| கண்ணி னாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல் உண்மை யாமெனி லுலகர்முன் வரு"கென வுரைப்பார், | |
| 1087 |
2986 | மன்னு வார்சடை யாரைமுன் றொழுது"மட் டிட்ட" என்னு நற்பதி கத்தினிற் "போதியோ" வென்னும் அன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதமவ் வங்கந் துன்ன வந்துவந் துருவமாய்த் தொக்கதக் குடத்துள். | |
| 1088 |
| 2977. (இ-ள்.) போற்றி....வணங்கி - முன் கூறியவாறு துதித்து மெய்யருளின் றிறத்தினைப் பெறுகின்ற இடைவிடாத நினைப்புடனே வணங்கி; நீற்று.....நெருங்க - திருநீறு நிறைந்த திருமேனின முழுதும் நிறைவாக மயிர்ப்புளகம் செறிய; கூற்றடர்த்தவர்....போந்தருளி - இயமனை உதைத்துருட்டிய இறைவரது திருக்கோயிலின் புறத்திலே சென்றருளி; ஆற்றும்...அருள் செய்வார் - செய்கின்ற இனிய அருளானது வணிகரின்மேல் செல்வதாக அருளிச்செய்வாராய்; |
| 1079 |
| 2978. (இ-ள்.) ஒருமையுய்த்த நல் உணர்வினீர்! - சிவனடிமைத் திறத்திலே ஒன்றித்து வைத்துச் செலுத்திய உணர்வினையுடையவரே!; உலகவரறிய - உலகத்தவர் எல்லாம் அறியும்படி; "அருமையாற் பெறும்.......கொணர்க" என்று செப்ப - "அரிய தவத்தின் பயனாகப் பெறும் மகளுடைய எலும்பு நிறைத்த அந்தக் குடத்தினைப் பெரிய மயானத்திலே ஆடல் புரிவாராகிய இறைவரது இப் பெருங்கோயிலின் திருமதிற்புறத்துத் திருவாயிலின் முன் கொண்டு வருக" என்று சொல்லியருள, |
| 1080 |
| 2979. (இ-ள்.) அந்தமில்....பணிந்து - எல்லையில்லாத பெரிய மகிழ்ச்சியினாலே நிலமேல் விழுந்து வணங்கி; வந்து......மேவி - கோயிலினின்றும் வந்து தமது திருமனையினுள் சேர்ந்து; அம்மருங்கு....புக்கு - அப்பக்கத்தில் மணம்பொருந்திய நீண்ட சோலையினகத்துக் கன்னிமாடத்தினிற் புகுந்து; வெந்த...எடுத்து - மகளுடல் வெந்த சாம்பலோடு எலும்பு பெய்துவைத்த குடத்தினைப் பஞ்சணை முதலியவற்றினின்றும் வேறாக எடுத்து; |
| 1081 |
| 2980. (இ-ள்.) மூடு.....போத - பல மணிகளிழைத்த மூடு சிவிகையினுள்ளே அக்குடத்தை இனிதாக அமைத்து வைத்து அதனை முன் போகவிட்டு; மாடு.....அணைய - பக்கத்தில் சேடியர்களின் கூட்டம் புடைசூழ்ந்து வர; ஆடல்.....அணைந்து - திருநடம் புரியும் இறைவரது திருக்கபாலீச்சரத்தினை அணைந்து; நீடு....நீங்கி - நீண்ட திருக்கோபுரத்தின் புறத்தெதிரிலே மணிச்சிவிகையின் திரையினை நீக்கி, |
| 1082 |
| 2981. (இ-ள்.) அங்கணாளர்தம்....வணங்க - அங்கணாளரது சந்நிதியின் எதிரிலே அவரது திருவடியிற் பதிந்த அன்பின் உறைப்பினாலே பெண்ணினது எலும்பு கொண்ட அக்குடத்தினை எடுத்துவைத்துத் திருமுன்பு சிவநேசர் வணங்க; பொங்கு....சாதிப்பார் - பொங்கிவரும் பெரு நீர்ச்சிறப்புடைய சீகாழித் தலைவராகிய பிள்ளையார் இவ்வுலகத்தில் தங்கி வாழும் மக்களுக்கு உறுதிப்பொருளாம் நிலைமை யிதுவே என்று நேரே காட்டியருளுவாராய், |
| 1083 |
| 2982. (இ-ள்.) மாடம்...நகருளார் - மாடங்கள் ஒங்கி விளங்கிய மயிலைமாநகரத்தில் வாழ்வார்களும்; மற்றும் நாடு வாழ்பவர் - மற்றும் அந்நாட்டிலுள்ள மக்களும்; நன்றியில் சமயத்தின் உள்ளோர் - நன்றியில்லாத பரசமயத்தில் உள்ளவர்களும்; |