[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1533

சேர்தல் வேண்டுமென்ற திருவுள்ளக் குறிப்பினாலே என்க; மலர்தல் - மன மகிழ்தல்.
அலகில் மெய்ஞ்ஞானத் தெல்லை அடைவுறும் - அளவுபடாத மெய்ஞ்ஞானமாவது சிவஞானம்; அதன் எல்லையாவது அதன்மேல் விளங்கும் சிவானந்த நிறைவு. சிவனுலகம். "உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார்" (1075); "அலகில் கலையின்பொருட் கெல்லையாடுங் கழலே"(1220) என்றவை காண்க. குறிப்பால் - திருவருட் குறிப்பினாலே தோன்றிய தமதுள்ளக் குறிப்புக் காரணமாக.
உலகின் எம்மருங்கும் நீங்க உடனணைந் தருள - தாம் ஒரு பற்றுமின்றிச் சீவன் முத்தநிலையிலிருந்தாரேனும் உலகைத் தீமை நீக்கி நன்னெறி காட்டி உய்வித்தற் பொருட்டுத் திருவருளால் வந்தாராதலின் அந்த அளவில் கொண்ட உலகத் தொடர்புகள் எல்லாமும் நீங்கிச் சிவனடியே மறவாத நிலையில் சிவனுடன் அணைய விரும்பி. கிளையும் - கூட்டமுஞ் - சூழ - நீங்க - உடனணைந்தருள வேண்டி என்று கூட்டியுரைத்தலுமாம்.
குலமணம் புரிவித்தார் - அந்தணரது மறையொழுக்கத்தை உலகிற் காட்டும் பொருட்டு அக் குலத்துக்கேற்ற மண ஒழுக்கத்தை மேற்கொள்ளும் இசைவு வரக் கூட்டுவித்தருளிய இறைவர் என்பது; தம் செயல் என்ப தொன்றுமின்றி எல்லாம் இறைவர் செயலேயாகக் காண்பது பிள்ளையாரது நிலையாதலின் தாம் மண இசைவு கொண்டதனை இறைவர் தந்த செயலேயாகக் கொண்டனர் என்க; "அவனே தானேயாகிய வந்நெறி, ஏக னாகி யிறைபணி நிற்க"(போதம்) என்ற ஞானநூற் றுணிபின்வழிக் கண்டுகொள்க.

2143

3142
சிவனமர்ந் தருளுஞ் செல்வத் திருப்பெரு மணத்தை யெய்தித்
தவநெறி வளர்க்க வந்தார் தலைப்படுஞ் சார்பு நோக்கிப்
"பலமற வென்னை முன்னா ளாண்டவப் பண்பு கூட
நவமலர்ப் பாதங் கூட்டு" மென்னுநல் லுணர்வு நண்ண,

1244

3143
காதன்மெய்ப் பதிகங் "கல்லூர்ப் பெருமண" மெடுத்துக் கண்டோர்
தீதுறு பிறவிப் பாசந் தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு
"நாதனே! நல்லூர் மேவும் பெருமண நம்ப னே!யுன்
பாதமெய்ந் நீழல் சேரும் பருவமீ" தென்று பாட,

1245

3144
தேவர்க டேவர் தாமுந் திருவருள் புரிந்து "நீயும்
பூவையன் னாளு மிங்குன் புண்ணிய மணத்தில் வந்தார்
யாவரு மெம்பாற் சோதி யிதனுள்வந் தெய்து" மென்னு
மூவுல கொளியால் விம்ம முழுச்சுடர்த் தாணு வாகி,

1246

3145
கோயிலுட் படமே லோங்குங் கொள்கையாற் பெருகுஞ் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட, மன்னுசீர்ப் புகலி மன்னர்
பாயின வொளியா னீடு பரஞ்சுடர்த் தொழுது போற்றி
மாயிரு ஞால முய்ய வழியினை யருளிச் செய்வார்,

1247

3146
"ஞானமெய்ந் நெறிதான் யார்க்கு நமச்சிவா யச்சொ லா"மென்
றானசீர் நமச்சி வாயத் திருப்பதி கத்தை யங்கண்
வானமு நிலனுங் கேட்க வருள்செய்"திம் மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக!" வென்ன,

1248