| கேடு; "தக்க தல்லதீங் கடுத்தது சாற்றுதற்கு" (682) என்றும், "கண்டு முட்டுயாம்" என்றும் கூறுவனகாண்க; பதி - என்று பாடங்கொண்டு பதியின் மன்னவன் என்பாருமுண்டு; |
| சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒருபடி துணிவார் - கண்டதனையும் கேட்டதனையும் சொல்லுதலேயன்றி மேலும் வஞ்சனைச் செயல் சூழ்வதனையும் துணிந்து கொண்டனர். சூழ்ச்சி - வஞ்சநினைவு; ஒருபடி - ஒருசேர; கடைக்காவலர் - வாயில் காப்போர்; குறுகி - வஞ்சமும் சூழ்ச்சியும் துணிந்து தகுதியற்ற செயலிற் புகுகின்றராதலின் நிமிர்ந்து செல்ல மாட்டாது குறுக்கமாகிய நிலையிற் சென்றனர் என்ற குறிப்புமாம். "அடிகண்மா ரெல்லாரு மாகுலமாய் மிகவழிந்து"(1351) என்ற நிலை கருதுக; கவலையி னிலைகாட்ட உடற் குறுக்கத்தினைப் பாசாங்காக மேற் கொண்டனர் என்றலுமாம்; |
| "வெற்றி...விளம்புவீர்" என்றார் - அரச சமுகத்திலும், பெரியோர் முன்பும் முன் அறிவிப்புச் செய்து விடை பெற்றபின் செல்லும் மரபு . இது முன்னாள் முதன் நமது நாட்டில் வழங்கியது; 2507-2509 பார்க்க. வேலவற்கு - வேல் - ஆயுதப் பொதுமையுணர்த்தி நின்றது; தடாதகைப் பிராட்டியார்பால் வேல் வளை செண்டு பெற்ற உக்கிரகுமார பாண்டியர் மரபில் வந்த என்ற குறிப்புமாம்; எங்களை - நாங்கள் வந்தணைந்ததனை. |
| 680 |
2579 | வாயில் காவலர் மன்னவன் றனையெதிர் வணங்கி "யாய மாகிவந் தடிகண்மா ரணைந்தன"ரென்ன, வேயி னானணை வாரென, வவருஞ்சென் றிசைந்தார்; பாயி னாலுடன் மூடுவார் பதைப்புடன் புக்கார். | |
| 681 |
| (இ-ள்) வாயில் காவலர்...என்ன - வாயில் காப்போர் சென்று அரசன் முன்பு வணங்கி "அடிகண்மார்கள் எல்லாரும் கூட்டமாக வந்தணைந் துள்ளார்" என்று அறிவிக்க; ஏயினான் "அணைவார்" என - அவ்வடிகண் மாருடனே ஒத்த கருத்துடையானாகிய அரசன் "அவர்கள் அணைவார்களாக " என்று கூற; அவரும் சென்று இசைத்தார் - அவர்களும் புறத்துச் சென்று அடிகண்மார்களிடம் அதனைச் சொன்னார்கள்; பாயினால்...புக்கார் - பாயுடுக்கையினால் உடலை மூடும் அச்சமணமுனிவர்கள் பதைப்போடும உள்ளே புகுந்தனர். |
| (வி-ரை) என்ன: - என; - இசைத்தார்; - புக்கார்; என வாயில் காப்போர் அரசனிடம் அறிவித்த செயலும் அரசன் கூறியதும், அதனை அவர்கள் அடிகண்மாருக்கு அறிவித்ததும், அதன்படி அவர்கள் உள்ளே புகுந்ததும் ஆகிய நான்கு செயல்களையும் இவ்வொரு பாட்டிற் செறிவு பெறக் கூறினார். அவை நிகழ்ந்த மிக்க விரையும், மனக் கலக்கத்துடன் பதைத்து நின்ற நிலையும் உணர்த்துவதற்கு. அம்மையாரும் குலச்சிறையாரும் விடுத்த பரிசனங்கள் திருமறைக்காட்டிற் சென்று பிள்ளையார் பால் சேர்ந்தறிவித்த நிலையினை முன் 2505 - 2509. வரை - 5 பாட்டுக்களாற் கூறிய அமைதியினை ஈண்டு ஒப்பு நோக்குக. சைவ ஆக்கத்தின் பெருக்கமும், சமணத்தின் அழிவாகிய சுருக்கமும் குறிப்பிற் பெறவைத்த நயமும் காண்க; |
| ஆயமாகி - கூட்டமாகக் கூடி; அடிகள்மார் - சமண முனிவர்கள்; கள் - சிறப்பும், மார் பன்மையும் உணர்த்திய விகுதிகள்; |
| ஏயினான் "அணைவார்" என - ஏயினான் - ஒத்தவன்; அடிகள்மாருடன் ஒத்த கருத்துடையவன்: ஏய்தல் - ஒத்தல்; (மனம்) பொருந்துதல் என்றலுமாம்; அணைவார் - அணைவாராக ; ஏயினான் - இசைந்தவனாய் என்றலுமாம். |