறுவான் உலகில் ஒருவனுமல்லனாம்; மற்று எல்லா உயிர்களுக்கு முயிர்நாயகனாகிய சிவனேயாம். "தேனமர் கோதையுஞ் சிவத்தை மேவினாள்" (3015) என்றபடி பிற உயிர்களின் வேறாகிய சிவனே என்ற குறிப்புமாம்; இனி, இவள் இவ்வுடலத்தினுள் மணத்தால் நாயகனையடையும் நிலையின்றிப் பின்னர்ப் பிள்ளையார் சடையவர் கருணை காண்வர வுற்பவித்தபின், அந்நிலையில் சிவமணம் பெறுவாள் என்ற குறிப்த்தரவும் நின்றது. அவரே எல்லாவற்றையும் உடையமையாக உடையவர் என்பது. |
| அறைந்தார் - யாவருமறியப் பறைசாற்றியதுபோல வெளிப்பட மொழிந்தனர் என்பது அறை - என்றதன் றொனி. |
| தளரிளங் - என்பதும் பாடம். |
| 1049 |
2948 | ஆய நாள்களி லமண்பயில் பாண்டிநா டதனைத் தூய ஞானமுண் டருளிய தோன்றலா ரணைந்து மாய வல்லமண் கையரை வாதில்வென் றதுவும், மேய வெப்பிடர் மீனவன் மேலொழித் ததுவும், | |
| 1050 |
2949 | நெருப்பி லஞ்சினார் தங்களை நீரிலொட் டியபின் மருப்பு நிள்கழுக் கோலின்மற் றவர்களே றியதும் விருப்பி னாற்றிரு நீறுமீ னவற்களித் தருளிப் பொருப்பு வில்லியார் சாதனம் போற்றிவித் ததுவும், | |
| 1051 |
2950 | இன்ன வாறெலா மறிந்துளா ரெய்தியங் கிசைப்பச், சொன்ன வர்க்கெலா மிருநிதி தூசுட னளித்து, மன்னு பூந்தராய் வள்ளலார் தமைத்திசை நோக்கிச், சென்னி மேற்கரங் குவித்துவீழ்ந் தெழுந்துசெந் நின்று, | |
| 1052 |
2951 | சுற்ற நீடிய கிளையெலாஞ் சூழ்ந்துடன் கேட்பக் "கற்ற மாந்தர்வாழ் காழிநா டுடையவர்க் கடியேன் பெற்றெ டுத்தபூம் பாவையும் பிறங்கிய நிதியும் முற்று மென்னையுங் கொடுத்தனன் யா" னென்று மொழிந்தார். | |
| 2948. (இ-ள்.) ஆய நாள்களில் - முன்கூறிய அவ்வாறாகிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த காலத்தில்; அமண் பயில்...அணைந்து - சமணர்கள் மிக்கிருந்த பாண்டி நாட்டினைத் தூய ஞானபோனக முண்டருளிய பிளளயார் சென்றணைந்து; மாய...வென்றதுவும் - வஞ்சனையில் வல்ல அமணர்களாகிய கீழ்மக்களை வாதில் வென்றதுவும்; மேய வெப்பு...ஒழித்ததுவும் - வந்து பொருந்திய வெப்பு நோயின் துன்பத்தினைப் பாண்டியனது உடலினின்றும் நீக்கியதுவும்; |
| 1050 |
| 2949. (இ-ள்.) நெருப்பில்.....ஒட்டியபின் - நெருப்பின் வாதத்திற் றோற்று அஞ்சிய அவ்வமணர்களை நீரின் வாதத்தினில் ஒட்டி வென்றதன் பின்; மருப்பு..... |