[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1475

மொழிவழி யேவல்கேட்ப" (465); "நம்ப ரருளினா லளகை வேந்தன், றன்பெரு நிதியந் தூர்த்துத் தரணிமேல் நெருங்க....மன்பெருஞ் செல்வ மாக்கி வைத்தனன்" (844) என்றவற்றை இங்கு நினைவுகூர்க.
மனை வளரும் மறுகு எல்லாம் - எவ்வெவ்வகை மக்கள் வாழும் எவ்வெவ் வீதிகள் யாவையும்.
நிறைந்துளதால் - என்பதும் பாடம்.

1181

வேறு

3080
மாறி லாநிறை வளந்தரு புகலியின் மணமீக்
கூறு நாளின்முன் னாளினில் வேதியர் குழாமும்
நீறு சேர்திருத் தொண்டரு நிகரிலா தவருக்
காறு சூடினா ரருட்டிருக் காப்புநா ணணிவார்,

1182

3081
வேத வாய்மையின் விதியுளி வினையினால் விளங்க
ஒத நீருல கியன்முறை யொழுக்கமும் பெருகக்
காத னீடிருத் தொண்டர்கண் மறையவர் கவினார்
மாதர் மைந்தர்பொற் காப்புநா ணகர்வலஞ் செய்தார்.

1183

3080. (இ-ள்.) மாறிலா...புகலியின் - ஒப்பற்ற நிறைந்த வளம் தருகின்ற சீகாழிப் பதியில்; மண மீக்கூறு நாளின் முன்னாளினில் - திருமணத்தினை மேற்கொள்ளும் திருநாளின் முன்னாளிலே; வேதியர் குழாமும் நிறுசேர் திருத்தொண்டரும் - மறையோர் கூட்டமும் திருநீறு அணிந்த திருத்தொண்டர்களும் கூடி; நிகரிலாதவருக்கு...அணிவார் - ஒப்பற்றவராகிய பிள்ளையாருக்குக் கங்கையைத் தலையிற் சூடிய இறைவரது அருள் பொருந்திய திருக்காப்பு நாணினை அணிவார்களாகி,

1182

3081. (இ-ள்.) வேத வாய்மையின்....விளங்க - வேத வாய்மையிற் கூறும் விதிகள் இச்செயலால் விளங்கவும்; ஒத...பெருக - கடல் சூழ்ந்த உலக நடையின்முறையான வொழுக்கங்களும் பெருகவும்; காதல்....வலஞ் செய்தார் - அன்புமிக்க திருத்தொண்டர்களும் மறையோர்களும் அழகிய மகளிர்களும் ஆடவரும் கூடிப் பொன்னாலாகிய காப்பு நாணினை நகர்வலஞ் செய்வித்தார்கள்.

1183

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
3080. (வி-ரை.) மாறிலா வளம் தரு - நிறைவளம் தரு - என்க. மாறிலா வளமாவது சராசரங்க ளெல்லாம் சிவம்பெருகத் தரும் தன்மை; நிறைவளமாவது திருமணத்தின் பொருட்டு வந்த எண்டிசையினுள்ளோரும் கொணர்ந்த ஈண்டு வளமும், சீகாழியின் இயல்பாயுள்ள உலகியல் வளமும் ஆம்; தருதல் - பெறுதற்கிடமாதல்.
மணமீக்கூறு நாள் - மணஞ்செய் திருநாள்; மீக்கூறும் - மேற்கொள்ளும்.
முன்னாளினில் - காப்பு நாண் அணிவார் - திருமண நாளின் முன்னாளில் காப்பு நாண் அணிதல் மரபு; மணவினைச் சடங்குகள் காப்புநா ணணிதலுடன் தொடங்குகின்றன; காப்புநாண் கட்டுதல் மணமகன், மணமகள் இருவர்பாலினும் நிகழ்வது. "கற்பகப் பூங்கொம் பன்னார் தம்மையும் காப்புச் சேர்த்துப், பெற்புறு சடங்கு முன்னாப் புரிவுடன் செய்த வேலை" (3120); இவ்வாறு உரியபடி காப்புச் சேர்த்த பின்னர் அதனைப் பின்னர்ச் சடங்குடன் அவிழ்க்கின்ற அளவும் சிவனது காவல் சிறக்கப்