| |
| அம்பொன் செய்...வைத்தார் - அழகுக் கழகுசெய்தல் போல் இயல்பால் அழகுடையாரை மேலும் அலங்கரித்தனர் என்பதாம். |
| அம்பொன்செய் தீபம் என்ன - தீபம் - தானே ஒளிதரும் பொருள்; அதனைப் பொன்னா லமைத்ததுபோல; பொன்னா லமையினும் விளக்கே ஒளிதருவதுபோல இங்கு அம்மையாரின் அழகே பொற்பணிகளை விளக்கியதென்பதாம். |
| 1223 |
3122 | மாமறை மைந்த ரெல்லா மணத்தெதிர் சென்று மன்னும் தூமலர்ச் செம்பொற் சுண்ணந் தொகுநவ மணியும் வீசத் தாமரை மலரோன் போல்வா ரரசிலை தருப்பை தோய்ந்த காமர்பொற் கலச நன்னீ ரிருக்குடன் கலந்து வீச, | |
| 1224 |
3123 | விண்ணவர் மலரிங்ன மாரி விசும்பொளி தழைப்ப வீச, மண்ணக நிறைந்த கந்த மந்தமா ருதமும் வீசக், கண்ணொளி விளக்க மிக்க காமர்தோ ரணங்க ளூடு, புண்ணிய விளைவு போல்வார் பூம்பந்தர் முன்பு சார்ந்தார். | |
| 1225 |
| 3122. (இ-ள்) மாமறை...சென்று - பெருமையுடைய வேதிய மைந்தர்கள் எல்லாரும் திருமண எழுச்சியின் எதிரே சென்று; மன்னும்...மணியும் வீச - பொருந்திய தூய மலர்களுடனே செம்பொற் சுண்ணத்தினையும் தொக்க நவமணிகளையும் வீச; தாமரை..கலந்து வீச - தாமரைமலரில் இருக்கும் பிரமதேவன் போன்ற வேதியர்கள் அரசிலையும் தருப்பையும் தோய்ந்த அழகிய பொற்கலச நன்னீரினை வேதமந்திரங்களைச் சொல்லி வீசித் தெளிக்க; |
| 1224 |
| 3123. (இ-ள்) விண்ணவர்...தழைப்ப வீச - விண்ணுலகத்தவர்கள் தேவப் பூமாரியினை வானத்தில் ஒளி மிகும்படி வீச; மண்ணகம்...மாருதமும் வீச - நிலஉலகம் நிறைந்த மணத்தையுடைய தென்றற் காற்றினையும் வீச; கண்ணொளி...முன்பு சார்ந்தார் - நெருங்கிய ஒளி மிகுந்த அழகிய தோரணங்களினிடையே சென்று புண்ணியத்தின் பயன் போல்வாராகிய பிள்ளையார் பூம்பந்தரின் முன்பு சார்ந்தருளினர். |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3122. (வி-ரை) மாமறை மைந்தர் - மா - பெருமை பொருந்திய என்பது மறைக்கு அடைமொழி. மைந்தர் - சிறுவர்கள்; குமாரப் பருவத்தினர். |
| மணத்து எதிர் சென்று - மணம் - திருமண எழுச்சியாய் மணமகன் வரும் கூட்டம் மணம் எனப்பட்டது. |
| தூமலர்ச் செம்பொற் சுண்ணம் - புதிய நன்மலர்கள் கலந்த பொற்சுண்ணத்தூள்; தொகு நவமணியும் - கலந்த வகைகளைக் கொண்ட நவமணிகள்; உம்மை உயர்வு சிறப்பு. |
| தாமரை மலரோன் போல்வார் - பிரமனைப் போன்ற மறையவர்கள் - வைதிகர்கள். முன்னர் மைந்தர்கள் என்றது சிறுவர்; இவர்கள் வயது முதிர்ந்து வைதிக ஒழுக்கில் நிற்போர். |
| அரசிலை தருப்பை தோய்ந்த - கலச நன்னீர் - கலசத்தில் தூய நீரினுடன் அரசிலையும் தருப்பையும் இட்டு வைத்தல் மரபு. நீர் இருக்குடன் கலந்து வீசுதலாவது - வேத மந்திரங்களைச் சொல்லி அரசிலையினா லிறைத்தல்; இருக்கு - இங்கு வேதப் பொதுமை குறித்து நின்றது. |