| நாவின் வாய்மையில் - என்பதும் பாடம். |
| 1078 |
2977 | போற்றி மெய்யருட் டிறம்பெறு புரிவுடன் வணங்கி நீற்றின் மேனியினிறைமயிர்ப் புளகங்க ணெருங்கக் கூற்ற டர்த்தவர் கோயிலின் புறம்புபோந் தருளி யாற்று மின்னருள் வணிகர்மேற் செலவருள் செய்வார், | |
| 1079 |
2978 | "ஒருமை யுய்த்தநல் லுணர்வினீ! ருலகவ ரறிய அருமை யாற்பெறு மகளென்பு நிறைத்தவக் குடத்தைப் பெரும யானத்து நடம்புரி வார்பெருங் கோயில் திரும திற்புற வாய்தலிற் கொணர்"கென்று செப்ப, | |
| 1080 |
2979 | அந்த மில்பெரு மகிழ்ச்சியா லவனிமேற் பணிந்து, வந்து தந்திரு மனியினின் மேவி,யம் மருங்கு கந்த வார்பொழிற் கன்னிமா டத்தினிற் புக்கு வெந்த சாம்பலோ டென்புசேர் குடத்தைவே றெடுத்து, | |
| 1081 |
2980 | மூடு பன்மணிச் சிவிகையுட் பெய்துமுன் போத, மாடு சேடிய ரினம்புடை சூழ்ந்துவந் தணைய, ஆடன் மேவினார் திருக்கபா லீச்சர மணைந்து நீடு கோபுரத் தெதிர்மணிச் சிவிகையை நீக்கி, | |
| 1082 |
2981 | அங்க ணாளர்த மபிமுகத் தினிலடி யுறைப்பான் மங்கை யென்புசேர் குடத்தினை வைத்துமுன் வணங்கப், பொங்கு நீள்புனற் புகலிகா வலர்புவ னத்துத் தங்கி வாழ்பவர்க் குறுதியா நிலைமைசா திப்பார், | |
| 1083 |
2982 | மாட மோங்கிய மயிலைமா நகருளார், மற்றும் நாடு வாழ்பவர், நன்றியில் சமயத்தி னுள்ளோர் மாடு சூழ்ந்துகாண் பதற்குவந் தெய்தியே மலிய, நீடு தேவர்க ளேனையோர் விசும்பிடை நெருங்க, | |
| 1084 |
2983 | தொண்டர் தம்பெருங் குழாம்புடை சூழ்தரத் தொல்லை அண்டர் நாயகர் கோபுர வாயினே ரணைந்து வண்டு வார்குழ லாளென்பு நிறைந்தமட் குடத்தைக் கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி. | |
| 1085 |
2984 | "இந்த மாநிலத் திறந்துளோ ரென்பினைப் பின்னும் நந்து நன்னெறிப் படுத்திட நன்மையாந் தன்மை அந்த வென்பொடு தொடர்ச்சியா" மெனவரு ணோக்காற் சிந்து மங்கமங் குடையபூம் பாவைபேர் செப்பி, | |
| 1086 |
2985 | "மண்ணி னிற்பிறந்த தார்பெறும் பயன்மதி சூடும் அண்ண லாரடி யார்தமை யமுதுசெய் வித்தல் | |