[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1477

பகரும் வைதிக விதிச்சமா வர்த்தனப் பான்மை
திகழ முற்றிய செம்மலார் திருமுன்பு சேர்ந்தார்.
(இ-ள்.) நகர்...பின் - முன் கூறியவாறு நகர்வலம் செய்வித்துத் திருமாளிகையிற் புகுந்த பின்பு; நவமணி....பொலிய - நவமணிகளால் அணியப்பட்ட குற்றமற்ற சித்திரங்களால் விதானமமைக்கப்பட்ட மண்டபத்திலே விளங்கும்படி; பகரும்...சேர்ந்தார் - நூல்களால் எடுத்துச் சொல்லப்படும் வைதிக விதிகளின்படி சமாவர்த்தனமாகிய தன்மையினை விளங்கும்படி முற்றிய பிள்ளையாரது திருமுன்பு வந்து சேர்ந்தார்கள்.
(வி-ரை.) புகுந்தபின் - திருமுன்பு சேர்ந்தார் என்க. புகுந்த - திருமாளிகையினுள்ளே புகுந்த.
நவமணி அணிந்த - சித்திர விதானம் - நவமணி அணிந்த - நவமணிகளாலும் அணி செய்யப்பட்ட; அலங்கரிக்கப்பட்ட. விதானத்தின் அமைந்த சித்திரங்கள் நவமணிகளால் அணி செய்யப்பட்டன என்க. விதானம் - மேற்கட்டி முதலியவை; இவற்றிற் சித்திரங்கள் - ஒவியங்கள் - தீட்டுதலும், அவற்றை மணிகளால் அணிதலும் அந்நாள் வழக்கு. பொலிய (வீற்றிருந்த) செம்மலார் திருமுன்பு என்க.
வைதிக விதிச் சமாவர்த்தனப் பான்மை திகழ முற்றிய - சமாவர்த்தனமாவது வேதாத்தியயனம் நிறைவு செய்து முடித்துப் பிரமசரிய விரதநிலை முடித்தபின் கிருகத்த நிலை புகுமுன் செய்யும் அதி வைதிகச் சடங்கு; ஒவ்வோர் ஆச்சிரமத்திலும் தங்குதல் ஒருநிலை எனப்படும்; ஆயுள் முழுதும் நிலைமாறாது ஒரேநிலையில் தங்குதல் நைட்டிகம் எனப்பெறும்; நிலைத்து நிட்டாபரராய் இருக்கும் தன்மை; நிட்டையுடன் பொருந்தியது நைட்டிகம். ஏனையோர் ஒரு ஆச்சிரமத்தினின்றும் அடுத்ததிற்புகும்போது முன்னதற்கு (பூர்த்தி செய்யும்) நிறைவாக்கும் கிரியைகளைச் செய்து பின்னதனைத் தொடங்குதலை வேண்டும் என்பது வைதிக விதி. சமாவர்த்தனம் - மணமாவதற்குக் காரணமாகின்ற உரிமை.
சமாவர்த்தனப் பான்மை - முற்றிய - இங்குப் பிள்ளையார்பால் மூன்றாண்டளவில் முற்றிய சிவஞான விளக்கநிலை பெறுதலின் ஆச்சிரமம் பற்றிய விதிகளும் சடங்குகளும் வெறும் உபசாரவளவில் மட்டும் அமைவன என்பார் பான்மை - முற்றிய என்றார். பிள்ளையாரது உபநயன நிகழ்ச்சியின் வரலாறுகளை ஈண்டு நினைவுகூர்க; முற்றிய - தாமாகவே இயல்பால் முற்றியிருந்த.
சேர்ந்தார் - தொண்டர்கள் முதலியோர் (3081) .

1184

3083
செம்பொ னின்பரி கலத்தினிற் செந்நெல்வெண் பரப்பின்
வம்ப ணிந்தநீண் மாலைசூழ்மருங்குற வமைத்த
அம்பொன் வாசநீர்ப் பொற்குட மரசிலை தருப்பை
பம்பு நீள்சுடர் மணிவிளக் கொளிர்தரும் பரப்பில்,

1185

3084
நாத மங்கல முழக்கொடு நற்றவ முனிவர்
வேத கீதமும் விம்மிட விரைகமழ் வாசப்
போது சாந்தணி பூந்துகில் புனைந்தபுண் ணியம்போல்
மீது பூஞ்சய னத்திருந் தவர்முன்பு மேவி,

1186