[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்843

  செல்ல மாட்டாமையும் ஆண்டே கண்டு கொள்க; இதன் உண்மை 2596-ல் ஆசிரியர் காட்டுதலும் காண்க. வெந்தழற் பட - பட என்பது யாம் அத் தீக்காரணமாக வாதம் மூண்டு பட்டொழிய என்று பிற்சரித விளைவுக் கறிகுறியதாக அவர் வாக்கிலே போந்த திறமும் காண்க.
  இந்த நன்னக ரிடத்திரான் ஏகும் - தமது சார்பு நற்சார்பு என்றும், சைவர் சார்பு அங்ஙனமல்லாத தொன்றாய் விலக்கப்படற் குரியது என்றும் குறிப்புப் பெற நன்னகர் என்றது மேலுமொரு சூழ்ச்சித்திறம். இரான் - இரானாகி; முற்றெச்சம். முற்றாகவே கொள்ளினு மிழுக்கில்லை.
  மாநகரிடத்து - என்பதும் பாடம்.
 

688

 

வேறு

2587
"ஆவதொன் றிதுவே யாகி லதனையே விரைந்து செய்யப்
போவ"தென்றவரைப் போக்கிப் பொய்பொரு ளாகக்கொண்டான்
யாவது முரையா டாதே யெண்ணத்திற் கவலை யோடும்
பூவணை யமளி புக்கான்; பொங்கெழிற் றேவி சேர்ந்தாள்.
 

689

  (இ-ள்) ஆவதொன்று...போக்கி - "செய்யலாவது ஒன்று இதுவேயானால் அதனையே விரைந்து செய்யப் போவீராக" என்று கூறி அவர்களைப் போகும்படி விடுத்து; பொய் பொருளாகக் கொண்டான் - பொய்யினைப் பொருள் என்று கொண்ட மன்னவன்; யாவதும்...புக்கான் - யாதும் யாவரிடமும் பேசாமல் மனத்தில் நிறைந்த கவலையினோடும் மலர்கள் பரப்பிய படுக்கையிற் சேர்ந்தனன்; பொங்கெழில் தேவி சேர்ந்தாள் - மிக்கெழுகின்ற எழிலையுடைய பாண்டிமா தேவியார் அங்குச் சேர்ந்தனர்.
  (வி-ரை) ஆவது ஒன்று இதுவே ஆகில் - ஆவது - செய்யலாவது; செய்யத்தக்கது; ஒன்று - வேறு பலவன்றி ஒன்றேயாக; இதுவே யாகில் - இதுவேயன்றிப் பிறிதில்லையானால்; அரசன் கூறும் பொறுப்புவாய்ந்த நிலைகாண்க; விருந்தாக வந்தவனைப் போக்குதல் நீதிநுல் விலக்கு; அரசாங்க முறைக்கும் தவறு; குடியிருக்கும் மடத்தில் தீப்பட விளைத்தல் அரசாங்க முறைக்கும் தான் மேற்கொண்ட சமண சமய நுலுக்கும் விலக்கு; இவற்றையெல்லாம் உணர்ந்து அறிவினுட்கொண்ட அரசன் "செய்தக்க செய்யாமை யானுங் கெடும்"(குறள்) என்பது நீதியாதலின், அக்குறிப்பினை உட்கொண்டு செய்யலாவது ஒன்று என்றான்; ஒன்று - இது ஒன்று தவிர வேறொன்றுமில்லை யெனும்படி ஒரேவழி - என்பது குறிப்பு - இதுவே யாகில் - ஏகாரம் பிரிநிலை ; இதனை விட்டு வேறு வழியில்லையாயின்; முன்னரும் உற்ற செய் தொழில் என்ற குறிப்புக் காண்க.
  அதனையே - ஏகாரம் தேற்றம்; ஆகில் அதனையே - அஃது ஆவதோ அன்றோ என முடிக்கும் பொறுப்புத் தன்னிடமாக மேற் கொள்ளாது அவ்வடிகளிடமே சார்த்தின அரச தந்திர முறையின் மேன்மை கருதுக.
  போவது - போவீராக; போவது செய்க என்ற வியங்கோள் தொக்கு நின்றது; இதனுடன் தொலைந்து முடிவுற் கழுவேறிக் கழிந்து போவது என்ற குறிப்பும் காண்க.
  போக்கி - மன்னனிடத்து அவர்களுக்கு இருந்த மேன்மை நிலை இதனுடன் கழிந்து போவதாயிற்று என்ற பிற்சரித விளைவுக் குறிப்புக் காண்க. உயர் நிலையே