| தலைவர் என்ற தன்மையாற் கூறினார். இது பின்னர்க் காட்டுதும்; (2555 பார்க்க.) ஆசிரியர் பெருமானும் மந்திரியாராதல் கருதுக. |
| பாங்குற - தமிழ்நாடு பாங்கு பெறும் பொருட்டு; பாங்குறப் பணிந்தார் என்று கூட்டுக. |
| முன் - திருக் கூட்டத்தின் முன் அணிகள் சேர்வதற்கும் முன்பு. |
| 655 |
2554 | நிலமிசைப் பணிந்த குலச்சிறை யாரை நீடிய பெருந்தவத் தொண்டர் பலருமுன் னணைந்து வணங்கிமற் றவர்தாம் படியினின் றெழாவகை கண்டு, மலர்மிசைப் புத்தேள் வழிபடும் புகலி வைதிக சேகரர் பாதங் குலவியங் க்ணைந்தார் தென்னவ னமைச்சர் குலச்சிறை யாரெனக் கூற, | |
| 656 |
2555 | சிரபுரச் செல்வ ரவருரை கேட்டுத் திருமுகத் தாமரை மலர்ந்து விரவொளி முத்தின் சிவிகைநின் றிழிந்து விரைந்துசென் றவர்தமை யணைந்து கரகம லங்கள் பற்றியே யெடுப்பக், கைதொழு தவருமுன் னிற்ப, வரமிகு தவத்தா லவரையே நோக்கி வள்ளலார் மமுரவாக் களிப்பார், | |
| 657 |
2556 | "செம்பியர் பெருமான் றிருமக ளார்க்குந் திருந்திய சிந்தையீ ருமக்கும் நம்பெரு மான்றன் றிருவருள் பெருகு நன்மைதான் வாலிதே; " யென்ன வம்பல ரலங்கன் மந்திரி யாரு மண்மிசைத் தாழ்ந்தடி வணங்கித் தம்பெருந் தவத்தின் பயனனை யார்க்குத் தன்மையா நிலையுரைக் கின்றார், | |
| 658 |
2557 | "சென்றகா லத்தின் பழுதிலாத் திறமு மினியெதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுந் தருளப் பெற்ற பேறிதனா லெற்றைக்குந் திருவரு ளுடையேம்; நன்றியி னெறியி லழுந்திய நாடு நற்றமிழ் வேந்தனு முய்ந்து வென்றிகொ டிருநீற் றொளியினில் விளங்கு மேன்மையும் படைத்தன" மென்பார்; | |
| 659 |