1360திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

2970. (வி-ரை.) பல் குறைவறுப்பு ஏவி - குறைவறுப்பு - குறைவுகள் நேராதபடி முன்னரே நாடி வேண்டுவனவற்றைச் செய்தல்; குறைவு - அறுத்தல் - குறைக ளெவையும் இல்லையாகச் செய்தல்; "பாண்டிமா தேவியார் மெய்க்குலச் சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்ல" (2421); "அத்தனிமுதற் றொண்டர்தாமே யாவையுங் குறைவறுத்திட" (2421).
முன்னம் - பிள்ளையார் இங்கெழுந்தருளு முன்னரே; செய்தி கேட்டதும் முதல் வேலையாக.
அடித்தலம் தலைமிசைப் புனைவன் - திருஅடிகளில் முடி பொருந்த வணங்குவேன்; அவ்வாற்றால் அடிகளை முடிமிசைச் சூடிக்கொள்வேன்; புனைதல் - அணியாகக் கொள்ளுதல்.
எழுவார் - எழுவாராகி; எழுதல் - மேற்செல்லுதல்.
பெருந் தொண்டர் - அன்பின் மிகுந்த திருத்தொண்டர்கள்.

1072

2971
ஆய வேலையி லருமறைப் புகலியர் பிரானும்
மேய வொற்றியூர் பணிபவர் வியனக ரகன்று
காயல் சூழ்கரைக் கடன்மயி லாபுரி நோக்கித்
தூய தொண்டர்தங் குழாத்தொடு மெதிர்வந்து தோன்ற,

1073

2972
மாறில் வண்பெரு வணிகருந் தொண்டரு மலர்ந்த
நீறு சேர்தவக் குழாத்தினை நீளிடைக் கண்டே
"ஆறு சூடினார் திருமக னாரணைந் தா"ரென்
றீறி லாததோர் மகிழ்ச்சியி னால்விழுந் திறைஞ்ச,

1074

2973
காழி நாடருங் கதிர்மணிச் சிவிகைநின் றிழிந்து
சூழி ரும்பெருந் தொண்டர்முன் றொழுதெழுந் தருளி
வாழி மாதவர் வணிகர்செய் திறஞ்சொலக் கேட்டே
ஆழி சூழ்மயி லாபுரித் திருநக ரணைந்தார்.

1075

2971. (இ-ள்.) ஆய வேலையில் - அவ்வாறாகிய வேளையில்; அருமறை.....அகன்று - அரிய மறைகளின் தலைவராகிய பிள்ளையாரும் பொருந்தி யிருந்த திருவொற்றியூரினைப் பணிபவராய் அப் பெருநகரினை நீங்கி; காயல்....தோன்ற - உப்பளங்கள் சூழ்ந்த கரைக்கடலின் றுறையினையுடைய திருமயிலாபுரியைநோக்கித் தூய்மையுள்ள திருத்தொண்டர்களின் திருக் கூட்டத்தோடும் எதிரிலே வந்து தோன்ற,

1073

2972. (இ-ள்.) மாறில்....தொண்டரும் - ஒப்பற்ற வண்மையுடைய பெருவணிகராகிய சிவநேசரும் அவருடன் வந்த பெருந் தொண்டர்களும்; மலர்ந்த......கண்டே - ஒளி விளங்கிய திருநீறு புனைந்து தவத்தையுடைய அடியார்களின் திருக்கூட்டத்தினை நெடுந்தூரத்திற் கண்டே; ஆறு.....என்று - கங்கையைச் சூடிய சிவபெருமானது திருமகனாராகிய பிள்ளையார் வந்தணைந்தனர் என்றே கொண்ட; ஈறிலாததோர்.....இறைஞ்ச - எல்லையில்லாத ஒப்பற்ற மகிழ்ச்சியினாலே நிலத்தில் விழுந்து வணங்க,

1074

2973. (இ-ள்.) காழி நாடரும்.....இழிந்து சீகாழித் தலைவராகிய பிள்ளையாரும் ஒளி பொருந்திய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி; சூழ்.....எழுந்தருளி - சூழ்ந்த