806திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

 வாய்பாட்டினல் அணையும் என்றார்; "முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை, யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து, மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்" (தொல் - சொல் - வினை 43) என்பதிலக்கணம்; இது முக்காலமுந் தோன்று மியல்பினை, இக்கருத்துப் பற்றியே பின்னர்க் குலச்சிறையாரது திருவாக்கில் விரித்தல் (2557) காண்க; அன்று பிள்ளையாரது அணைதலே இன்றும் சைவம நிகழ்வதற்குக் காரணமா யுள்ளது என்பது தேற்றம்.
 

654

2553
அஞ்சலி குவித்த கரங்களுந் தலைமே
   லணைந்திடக் கடிதுசென் றணைவார்,
நஞ்சணி கண்டர் தந்திரு மகனா
   ருடன்வரு நற்றவக் கடலை
நெஞ்சினி னிறைந்த வார்வமுன் செல்லக்
   கண்டுநீ ணிலத்திடைத் தாழ்ந்து
பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர்
   பாங்குற வணைந்துமுன் பணிந்தார்.
 

655

 (இ-ள்) அஞ்சலி...அணைவார் - அஞ்சலியாகக் கூப்பிய கைகளும் தலையின் மேலே சேர விரைந்து சென்று அணைவாராகி; நஞ்சனி...கண்டு - விடத்தை அணிந்த கண்டராகிய இறைவரது திருமகனாருடன் வரும் நல்ல தவமுடைய அடியார்களின் கடல்போன்ற திருக்கூட்டத்தை மனத்தில் நிறைந்த ஆசை முன்செல்ல அகநோக்கிற் கண்டுகொண்டாராதலின்; நீள் நிலத்திடை...பணிந்தார் - நீளும் நிலத்தின் மிசைத் திருமேனி பொருந்த வீழ்ந்து பாண்டிய மன்னரது மந்திரிகளுள் தலைவராகிய கலச்சிறையார் பாங்குறச் சென்று முன்னே பணிந்தனர்.
 (வி-ரை) அஞ்சலி...அணைவார் - காளத்தின் ஓசை செவியில் நிறைய, உடனே தலத்தின் மேற்பணிந்தார்; எழுந்தார்; கைகள் கூப்பின வண்ணமே தாமே தலைமேல் ஏறின; விரைவாக ஓசைவரும் திசை நோக்கி முன்னே அணைவாராயினர்; இவ்வாறாக; கரங்கள் தலைமேல் அணைந்திட - தம் முயற்சியின்றிக் கைகள் தாமே சிரமேற் கூப்பியபடியே ஏறின;
 மகனார் - அவர் அளித்த பால் உண்ட முறைமையால் மகனார் என்று உபசரிக்கப்பட்டவர்., 1666லும் 1966லும் முன் பலவிடத்தும் உரைத்தவை பார்க்க.
 மகனாருடன் வரும் நற்றவக்கடல் - பிள்ளையாருடன் வருதற்கு முன்னை நற்றவம் புரிந்த அடியவரின் கூட்டம். கடல் போன்ற பரப்புடையதனைக் கடல் என்றதுபசாரம்.
 நெஞ்சினில்...ஆர்வம் - முன்செல்லக் கண்டு - தாழ்ந்து பணிந்தார்; முன் பாட்டில் ஓசை செவி நிறையக் கேட்டு நிலமிசைத் தாழ்ந்து பணிந்தார் இங்கு, அவ்வோசை வழி எரிர் நோக்கி நெஞ்சம் முன்னே சென்று கண்டு கொண்டமையால் கண்டு தாழ்ந்து பணிந்தார்; முன்னர்க் கேட்டுப் பணிந்தார்; இங்குக் கண்டுப் பணிந்தார். ஆயின் கண் கூடாகக் காண்பது பின்னரேயாயினும், இப்பொழுது ஆர்வம் முன் செல்ல மனத்தாற் கண்டு பணிந்தனர் என்பதாம்.
 மந்திரித் தலைவர் - நிலத்திடைத் தாழ்ந்து பணிந்த நிலையே கிடந்தவர் பின்னர்ப் பிள்ளையார் திருக்கைகளாற் பற்றி எடுக்கவே எழுந்தனர். 2555 பார்க்க. இந்நிலை மந்திரித் தொழிலின் பேரறிவுடைய முயற்சி வகைகளுள் ஒன்றாமென்பார் மந்திரித்