808திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

2558
"இங்கெழுந் தருளும் பெருமைகேட் டருளி
   யெய்துதற் கரியபே றெய்தி
மங்கையர்க் கரசி யாரு'நம் முடைய
   வாழ்வெழுந் தருளிய' தென்றே
'யங்குநீ ரெதிர்சென் றடிபணிவீ 'ரென்
   றருள் செய்தா" ரெனத்தொழு தார்வம்
பொங்கிய களிப்பான் மீளவும் பணிந்து
   போற்றினார் புரவல னமைச்சர்.
 

660

 2554. (இ-ள்) நிலமிசை...வணங்கி - நிலத்தின் மேல் வீழ்ந்து பணிந்த வண்ணமேயிருந்த குலச்சிறையாரை நீடும் பெரிய தவத்தினையுடைய தொண்டர்கள் பலரும் முன்பு வந்து அணைந்து வணங்கி; மற்று அவர் தாம்...கண்டு; மலர்மிசை...கலவி - பிரமதேவர் வழிபட்ட சீகாழியில் வந்த வைதிகத் தலைவராகிய பிள்ளையாரது பாதங்களை அடைந்து வணங்கி; "அங்கு...குலச்சிறையார்" எனக் கூற - "அங்குப் பாண்டியனது அமைச்சனாராகிய குலச்சிறையார் அணைந்துள்ளார்" என்று சொல்ல,
 

656

 2555. (இ-ள்) சிரபுரச் செல்வர்...அணைந்து - சீகாழிச் செல்வராகிய பிள்ளையார் அவர்களது சொற்களைக் கேட்டுத், திருமுகமாகிய தாமரை மலர்ந்து, பொருந்திய ஒளியினையுடைய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி விரைவுடன் சென்று அவரை அணைந்து; கரகமலங்கள்...எடுப்ப - கைகளாகிய தாமரைகளாற் பற்றியே மேல் எடுப்ப; அவரும் கைதொழுது முன்நிற்ப - அக் குலச்சிறையாரும் கைதொழுது திரு முன்பு நிற்க; வரமிகு...அளிப்பார் - வரம்மிகும் செவ்வியினின்ற அவரது தவங் காரணமாக அவரையே நோக்கி வள்ளலாராகிய பிள்ளையார் இனிய திருவாக்கினை அளிப்பாராகி,
 

657

 2556. (இ-ள்) "செம்பியர் பெருமான்...வாலிதே" என்ன - சோழ மன்னரகு திருமகளாராகிய மங்கையர்க்கரசி யம்மையாருக்கும் திருந்திய சிந்தையினையுடைய உமக்கும் நமது சிவபெருமானுடைய திருவருள் பெருகும் நன்மைதான் சிறந்துள்ளதே" என்று சொல்ல; வம்பலர்...வணங்கி - மணமுடைய மாலையினை அணிந்த மந்திரியாரும் நிலமுற வணங்கி நின்று; தம்பெரும்...உரைக்கின்றார் - தமது பெருந்தவத்தின் பயனே போன்ற பிள்ளையாருக்கு நிகழும் தன்மையாகிய நிலையினை எடுத்துச் சொல்கின்றாராகி,
 

658

 2557. (இ-ள்) சென்ற காலத்தின்...திருவருளுடையேம் - சென்ற காலத்திலே பழுதின்றி நின்ற திறமும், இனி எதிர்காலத்தில் வரும் சிறப்புடைய திறமும், இன்று தேவரீர் எழுந்தருளப்பெற்ற பெரும் பேற்றினால் விளங்கும்; இதனால் முக்காலத்திலும் திருவருளுடையோம்; நன்றியில்...படைத்தனம் என்பார் - நன்றியில்லாத (அமண்) நெறியிலே அழுந்திய இந்நாடும் நற்றமிழ் அரசனும் உய்திபெற்று வெற்றி கொள்ளும் திருநீற்றின் ஒளியினில் விளங்கும் மேன்மையினையும் பெற்றோம் என்பாராகி,
 

659

 2558. (இ-ள்) "இங்கெழுந்தருளும்...எழுந்தருளியது" எனத்தொழுது - இங்குத் தேவரீர் எழுந்தருளும் பெருமையினைக் கேட்டருளியவுடனே மங்கையர்க்கரசியம்மையாரும் 'நம்முடைய வாழ்வு எழுந்தருளி வருகின்றது' என்றுகூறி, 'அவ்