|
| அவரோடும் - வணங்க - தில்லைவா ழந்தணரும் - உடனாக - அவர்களுடன் கூடிச் சென்ற வணங்குதற்குத் தில்லைவாழந்தணரும் - உடன்ஆதி வர - ஒன்றுகூடி வரக் - கூடிப் பணிந்தார் என்க. கூடி என ஒருசொல் வருவித்துரைக்க. |
| தாங்கரிய காதலினால் - புலியந்தணர்களும் அடியவரும் உடனாதத் திருமன்று பணியப்பெற்றதனால் பெருவிருப்பு மிக்கதென்பது. |
| திருஓங்கு என்க; திரு - வைதிக சைவத் திரு. |
| திருச்சிற்றம்பலம் - ஞானாகாயமாகிய பொன்னம்பலம். |
| 1143 |
3042 | தென்புகலி யந்தணருந் தில்லைவா ழந்தணரும் அன்புநெறி பெருகுவித்த வாண்டகையா ரடிபோற்றிப் பொன்புரிசெஞ் சடைக்கூத்த ரருள்பெற்றுப் போந்தருளி யின்புறுதோ ணியிலமர்ந்தார் தமைவணங்க வெழுந்தருள, | |
| 1144 |
3043 | நற்றவர்தங் குழாத்தோடு நம்பர்திரு நடஞ்செய்யும் பொற்பதியின் றிருவெல்லை பணிந்தருளிப் புறம்போந்து பெற்றமுயர்த் தவரமர்ந்த பிறபதியும் புக்கிறைஞ்சிக் கற்றவர்கள் பரவுதிருக் கழுமலமே சென்றடைவார், | |
| 1145 |
3044 | பல்பதிகள் கடந்தருளிப் பன்னிரண்டு பேர்படைத்த தொல்லைவளப் பூந்தராய் தூரத்தே தோன்றுதலும் மல்குதிரு மணிமுத்தின் சிவிகையிழிந் தெதிர்வணங்கிச் செல்வமிகு பதியதன்மேற் றிருப்பதிக மருள்செய்வார், | |
| 1146 |
3045 | மன்னுமிசை மொழி "வண்டார் குழலரிவை" யென்றெடுத்து மின்னுசுடர் மாளிகை"விண் டாங்குவபோல் வேணுபுரம்" என்னுமிசைச் சொன்மாலை யெடுத்தியம்பி எழுந்தருளிப் புன்னைமணங் கமழ்புறவப் புறம்பணையில் வந்தணைந்தார். | |
| 1147 |
| 3042. (இ-ள்) தென்புகலி...போற்றி - அழகிய சீகாழி மறையோரும் தில்லை வாழந்தணர்களும் அன்புநெறியைப் பெருகச்செய்த இறைவரது திருவடிகளைப் போற்றி; பொன்புரி...போந்தருளி - பொன்போன்ற புரித்த சடையினையுடைய கூத்தப்பெருமானது திருவருள் விடைபெற்றுப் போந்தருளி; இன்புறு...எழுந்தருள - இன்பஞ் செய்யும் திருத்தோணியில் விரும்பி வீற்றிருந்த இறைவரை வணங்குதற்கு எழுந்தருளுவதன் பொருட்டு; |
| 1144 |
| 3043. (இ-ள்) நற்றவர்தம்...புறம்போந்து - நல்ல தவமுடைய அடியார் .கூட்டத்துடனே கூடி, இறைவர் திருநடனம் செய்தருளுகின்ற அந்த அழகிய பதியன் திருவெல்லையினைப் பணிந்தருளிப் புறத்திற் போய்; பெற்றம்...இறைஞ்சி - விடைக் கொடியினை உயர்த்திப் பிடித்த இறைவர் விரும்பி எழுந்தருளிய பிற பதிகளையும் சென்று வணங்கி; கற்றவர்கள்... அடைவார் - கற்ற பெரியோர்கள் துதிக்கின்ற சீகாழிப் பதியினையே சென்று சேர்வாராகி; |
| 1145 |
| 3044. (இ-ள்) பல்பதிகள் கடந்தருளி - பல பதிகளையும் கடந்து சென்றருளி; பன்னிரண்டு...எதிர் வணங்கி - பன்னிரண்டு பெயர்களையுடைய பழைமையாகிய வளம் பொருந்திய சீகாழிப் பதியானது தூரத்திலே காட்சிப்படுதலும் பொருந்திய திருமுத்துச் சிவிகையினின்றும் இறங்கி வணங்கி; செல்வமிகு..செய்வார் - சிவச் |