|
| அங்கு - அத்திருப்பதியின் புறத்து அமரக்கூடிய இடத்திலே என்க. "அங்கண், அல்குந் திறமஞ்சு வார்சண்பை யாண்டகையார்" (2063); "திருவேட் களஞ் சென்று....வைகி யருளுமிட மங்காக" (2064) என்று முன் கூறியவைகளை நினைவு கூர்க. |
| மன்னு திருவம்பலம் - "மெய்ஞ்ஞானமே யான வம்பலம்" (2058) என்றபடி ஞான நிறைவாதலின் யாண்டும் பரவி நித்தியமாயுள்ளது. |
| புறத்தமர்ந்து - என்பதும் பாடம். |
| 1141 |
3040 | திருந்தியசீர்த் தாதையார் சிவபாத விருதயரும் பொருந்துதிரு வளர்புகலிப் பூசுரரு மாதவரும் "பெருந்திருமா லயன்போற்றும் பெரும்பற்றப் புலியூரில் இருந்தமிழா காரணைந்தா"ரெனக்கேட்டு வந்தணைந்தார். | |
| 1142 |
| (இ-ள்) திருந்தியசீர்...மாதவரும் - உலகம் திருந்துதற்குக் காரணமாகிய சிறப்பினையுடைய தாதையாராகிய சிவபாதவிருதயரும், பொருந்தும் சைவத்திரு வளர்தற்கிடமாகிய சீகாழியின்கண் வாழும் மறையவர்களும் சிவனடியார்களும்; "பெருந்திரு...அணைந்தார்" எனக் கேட்டு - "பெரிய திருவினையுடைய திருமாலும் பிரமதேவனும் போற்றுகின்ற பெரும்பற்றப்புலியூரின்கண்ணே பெரிய தமிழாகரராகிய பிள்ளையார் வந்தணைந்தார்" என்று கேட்டு; வந்தணைந்தார் - தாம் அங்கு வந்து சார்ந்தனர். |
| (வி-ரை) திருந்திய சீர் - திருந்திய - உலகம் திருந்திய என்க. உலகம் திருந்துதலாவது பரசமயங்கள் ஆக்கிரமித்து மேலெழுந்து கேடு செய்யாது நிராகரிக்கப்பட்டு அவ்வவற்றின் நிலையில் அமைந்து நிற்றலும், சைவம் ஓங்கித் திருநீற்றினொளி விளங்கி உண்மை நிலையில் நிற்றலுமாம்; சிவபாதவிருதயர் மனையறத்தி லின்பமுறுதல் ஒன்றும், பரசமய நிராகரித்து நீறு ஆக்குதலால் உலகம் திருந்துதல் ஒன்றுமாக இரண்டு பயன்களைக் குறித்து மகவு வேண்டித் தலம் செய்தனர்; அவ்வாறே பிள்ளையாரை மகவாகப் பெற்றனர். மகப் பெற்றமையினாலே "தாதையார்" எனப் பெற்றனர். "ஈறில் பெருந்தவ முன்செய்து 'தாதை' யெனப்பெற்றார்" (1983); இவ்விரண்டனுள் உலகந் திருந்துதலாகிய பெரும் பயனையே முற்பட நினைந்தனர் என்பது "மனையறத்தி லின்பமுறு மகப்பெறுவான் விரும்புவார், அனையநிலை தலைநின்றே...முன் பரசமய நிராகரித்து நீறாக்கும், - காதலனை"(1917) என்றதனா லறியலாம்; ஈண்டுப் பிள்ளையாரது, பாண்டிநாடு தொண்டைநாட்டு யாத்திரைகளின் நிறைவினோடு அப்பெரும்பயனும் நிறைவெய்தி உலகமும் தமிழ்நாடு முழுமையும் திருத்தமுற்று விளங்கின; இனிப் பிள்ளையாரது திருமணமும் இறைவன் றிருவடியிற் புக்கொன்றி யுடனாதலுமே எஞ்சி நிற்பன. இவையே இனித் தாதையாருக்குப் பிள்ளையார் மனையறத்திலின்பமுறு மகவு எனப்பெற்ற நிலையில் செய்ய நிற்பன; ஆதலின் இக்கருத்துக்களை யெல்லாம் உள்ளடக்கியே, வாளா கூறாது, திருந்திய சீர் என்றும், தாதையார் என்றும் அடைமொழிகள் தந்து கூறியருளிய நயம் காண்க. புகலிப் பூசுரரும் என ஏனையோரை வேறுபிரித்துப் பின்வைத்ததும் இக்குறிப்பு. |
| பொருந்து திருவளர் புகலி - பொருந்து திரு - சைவ மெய்த்திரு; வளர் - வளர்தற்கேதுவாய் நிற்கும். திருவளர் - பூசரர் - என்றும், வளர் மாதவரும் - என்றும் கூட்டியுரைக்கவும் நின்றது. பொருந்து திரு - என்றார் ஏனைத் திருவெல்லாம் பொருந்தாதொழிவன என்றுணர்த்துற்கு. பொருந்து திருவளர் என்றது, இனி, இவர்கள் எல்லா |