| புருவங்கள் |
2995 | புருவமென் கொடிகள் பண்டு புரமெரித் தவர்த நெற்றி ஒருவிழி யெரியி னீறா யருள்பெற வுளனாங் காமன் செருவெழுந் தனுவ தொன்றுஞ் சேமவில் லொன்று மாக இருபெருஞ் சிலைகண் முன்கொண் டெழுந்தன போல வேர்ப்ப, |
|
| 1097 |
| கண்கள் |
2996 | மண்ணிய மணியின் செய்ய வளரொளி மேனி யாடன் கண்ணிணை வனப்புக் காணிற் காமரு வதனத் திங்கள் தண்ணளி விரிந்த சோதி வெள்ளத்திற் றகைவி னீள ஒண்ணிறக் கரிய செய்ய கயலிரண் டொத்து லாவ; | |
| 1098 |
| நாசியும் வாயும் |
2997 | பணிவள ரல்குற் பாவை நாசியும் பவள வாயும் நணியபே ரொளியிற் றோன்று நலத்தினை நாடு வார்க்கு மணிநிறக் கோபங் கண்டு, மற்றது வவ்வத் தாழும் அணிநிறக் காம ரூபி யணைவதா மழகு காட்ட; | |
| 1099 |
| காது |
2998 | இளமயி லனைய சாய லேந்திழை குழைகொள் காது வளமிகு வனப்பி னாலும் வடிந்ததா ளுடைமை யாலும் கிளரொளி மகர வேறு கெழுமிய தன்மை யாலும் அளவில்சீ ரனங்கன் வென்றிக் கொடியிரண் டனைய வாக; |
|
| 1100 |
| கழுத்து - முகம் |
2999 | விற்பொலி தரளக் கோவை விளங்கிய கழுத்து மீது பொற்பமை வதன மாகும் பதுமநன் னிதியம் பூத்த நற்பெரும் பணில மென்னு நன்னிதி போன்று தோன்றி அற்பொலி கண்டர் தந்த வருட்கடை யாளங் காட்ட; | |
| 1101 |
| கைகள் |
3000 | எரியவிழ் காந்தண் மென்பூத் தலைதொடுத் திசைய வைத்துத் திரள்பெறச் சுருக்குஞ் செச்சை மாலையோ, தெரியின் வேறு கருநெடுங் கயற்கண் மங்கை கைகளாற் காந்தி வெள்ளம் அருகிழிந் தனவோ வென்னு மதிசயம் வடிவிற் றோன்ற; | |
| 1102 |
| கொங்கை |
3001 | ஏர்கெழு மார்பிற் பொங்கு மேந்திளங் கொங்கை நாகக் கார்கெழு விடத்தை நீக்குங் கவுணியர் கருணை நோக்கால் ஆர்திரு வருளிற் பூரித் தடங்கிய வமுத கும்பச் சீர்கெழு முகிழைக் காட்டுஞ் செவ்வியிற் றிகழ்ந்து தோன்ற; | |
| 1103 |
| உரோமவல்லி |
3002 | காமவே ளென்னும் வேட னேந்தியிற் கரந்து கொங்கை நேமியம் புட்க டம்மை யகப்பட நேரி தாய தாமநீள் கண்ணி சேர்த்த கலாகைதூக் கியதே போலும் வாமமே கலைசூழ் வல்லி மருங்கின்மே லுரோம வல்லி; | |
| 1104 |
| அல்குல் |
3003 | பிணியவிழ் மலர்மென் கூந்தற் பெண்ணமு தனையாள் செம்பொன் அணிவள ரல்கு றங்க ளரவுசெய் பிழையா லஞ்சி மணிகிளர் காஞ்சி சூழ்ந்து வனப்புடை யல்கு லாகிப் பணியுல காளுஞ் சேடன் பணம்விரித் தடைதல் காட்ட; | |
| 1105 |