| |
| மென்பது கருதப்படும். நம்பாண்டார் நம்பிகளது திருமனையும் அவ்வாறே பிள்ளையாரது பெருந் திருமணம் நிகழ்ந்த இடமாம்பேறு பெற்றது. அஃது இருந்த இடந்தானும் இந்நாள் அறியக்கூடவில்லை! இவற்றைக் கன்னபரம்பரை வழக்குப்பற்றியேனும் அறிந்து நினைவுக் குறியாகக் காத்துவைத்தல் சிவபுண்ணியமாகும். |
| 1208 |
| திருமணக் கோலம் - (பாதாதிகேசம்) அடி முதல் முடி வரை: |
3107 | பொற்குட நிறைந்த வாசப் புனிதமஞ் சனநீ ராட்டி, விற்பொலி வெண்பட் டாடை மேதக விளங்கச் சாத்தி, நற்றிரு வுத்த ரீய நறுந்துகில் சாத்தி, நானப் பற்பல கலவைச் சாந்தம் பான்மையி னணிந்த பின்னர், | |
| 1209 |
3108 | திருவடி மலர்மேற் பூத்த செழுநகைச் சோதி யென்ன மருவிய தரளக் கோவை மணிச்சரி யணையச் சாத்தி, விரிசுடர்ப் பரட்டின் மீது விளங்குபொற் சரட்டிற் கோத்த பெருகொளி முத்தின் றாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி, | |
| 1210 |
3109 | தண்சுடர்ப் பரிய முத்துத் தமனிய நாணிற் கோத்த கண்கவர் கோவைப் பத்திக் கதிர்க்கடி சூத்தி ரத்தை வெண்சுடர்த் தரள மாலை விரிசுடர்க் கொடுக்கின் மீது வண்டிரு வரையி னீடு வனப்பொளி வளரச் சாத்தி, | |
| 1211 |
3110 | ஒளிகதிர்த் தரளக் கோவை யுதரபந் தனத்தின் மீது தளிரொளி துளும்பு முத்தின் சன்னவீ ரத்தைச் சாத்தி, குளிர்நில வெறிக்கு முத்தின் பூணநூற் கோவை சாத்தி, நளிர்கதிர் முத்து மாலை நகுசுட ராரஞ் சாத்தி, | |
| 1212 |
3111 | வாள்விடு வயிரக் கட்டு மணிவிர லாழி சாத்தித், தாளுறு தடக்கை முத்தின் றண்டையுஞ் சரியுஞ் சாத்தி, நீளொளி முழங்கைப் பொட்டு நிரைசுடர் வடமுஞ் சாத்தித், தோள்வளைத் தரளப் பைம்பூண் சுந்தரத் தோண்மேற் சாத்தி, | |
| 1213 |
3112 | திருக்கழுத் தாரந் தெய்வக் கண்டிகை மாலை சேரப் பருத்தமுத் தொழுங்கு கோத்த படரொளி வடமுஞ் சாத்திப், பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திருவார் காதில் வருக்கவெண் டரளக் கொத்தின் வடிக்குழை விளங்கச் சாத்தி, | |
| 1214 |
3113 | நீற்றொளி தழைத்துப் பொங்கி நிறைதிரு நெற்றி மீது மேற்பட விரிந்த சோதி வெண்சுட ரெழுந்த தென்னப் பாற்படு முத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்தி, ஏற்பவைத் தணிந்த முத்தி னெழில்வளர் மகுடஞ் சேர்த்தார்; | |
| 1215 |
3114 | இவ்வகை நம்மை யாளு மேர்வளர் தெய்வக் கோலங் கைவினை மறையோர் செய்யக், கடிகொள்செங் கமலத் தாதின் | |