1466திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

கல நூலவர் - மறையின் ஆறு அங்கங்களுள் ஒன்றாதலின் இப்பெயராற் கூறினார். கணித நூலவர் - என்றலே அமையுமாயினும் இங்கு மங்கல நல்வினைபற்றித் தொழிற்பட வருதலான் மங்கல நூல் என்றார். இனி இச்சோதிடர் ஏனை உலகினர் பக்கல் வரும் நன்மைகளுக்கு வகுக்கும் நாளும் ஓரையும் மங்கலமென்ற பெயராறசொல்லினும் அஃது உபசாரமாத்திரையானன்றி உண்மையிற் பொருந்தா; என்னை? அந்த மங்கலமெனப்படுவன வெல்லாம் ஒருகாலத்து அழிவுபட்டு அமங்கலங்களாக முடிவ தொருதலையாதலின் என்க; ஆயின் இங்குக் கணித மங்கலநூலவர் வகுத்த நாளும் ஓரையும் அத் திருமணத்தைச் சார்ந்த எல்லாருக்கும் நித்திய மங்கலமாகிய அழிவில்லாத சிவத்திருமண மங்கால நிலையைப் பயப்பித்தன. அக்குறிப்புப்பட மங்கலச்சொற் புணர்த்திக் கூறினார் என்றலுமாம். இராமனது முடிசூட்டடுக்காக வகுத்த நாளே அவன் முடிதுறந்து காட்டுக்குப் போகும் நாளாக ஆயினமையால் அதனை வகுத்த கணிதர்களைக் "கணித மாக்கள்" என்றும், அந்நாளினை "முடிபுனை கடிகை நாள்" என்றும் கூறிய கம்பனது குறிப்பு இங்கு வைத்துக் காணத்தக்கது.
பெருகு மணநாளோலை - மணத்தின் நன்னாளும் ஓரையும் குறித்தெழுதிய வோலை; "நாளோலை விட்டார்" (156); ஓலை ஏந்திக்.....குறுகினார்; எதிரே வந்து....கொண்டார் (157) என்றதும் பிறவும் காண்க.
போக்கி - மணமகள் வீட்டாருக்கு உரியவாறு நாள்ஓலை ஏந்திக்கொண்டு சேர்த்தலும், ஏனை சுற்றத்தார்பால் போக்கிச் சேர்க்கலும் ஆம்.
அருள் புரிந்த நன்னாள்- அருள் புரிந்த - கணித மங்கல நூலவர் வகுத்துத்தந்த. திருமணச் சார்புகொண்ட யாவரும் சிவனடி சார்ந்து வீடுபெற்றுய்யும் நன்னாளாக இஃது ஆகிவிடும்படி முன்னரே இறைவர் கருணை செய்தளித்த என்ற குறிப்பும் காண்க. "திருமணஞ்செய் திருநாளுக் கெழுநாளா நன்னாள்" என்றபடி முன் எழா நாளில்பாலிகைகளில் முளை தெளித்தல் மரபு. இஃது நூல்விதியாதலின் அருள்புரிந்த என்றார் என்றலுமாம். பாலிகைக்குரிய விதையை விதைத்தார் என்க. இவை முளைத்த பின்னர்ப் பாலிகைக்குரிய விதையை விதைத்தார் என்க. இவை முளைத்த பின்னர்ப் பாலிகைகளில் முளைபூரித்தல் திருமணநாளுக் கெழுநாளா நன்னாளில் நிகழுமென்பது பின்னர்க் கூறப்படும் (3070). இவ்வாறு நாட்குறித்துத் திருமணத்துக்குரிய பகுதிகளைத் தொடங்குதல் முன்னாளில் நமது பெரியோர் வழக்கும், நூல் விதியுமாம்.

1169

3068
செல்வமலி திருப்புகலிச் செழுந்திருவீ திகளெல்லாம்
மல்குநிறை குடம்விளக்கு மகரதோ ரணநிரைத்தே
எல்லையிலா வொளிமுத்து மாலைகளெங் கணுநாற்றி
அல்குபெருந் திருவோங்க வணிசிறக்க வலங்கரித்தார்.

1170

(இ-ள்.) செல்வமலி...நிரைத்தே - செல்வம் மலிகின்ற சீகாழிப் பதியின் செழிப்புடைய திருவீதிகள் எல்லாவற்றையும் பொருந்திய நிறைகுடங்களையும் விளக்குக்களையும் மகர தோரணங்களையும் வரிசையாக அமைத்தே; எல்லையிலா...நாற்றி- அளவுபடாத ஒளியினையுடைய முத்துமாலைகளை எங்கும் தொங்கவைத்து; அல்கு பெரும்...அலங்கரித்தார் - மிக்க பெரிய திரு ஓங்கும்படி அழகு விளங்க அலங்காரம் செய்தார்கள்.

இதுபற்றியும் மணச் செயல்கள் பற்றியும் எனது சேக்கிழார் 73 - 78 பக்கங்கள் பார்க்க.