[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1491

3098
கோதையர் குழல்சூழ் வண்டின் குழாத்தொலி யொருபாற்,கோல
வேதியர் வேத வாய்மை மிகுமொலி யொருபான் மிக்க
ஏதமில் விபஞ்சி வீணை யாழொலி யொருபா, லேத்தும்
நாதமங் கலங்கள் கீத நயப்பொலி யொருபா லாக;

1200

3099
விண்ணினை விழுங்க மிக்க வெண்டுகிற் பதாகை வெள்ளங்
கண்வெறி படைப்ப மிக்க கதிர்விரி கவரிக் கவரிக் கானம்
மண்ணிய மணிப்பூ ணீடு மரிசன மலிந்த பொற்பின்
எண்ணிலா வண்ணத் தூசின் பொதிப்பரப் பெங்கு நண்ண,

1201

3100
சிகையொடு மான்றோ றாங்குங் கிடையுமா சானுஞ் செல்வார்,
புகைவிடும் வேள்விச் செந்தீ யில்லுடன் கொண்டு போவார்,
தகைவிலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பிச் சார்வார்,
வகையறு பகையுஞ் செற்ற மாதவ ரியல்பின்மல்க.

1202

3101
அறுவகை விளங்குஞ் சைவத் தளவிலா விரதஞ் சாரும்
நெறிவழி நின்ற வேட நீடிய தவத்தி னுள்ளோர்,
மறுவறு மனத்தி லன்பின் வழியினால் வந்த யோகக்
குறிநிலை பெற்ற தொண்டர் குழாங்குழா மாகி யேக,

1203

3102
விஞ்சைய ரியக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர்
அஞ்சன நாட்ட வீட்டத் தரம்பைய ருடனா யுள்ளோர்
தஞ்சுடர் விமான மேறித் தழைத்தவா தரவி னோடு
மங்சுறை விசும்பின்மீது மணவணி காணச் சொன்றார்.

1204

3098. (இ-ள்.) கோதையர்...ஒருபால் - பெண்களுடைய கூந்தலைச் சூழ்ந்த வண்டுக் கூட்டங்களின் ஒலி ஒருபக்கத்திலும்; கோல...ஒருபால் - கோலத்துடன் கூடிய மறையவர்கள் ஓதும் வேத வாய்மை மிகும் ஒலி ஒருபக்கத்திலும்; மிக்க...ஒருபால் - குற்றமில்லாத மிக்க வீணையும் யாழுமாகிய இவற்றின் ஒலி ஒருபக்கத்திலும்; ஏத்தும்...ஒருபாலாக - துதிக்கின்ற நாதத்துடன் கூடிய மங்கலங்களைக் கீதமாகப் பாடும் இனிய ஒலி ஒருபக்கத்திலுமாகச் சத்திக்க;

1200

3099. (இ-ள்.) மிக்க....வெள்ளம் - மிகுந்த வெண்துகிற்கொடிகளின் கூட்டம்; விண்ணினை விழுங்க -ஆகாயவெளியை மறைக்கவும்; மிக்க கதிர்...கானம் - மிகுந்த ஒளி விரியும் சாமரைகளின் கூட்டம் கண்வெறி செய்யவும்; மண்ணிய மணிப்பூண் - விளக்கம் செய்த மணிகளையுடைய அணிகளும்; நீடும்...பொதிப்பரப்பு - நீடுகின்ற மஞ்சனிற மிகுந்த அழகிய அளவில்லாத வண்ணங்களையுடைய துணிப்பொதிகளின் கூட்டமும்; எங்கும்நண்ண - எங்கும் பொருந்த;

1201

3100. (இ-ள்.) சிகையொடு...செல்வார் - பஞ்ச சிகைகொண்ட கோலத்துடன் கரு மான்தோலைப் பூணூலில் தரித்த வேதம் ஓதும் சிறுவர்களும் உபாத்தியாயருமாகக் கூடிச் செல்லவும்; புகைவிடும்.... கொண்டுபோவார் - ஓமப்புகை விடுகின்ற வேள்விச் செந்தீயினைத் தத்தம் மனைவியர்களுடனே கொண்டு மறையவர் போகவும்; தகை விலா...சார்வார் -தடுக்கலாகாத விருப்பத்துடனே பெருமையாற் சிறந்த திருப்