1478திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

3085
ஆர்வ மிக்கெழு மன்பினான் மலரய னனைய
சீர்ம றைத்தொழிற் சடங்குசெய் திருந்துநூன் முனிவர்
பார்வ ழிப்பட வருமிரு வினைகளின் பந்தச்
சார்பொ ழிப்பவர் திருக்கையிற் காப்புநாண் சாத்த,

1187

3086
கண்ட மாந்தர்கள் கடிமணங் காணவந் தணைவார்
கொண்ட வல்வினை யாப்பவிழ் கொள்கைய வான
தொண்டர் சிந்தையும் வதனமு மலர்ந்தன; சுருதி
மண்டு மாமறைக் குலமெழுந் தார்த்தன மகிழ்ந்தே.

1188

3083. (இ-ள்.) செம்பொனின்....பரப்பின் - செம்பொற் றட்டிலே செந்தநெல்லாலாகிய வெண்பரப்பின்மேல்; வம்பணிந்த...தருப்பை - வாசனை பொருந்திய நீண்ட மாலைகள் இருமருங்கும் சூழ அமைக்கப்பட்ட அழகிய வாசனையுடைய நீர் நிறைந்த பொற்குடமும் அரசிலையும் தருப்பையும்; பம்பு...பரப்பில் - பரவிய நீண்ட ஒளியுடைய அழகிய விளக்கும் விளங்கிய பரப்பினிலே;

1185

3084. (இ-ள்.) நாத..விம்மிட - இயங்களின் நாதத்தாலாகிய மங்கல முழக்குடனே நல்ல தவமுனிவர்களது வேதகீத ஒலியும் நிறைய; விரைகமழ்...மேவி - மணங் கமழும் வாசமுடைய மலர்களும், சாந்தும், அணிகளும், அழகிய துகிலும் புனைந்த புண்ணியத்தினைப்போல அழகிய மலரமளியின்மேல் எழுந்தருளியிருந்த பிள்ளையாரது திருமுன்பு சேர்ந்து;

1186

3085. (இ-ள்.) ஆர்வம்...அன்பினால் - ஆசை மிக்கு எழுகின்ற அன்பினாலே; மலரயன்...முனிவர் - தாமரையில் இருக்கும் பிரமதேவனைப் போன்ற சிறந்த மறைவிதித் தொழில் புரியும் சடங்குகளைக் செய்கின்ற திருத்தும் நூல்வல்ல முனிவர்களாகிய வேதியர்; பார்வழிப்பட....சாத்த - உலகில் பிறவி எடுக்க வரும் இருவினைகளின் பந்தச் சார்பினை நீக்குபவராகிய பிள்ளையாரது திருக்கையிலே காப்புநாணினை அணிய;

1187

3086. (இ-ள்.) கண்ட மாந்தர்கள் - (காப்புநாணைச் சாத்தியதனைக்) கண்ட மக்களும்; கடிமணம்...அணைவார் - கடிமணத்தினைக் காணும்பொருட்டு வந்து அணைபவர்களும்; கொண்ட...தொண்டர் - பற்றிய வலிய வினைக்கட்டினை அவிழ்த்து நீக்கும் கொள்கையினை உடையவர்களாகயி தொண்டர்களும் ஆகிய இவர்களது சிந்தையும் முகங்களும் மலர்ச்சியடைந்தன; சுருதி...ஆர்த்தன - சுருதிகள் நிறைந்த பெருமறைக் குலங்கள் மேலோங்கி முழங்கின; மகிழ்ந்தே - மகிழ்ச்சி பெற்றே.

1188

இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.

3083. (வி-ரை.) இப்பாட்டாற் காப்புநாண் சாத்துதலும், சாத்துதற்குரிய சடங்கனுக்கு வேண்டிய பொருள்களும், அவற்றின் அமைதியும் கூறுகின்றார்.

பொற் பரிகலத்தில் நெல் பரப்புதலும், அதன்மேல் மாலை சூழ்ந்த அழகிய நிறைகுடத்தினை அரசினை தருப்பையுடன் உரியபடி அமைத்து வைத்தலும் மணிவிளக்குக்கள் பரவ விளங்கவைத்தலும், வேதமோதுதலும் முதலிய இவை இதற்குரிய செயல்களாம்.

பரிகலம் -பாசனம்; தட்டு. செந்நெல் வெண் பரப்பு - செந்நெல்லே இங்கு ஏற்கும் மரபும் தகுதியும் பற்றி முன் அரிவாட்டாய நாயனார் புராணத்தும், பிறாண்டும் உரைத்தவை நினைவு கூர்தற்பாலன. செந்நெல் வெண்பரப்புச் செய்து அதன்மேல் நிறைகுடம் தாபித்தல் மரபு; கலசத்துக்கு நெற்பரப்பு ஆதனம் என்ப.