822திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

 

திருவாலவாய்

 

திருச்சிற்றம்பலம் திருவிருக்குக்குறள் - பண் - குறிஞ்சி

2565
நீல மாமிடற், றால வாயிலான், பால தாயினார், ஞால மாள்வரே. (1)
அடிக ளாலவாய்ப், படிகொள் சம்பந்தன், முடிவி லின்றமிழ், செடிக
ணீக்குமே.
 

திருச்சிற்றம்பலம்.

  பதிகக் குறிப்பு:- பாண்டி நாட்டில் உற்ற தீமைகளை நீக்கிப் பாண்டியனையும் அந்நாட்டிறையும் வெண்ணீறு இடுவித்துச் சிவநெறியிற் புகுத்துதல் கருத்து.
 

பதிகப்பாட்டுக் குறிப்பு:- (1) நீலமாமிடற்று ஆலவாயிலான் - விடமுண்டு அமரர்களைக் காத்தமைபோல அமண் கழுவிப் பாண்டிநாட்டினைக் காப்பர்; பாலதாயினார் - அவன் சார்பு இப்போதின்றி இனிப் பெற்றுச் சைவராவார்; ஆயினார் - ஆள்வர் - ஆக்கச்சொல், அவ்வாறாதல் வருங்காலம் என்பதனையும், ஆவான் அரசன் என்பதனையும் குறித்தது; "அகில காரணர் தாள்பணி வார்கடாம், அகில லோகமு மாளற் குரியர்"(139) என்ற கருத்தும் காண்க;- (2) ஞாலம் - உலகங்கள்; ஏழுமாம் - கலப்பினாலும் நிமித்த காரணராம் தன்மையாலும் இவ்வாறு கூறினார்; சீலம் - சரிதை- (3) ஆலநீழலார் - கல்லாலின் அடியில் இருப்பவர்; பாலதாமின் - உலகர்க்கும் அந்நாட்டவர்க்கும் அருளினால் உபதேசித்தது.- (5) ஆடல் - சார்விலாதாரை அடுகின்ற தன்மை; மாயப் பசுவை வதைத்த திருவிளையாடல் காண்க.- (10) தோமண் செற்ற வீரன் - சரிதக் குறிப்பும் உடையது; செற்ற - துணிவுபற்றி இறந்தகாலத்தாற் கூளினார்;- (11) செடிகள் - நாட்டுக்கு அந்நாள் நேர்ந்த கேடும், இனி இப்பதிகத்தினைப் பயில்வார்பால் வரக்கூடியனவாகிய தீமைகளும் ஆம்.

2566
சேர்த்து மின்னிசைப் பதிகமுந் திருக்கடைக் காப்புச்
சாத்தி, நல்லிசைத் தண்டமிழ்ச் சொன்மலர் மாலை
பேர்த்து மின்புறப் பாடி, வெண் பிறையணி சென்னி
மூர்த்தி யார்கழல் பரவியே திருமுன்றி லணைய,
 

668

2567
பிள்ளை யாரெழுந் தருளிமுன் புகுதுமப் பொழுது
வெள்ள நீர்பொதி வேணியார் தமைத்தொழும் விருப்பால்
உள்ள ணைந்திட வெதிர்செலா தொருமருங் கொதுங்குந்
தெள்ளு நீர்விழித் தெரிவையார் சென்றுமுன் பெய்த,
 

669

 2568
மருங்கின் மந்திரி யார்பிள்ளை யார்கழல் வணங்கிக்
கருங்கு ழற்கற்றை மேற்குவி கைத்தளி ருடையார்
"பருங்கை யானைவாழ் வளவர்கோன் பாவையா" ரென்னப்
பெருங்க ளிப்புடன் விரைந்தெதிர் பிள்ளையா ரணைந்தார்,
 

670

2569
தென்ன வன்பெருந் தேவியார் சிவக்கன்றின் செய்யய
பொன்ன டிக்கம லங்களிற் பொருந்தமுன் விழுந்தார்;
மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ்சிறந் தளிக்கும்
இன்ன ருட்பெருஞ் சிறப்பொடுந் திருக்கையா லெடுத்தார்.
 

671

 2566. (இ-ள்) சேர்த்தும்...சாத்தி - சேர்க்கின்ற இனிய இசையினையுடைய பதிகத்தினையும் திருக்கடைக் காப்புச் சாத்தி நிறைவாக்கி; நல் இசை...பாடி - நல்ல