[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1439

(வி-ரை) நலமலியும் திருவீதி - நலமாவது மாதவப்பயன்; மலிதல் - செய்து தருதல்; மிகுதியும் உளவாக்குதல். "மாதவங்கள், நல்குந் திருவீதி நான்கும் தொழுது" (2063).
நற்றவர்தம் குலம் நிறைந்த திருவாயில் - நற்றவர் - அடியார்கள்; குலம் - கூட்டம்; நிறைதல் - நெருங்குதல்.
குவித்த செங்கையொழு தாழ்ந்து - கைகளைச் சிரமேற் கூப்பியவாறே தாழ்ந்து.
தமனிய மாளிகை - பொன்னம்பலம்; பொன்மன்றம்.
ஓங்கிய பேரம்பலம் - மிகவுயர்ந்த பேரம்பலம் என்னும் மன்று; பொன்னம்பலத்தினை அடுத்துத் தனியே உள்ள பெருமன்றம்.
திருஎல்லை - (மதில்) வாயில் - திருவீதி - திருவாயில் - பேரம்பலம் என்ற இவற்றையெல்லாம் முறையே தனித்தனி வணங்கிய பின்னரே பொன்னம்பலத்தைச் சார்தலும் வழிபடலுமாம் என்ற குறிப்பும் காண்க.

1138

3037
ணங்கிமிக மனமகிழ்ந்து, மாலயனுந் தொழும்பூத
கணங்கண்மிடை திருவாயில் பணிந்தெழுந்து, கண்களிப்ப
அணங்குதனி கண்டருள வம்பலத்தே யாடுகின்ற
குணங்கடந்த தனிக்கூத்தர் பெருங்கூத்துக் கும்பிடுவோர்,

1139

3038
தொண்டர்மனம் பிரியாத திருப்படியைத் தொழுதிறைஞ்சி
மண்டுபெருங் காதலினா னோக்கிமுக மலர்ந்தெழுவார்
அண்டமெலா நிறைந்தெழுந்த வானந்தத் துள்ளலைந்து
கண்டபே ரின்பத்தின் கரையில்லா நிலையணைந்தார்.

1140

3037. (இ-ள்) வணங்கி....எழுந்து - (திருப்பேரம்பலத்தை) வணங்கி மனம் மிக மகிழ்ந்து மாலும் அயனும் தொழுகின்ற சிவ பூதகணங்கள் நெருங்கிய திருவணுக்கள் றிருவாயிலைப் பணிந்து எழுந்து; கண்களிப்ப - கண்கள் களிகூர; அணங்கு...ஆடுகின்ற - சிவகாமியம்மையார் தனியே கண்டருளும்படி திருவம்பலத்தில் ஆடல் புரிகின்ற; குணங்கடந்த.... கும்பிடுவார் - குணங்களைக் கடந்த மெய்ஞ்ஞான வெளியில் தனிக் கூத்தரது பெரிய திருக்கூத்தினைக் கும்பிடுவாராய்;

1139

3038. (இ-ள்) தொண்டர் மனம்...தொழுது இறைஞ்சி - திருத்தொண்டர்களுடைய மனத்தினின்றும் பிரிதலில்லாது விளங்கும் திருக்களிற்றுப்படியினைத் தொழுது வணங்கி; மண்டு...மலர்ந்தெழுவார் - செறிவுடைய பெருங் காதலினாலே நோக்கி முகம் மலர்ச்சி பெற்று எழுவாராகிய பிள்ளையார்; அண்டமெலாம்...அலைந்து - அண்டங்களெங்கும் நிறைந்து எழுகின்ற சிவானந்தப் பெருக்கினுள்ளே அலைந்து; கண்ட... அணைந்தார் - அனுபவத்துட் கண்ட பேரின்பத்தினிற் கரையற்ற நிலையினை அணைந்தருளினர்.

1140

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
3037. (வி-ரை) மால் அயனும் தொழும் பூதகணங்கள் - பூதகணங்கள் பிரம விட்டுணுக்களாலும் தொழப்படும் தன்மை வாய்ந்தவைகள். தேவர்கள் பசு வர்க்கத்துட்பட்டுப் பிறவியில் வருவோர். சிவபூதகணங்கள் அவ்வாறன்றிச் சிவத்துவம் விளங்கப்பெற்ற முத்தான்மாக்கள்; அன்றியும் தம்மை வழிபடுவோர்களைச் சிவன்பால் வழிப்படுத்தி உய்யச் செய்யும் கருணையும் ஆற்றலும் உடையவர்கள்; இவர்களால் விடுக்கப்பட்டபோதன்றித் தேவர்கள் திருவாயிலிற் புகும் உரிமையிலர்; ஆதலின்