1358திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

பணிந்திருந்த நல்வார்த்தை - "ஒற்றிநகர் காதலித்தங் கினிதுறைந்தார்" (2930) என்று முன் கூறிவிடுத்த செய்தி. இதனைச் சரித வரலாற்றுத் தொடர்ச்சிபெற எடுத்துக்காட்டிய கவிநயமும் கண்டுகொள்க.

1069

2968
சொன்ன வர்க்கெலாந் தூசொடு காசுபொன் னளித்தே
யின்ன தன்மைய ரெனவொணா மகிழ்சிறந் தெய்தச்
சென்னி வாழ்மதி யார்திரு வொற்றியூ ரளவுந்
துன்னு நீணடைக் காவணந் துகில்விதா னித்து,

1070

2969
மகர தோரணம் வண்குலைக் கமுகொடு கதலி
நிகரில் பல் கொடித் தாமங்க ளணிபெற நிரைத்து
நகர நீண்மறு கியாவையு நலம்புனை யணியாற்
புகரில் பொன்னுல கிழிந்ததா மெனப்பொலி வித்தார்;

1071

2970
இன்ன வாறணி செய்துபல் குறைவறுப் பேவி
"முன்ன மொற்றியூர் நகரிடை முத்தமிழ் விரகர்
பொன்ன டித்தலந் தலைமிசைப் புனைவ"னென் றெழுவார்
அந்ந கர்ப்பெருந் தொண்டரு முடன்செல வணைந்தார்.

1072

2968. (இ-ள்.) சொன்னவர்க்கெலாம்......அளித்தே - முன்கூறிய நல்வார்த்தையினை வந்து சொன்னவர்களுக்கெல்லாம் சிவநேசர் தூசும் காசும் பொன்னும் அன்போடு கொடுத்தே; இன்ன...எய்த - இன்ன தன்மைதான் பெற்றார் என்று சொல்லமுடியாத மகிழ்ச்சி மேலோங்க; சென்னி....விதானித்து - தலையினில் வாழ்வுபெறும் மதியினைத் தாங்கிய சிவபெருமான் எழுந்தருளிய திருவொற்றியூர் அளவும் நெருங்கும் நீண்ட நடைக்காவணமிட்டுத் துகிலால் விதானமும் கட்டி,

1070

2969. (இ-ள்.) மகர தோரணம்...நிரைத்து - மகர தோரணங்களும், வளப்ப மிக்க குலைக் கமுகுகளும், வாழைகளும், ஒப்பற்ற பல கொடிகளும் மாலைகளும் என்றிவற்றை அழகு பொருந்த வரிசையாக அமைத்து; நகர நீண்மறுகு....பொலிவித்தார் - நகர முழுமையும் உள்ள நீண்ட தெருவுகள்எல்லாவற்றையும் நலம்பொருந்தச் செய்த அலங்காரங்களினால் குற்றமில்லாத தேவலோகமே கீழிறங்கியதாம் என்று சொல்லும்படி அழகு செய்தனராய்,

1071

2970. (இ-ள்.) இன்னவாறு...ஏவி - இவ்வாறெல்லாம் அலங்காரங்களைச் செய்து பலவகையாலும் குறைகளில்லாமற் செய்யும் ஏவலாட்களை ஏவி; முன்னம்...எழுவார் - முன்னர்ச்சி சென்று திருவொற்றியூர் நகரிலே முத்தமிழ் விரகராகிய பிள்ளையாரது பொன்னார்ந்த திருவடிகளை வணங்கித் தலைமேற் சூட்டிக்கொள்வேன் என்று எழுவாராகி; அந்நகர்....அணைந்தார் - அத் திருமயிலாபுரியில் வாழும் பெருந் தொண்டர்களும் தம்முடன் செல்லத் திருவொற்றியூரினைத் நோக்கிச் சென்றானர்.

1072

இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
2968. (வி-ரை.) சொன்னவர்க்கெலாம்...அளித்தே - முன்னர்ச் "சொன்னவர்க்கெலா மிருநிதி தூசுட னளித்து" (2951) என்றுரைத்தவை பார்க்க.