|
| II திருவான்மியூர் |
| திருச்சிற்றம்பலம் |
| பண் - கௌசிகம் |
| விரையார் கொன்றையினாய் விட முண்ட மிடற்றினனே உரையார் பல்புகழா யுமை நங்கையொர் பங்குடையாய் திரையார் தெண்கடல்சூழ் திரு வான்மி யூருறையும் அரையா வுன்னையல்லா லடை யாதென தரதரவே. | |
| (1) |
| கன்றா ருங்கமுகின் வயல் சூழ்தரு காழிதனில் நன்றா னபுகழால் மிகு ஞானசம் பந்தனுரை சென்றார் தம்மிடர்தீர் திரு வான்மி யூரதன்மேற் குன்றா தேத்தவல்லார் கொடு வல்வினை போயறுமே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு : - திருவான்மியூருறையும் அரைசே! உன்னையல்லா லடையாது எனது ஆதரவே. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு : - திரையார் தெண்கடல் சூழ் - "அரவ நெடுந்திரை வேலை" (3024); அரையா - அரசே; "உன்னையல்லா லடை யாதென தாதரவே" என்பது பாட்டுத்தோறும் வரும் மகுடம்; ஆதரவு - அன்பு; அல்லாலடையாது - எதிர்மறைகள் உறுதி குறித்தன; - (2) இடியார் - இடிபோன்ற முழக்கமுடைய; மணிமுடியாய் - மடியிற்சூடும் பணிபோன்றவரே; - (3) செய் - வயல்கள்; - (4) புரிநூல் - புரிந்த முந்நூல்; நூலுடையவனே. தென்பால் - தென்றிசையில்; - (6) நீதீ - ஓதீ - சேதீ - ஆதீ - நான்கும் பெயர்கள்; விளியுருபேற்று நீண்டன. சேதீ - சேதித்தவரே; - (7 - 8) ஆனாய் - எல்லாமானாய்; உரிமையானவரே; இடபம் - பசுபதியே - என்றலுமாம் - (11) இடர் தீர் - மருந்தாய்ப் பிறவிப்பிணி தீர்க்கும். |
| தல விசேடம் : - திருவான்மியூர் - III - பக்கம் - 561 பார்க்க. |
3024 | சென்னியிள மதியணிந்தார் மருவுதிரு விடைச்சுரத்து மன்னுதிருத் தொண்டர்குழா மெதிர்கொள்ள வந்தருளி நன்னெடுங்கோ புரமிறைஞ்சி யுள்புகுந்து நற்கோயில் தன்னைவலங் கொண்டணைந்தார் தம்பிரான் றிருமுன்பு. | |
| 1126 |
| (இ-ள்) சென்னி...வந்தருளி - சிரத்திலே இளம்பிறையினைச் சூடிய இறைவர் எழுந்தருளிய திருவிடைச்சுரத்தில் நிலையாக வாழும் திருத்தொண்டர் கூட்டம் எதிர்கொள்ள வந்தருளி; நன்னெடுங் கோபுரம்... திருமுன்பு - நன்மை தருகின்ற நீண்ட கோபுரத்தினை வணங்கித் திருக்கோயிலினுள்ளே புகுந்து நன்மை செய்யும் அத்திருக் கோயிலினை வலமாகச் சூழ்ந்து வந்து தமது பெருமான் றிருமுன்பு வந்தணைந்தருளினர் (பிள்ளையார்). |
| (வி-ரை) நன்னெடும் கோபுரம் - நற்கோயில் - கோபுரம் தூலலிங்கம் எனப்பட்டுத் தூரத்தே காட்சியளித்து அழைத்து வழிபடச் செய்து உய்தி தருதலால் நன்னெடும் என்றார். நற்கோயில் - வந்தடைந்தார்க்கெல்லாம் நன்மை தருவார் எழுந்தருளிய இடமாகிய திருக்கோயில். |
| திருமுன்பு அணைந்தார் - என்க. முன்பு; சந்நிதி. சந்நிதியை அடைந்தார் என இரண்டாவதனுருபு விரிக்க. |
| 1126 |