1368திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

கண்ணி னாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்
உண்மை யாமெனி லுலகர்முன் வரு"கென வுரைப்பார்,

1087

2986
மன்னு வார்சடை யாரைமுன் றொழுது"மட் டிட்ட"
என்னு நற்பதி கத்தினிற் "போதியோ" வென்னும்
அன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதமவ் வங்கந்
துன்ன வந்துவந் துருவமாய்த் தொக்கதக் குடத்துள்.

1088

2977. (இ-ள்.) போற்றி....வணங்கி - முன் கூறியவாறு துதித்து மெய்யருளின் றிறத்தினைப் பெறுகின்ற இடைவிடாத நினைப்புடனே வணங்கி; நீற்று.....நெருங்க - திருநீறு நிறைந்த திருமேனின முழுதும் நிறைவாக மயிர்ப்புளகம் செறிய; கூற்றடர்த்தவர்....போந்தருளி - இயமனை உதைத்துருட்டிய இறைவரது திருக்கோயிலின் புறத்திலே சென்றருளி; ஆற்றும்...அருள் செய்வார் - செய்கின்ற இனிய அருளானது வணிகரின்மேல் செல்வதாக அருளிச்செய்வாராய்;

1079

2978. (இ-ள்.) ஒருமையுய்த்த நல் உணர்வினீர்! - சிவனடிமைத் திறத்திலே ஒன்றித்து வைத்துச் செலுத்திய உணர்வினையுடையவரே!; உலகவரறிய - உலகத்தவர் எல்லாம் அறியும்படி; "அருமையாற் பெறும்.......கொணர்க" என்று செப்ப - "அரிய தவத்தின் பயனாகப் பெறும் மகளுடைய எலும்பு நிறைத்த அந்தக் குடத்தினைப் பெரிய மயானத்திலே ஆடல் புரிவாராகிய இறைவரது இப் பெருங்கோயிலின் திருமதிற்புறத்துத் திருவாயிலின் முன் கொண்டு வருக" என்று சொல்லியருள,

1080

2979. (இ-ள்.) அந்தமில்....பணிந்து - எல்லையில்லாத பெரிய மகிழ்ச்சியினாலே நிலமேல் விழுந்து வணங்கி; வந்து......மேவி - கோயிலினின்றும் வந்து தமது திருமனையினுள் சேர்ந்து; அம்மருங்கு....புக்கு - அப்பக்கத்தில் மணம்பொருந்திய நீண்ட சோலையினகத்துக் கன்னிமாடத்தினிற் புகுந்து; வெந்த...எடுத்து - மகளுடல் வெந்த சாம்பலோடு எலும்பு பெய்துவைத்த குடத்தினைப் பஞ்சணை முதலியவற்றினின்றும் வேறாக எடுத்து;

1081

2980. (இ-ள்.) மூடு.....போத - பல மணிகளிழைத்த மூடு சிவிகையினுள்ளே அக்குடத்தை இனிதாக அமைத்து வைத்து அதனை முன் போகவிட்டு; மாடு.....அணைய - பக்கத்தில் சேடியர்களின் கூட்டம் புடைசூழ்ந்து வர; ஆடல்.....அணைந்து - திருநடம் புரியும் இறைவரது திருக்கபாலீச்சரத்தினை அணைந்து; நீடு....நீங்கி - நீண்ட திருக்கோபுரத்தின் புறத்தெதிரிலே மணிச்சிவிகையின் திரையினை நீக்கி,

1082

2981. (இ-ள்.) அங்கணாளர்தம்....வணங்க - அங்கணாளரது சந்நிதியின் எதிரிலே அவரது திருவடியிற் பதிந்த அன்பின் உறைப்பினாலே பெண்ணினது எலும்பு கொண்ட அக்குடத்தினை எடுத்துவைத்துத் திருமுன்பு சிவநேசர் வணங்க; பொங்கு....சாதிப்பார் - பொங்கிவரும் பெரு நீர்ச்சிறப்புடைய சீகாழித் தலைவராகிய பிள்ளையார் இவ்வுலகத்தில் தங்கி வாழும் மக்களுக்கு உறுதிப்பொருளாம் நிலைமை யிதுவே என்று நேரே காட்டியருளுவாராய்,

1083

2982. (இ-ள்.) மாடம்...நகருளார் - மாடங்கள் ஒங்கி விளங்கிய மயிலைமாநகரத்தில் வாழ்வார்களும்; மற்றும் நாடு வாழ்பவர் - மற்றும் அந்நாட்டிலுள்ள மக்களும்; நன்றியில் சமயத்தின் உள்ளோர் - நன்றியில்லாத பரசமயத்தில் உள்ளவர்களும்;