|
| அவர் பெருந்தன்மை போதும் - என்க; போதும் - தகுதியாகும்; அமையும். |
| எண்ணினார் - எண்ணித் துணிந்தார்கள்; "எண்ணித் துணிக கருமம்" (குறள்) |
| 1161 |
3060 | திருஞான சம்பந்தர் சீர்பெருக மணம்புணரும் பெருவாழ்வு திருத்தொண்டர் மறையவர்கண் மிகப்பேண வருவாரும் பெருஞ்சுற்ற மகிழ்சிறப்ப, மகட்பேசத் தருவார்தண் பணைநல்லூர் சார்கின்றார் தாதையார். | |
| 1162 |
3061 | மிக்கதிருத் தொண்டர்களும் வேதியரு முடனேகத் திக்குநிகழ் திருநல்லூர்ப் பெருமணத்தைச் சென்றெய்தத், தக்கபுகழ் நம்பாண்டார் நம்பிதா மதுகேட்டுச் செக்கர்முடிச் சடையார்தந் திருப்பாதந் தொழுதெழுவார். | |
| 1163 |
3062 | ஒப்பரிய பேருவகை யோங்கியெழு முள்ளத்தால் அப்புநிறை குடம்விளக்கு மறுகெல்லா மணிபெருக்கிச் செப்பரிய வார்வமிகு பெருஞ்சுற்றத் தொடுஞ்சென்றே "யெப்பொருளு மெய்தினே"னெனத்தொழுதங் கெதிர்கொண்டார் | |
| 1164 |
| 3060. (இ-ள்.) திருஞான சம்பந்தர்.....பெருவாழ்வு - திருஞான சம்பந்தப் பிள்ளையார் சிறப்புப் பெருகும் திருமணம் புணரும் பெருவாழ்வினைப் பற்றி; திருத்தொண்டர்...மகிழ் சிறப்ப - திருத்தொண்டர்களும் மறையவர்களும் மிகப் பேணவும், வருவார்களாகிய பெருஞ் சுற்றமும் மகிழ்ச்சி மிகப் பெறவும்; மகட்பேச - மகட் கொடையினைப் பற்றிப் பேசும்பொருட்டு, தருவார் தண்பணை நல்லூர் சார்கின்றார் தாதையார் - தருக்கள் நிறைந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருமண நல்லூரினைச் சார்கின்றாராகிய தாதையார்; |
| 1162 |
| 3061. (இ-ள்.) மிக்க....உடன் ஏக - மிகுந்த திருத்தொண்டர்களும் மறையவர்களும் உடன் செல்ல; திக்கு நிகழ்....எய்த - எல்லாத் திக்குக்களினும் நிகழ்கின்ற திருநல்லூர்ப்பெருமணத்தினைச் சென்று சேர; தக்கபுகழ்...தொழுதெழுவார் - தகுந்த புகழினையுடைய நம்பாண்டார் நம்பிகளும் அவரது வரவினைக் கேட்டுச் செவ்வானத்தை ஒத்த சடைமுடியினையுடைய சிவபெருமானது திருவடிகளைத் தொழுது எழுவாராகி; |
| 1163 |
| 3062. (இ-ள்.) ஒப்பரிய....உள்ளத்தால் - ஒப்பில்லாத பெருமகிழ்ச்சி ஓங்கி மேலெழும் மனத்தினோடு; அப்பு நிறை...அணிபெருக்கி - நன்னீர் நிறைந்த குடமும் விளக்கும் வைத்து வீதியை யெங்கும் மிக அலங்கரித்து; செப்பரிய....சென்றே - சொல்லுதற்கரிய ஆசை மிகுகின்ற பெருஞ் சுற்றத்தாருடன் சென்றே; எப்பொருளும்...எதிர்கொண்டார் - "உறுதிப்பொருள்க ளெல்லாவற்றையும் நான் அடைந்தவனாயினேன்" என்று கூறித் தொழுது அங்கு அவர்களை எதிர்கொண்டனர். |
| 1164 |
| இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3060. (வி-ரை.) திருஞான சம்பந்தர் - இப்பெயராற் கூறிய குறிப்பு முன் (3058) உரைக்கப்பட்டது. |
| சீர் பெருக - உலகம் சிறப்பினால் மேன்மேலும் ஓங்கி வளர; இது பின்னர்த் திருமண நிகழ்ச்சியின் விளைவுகளிற் காண்க. |