[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்861

  நீற் றொளியினில் விளங்கு மேன்மையும் படைத்தனம்" (2557) என்றதனால் அவரன்பு தேற்றமாதல் காண்க.
  அரசன்பால் அபராதம் உறுதலாலும் - அம்மையார்க்கும் அமைச்சனார்க்கும் அருளுதல் வேண்டப்படின் அரசனைத் தீப்பிணி வாராது வாளா விடுத்திருக்கலாமே? எனின், அற்றன்று; அரசனிடம் வந்த சிவாபராதத்திற்குக் கழுவாய் செய்து தூயனாக்க வேண்டிய கடப்பாடு பற்றி இவ்வாறருளினார் என்பதாம்.
  மீண்டு.....ஆதலாலும் - இவையிரண்டும் தொடர்புடைமை பற்றி ஒரு காரணமாகக் கொள்ளப்பட்டன; மீண்டு சிவநெறி யடைதல் விதி - இறைவர் நியதி - என்பதும், அதற்கு வாயிலாகிய சாதனம் அவன்தனது முன்னைத் தவத்தால் பெற்றுடையன் என்பதுமாம்; "என்பதியும் செய்த தவமென்கொல்"(2570) என்று அம்மையார் கூறியருளியது காண்க. புகலி வேந்தர் தீண்டி வெண்ணீறு இட என்க; பேறு முன்னைத்தவம். இடுதல் - பூசுதல்.
  தீப்பிணியை - தீயாகிய பிணிப்பினை; ஈண்டுப் பிணி என்றது கட்டி வீழ்த்தும் வினை என்ற பொருள்பட நின்றது. பிணித்தல் - கட்டுதல் தமது அருளால் தீயின் உருவாய் வரும் பிணி - நோய் - என்றலுமாம்.
  குறிப்பு - வரலாறு கருதலில் முன்னும் மேலும் தொடர்ந்து செல்லும் கலிநிலைத்துறைச் சந்த யாப்பினிடையில் இப்பாட்டுத் தனித்து எண்சீர் விருத்தமாகப் புகுந்து நிற்கின்றதனாலும், ஆசிரியரது சிறந்த பொருட்செறிவும் சொற்பண்பும் இன்மையாலும், பாதுகாத்தும், அன்பினாலும், உறுதலாலும், விதியினாலும், ஆதலாலும் எனவரும் முடிபுகள் பொருந்தாமையாலும், குலச்சிறையார் அன்பினால் என்றது பொருந்தாமை யாலும், தீயைச் செல்க என்றதன்றிப் பிணியைச் செல்க என்பது பதிகத்துச் சொல்லும் கருத்து மன்றாதலாலும், "புத்தரொ டமணை வாதி லழிவிக்கு மண்ண றிருநீறு செம்மை திடமே" (தேவா) என முன்னர் அருளியமையாலும், "வெண்ணீறு வேந்தனையு மிடுவித்து" (2512) என்று தொண்டர்கள் செய்த விண்ணப்பத்தின்படி ஆக என்று முன்னரே "அருள் புரிந்த"ன(2513) ராதலால் இப்பாட்டு வேண்டப்படாமையாலும், இஃதன்றியே வரலாறு இடையீடின்றித் தொடர்ந்து செல்வதாலும், பிறவாற்றாலும் இப்பாட்டுப் பிற்காலத்துப் புலவரால் நேர்ந்த இடைச் செருகலோ? என்பது எனது பணிவாகிய ஐயப்பாடு; அன்பர்கள் கூர்ந்து நோக்கித் தெளிந்து கொள்வார்களாக.
 

705

 

வேறு

2604
திருந்தி சைப்பதி கத்தொடை திருவால வாயின்
மருந்தி னைச்சண்பை மன்னவர் புனைந்திட வருளால்
விரிந்த வெந்தழல் வெம்மைபோய்த் தென்னனை மேவிப்
பெருந்த ழற்பொதி வெதுப்பெனப் பெயர்பெற்ற தன்றே.
 

706

  (இ-ள்) சண்பை மன்னர் - சீகாழி மன்னவராகிய பிள்ளையார்; திருவாலவாயின் மருந்தினை - திருவாலவாயில் எழுந்தருளியுள்ள மருந்துருவமாகிய இறைவரை; திருந்து.....புனைந்திட - திருந்தும் இசையினையுடைய திருப்பதிகம் புனைந்து போற்றியருள; அருளால் - அவரது திருவருளாலே; விரிந்த...பெற்றதன்றே - விரிந்து செலுத்திய வெவ்விய தீத்தொழில் முழுதினும் கூடிய வெம்மையின் தொகுதி
  -------------------------
  1இது பற்றி எனது 'சேக்கிழார்' என்ற நூலில் 201 முதல் 224 வரை கூறியவையும், ஆண்டு இப்பாடல் பற்றி 217 - 218 உரைத்தவையும் பார்க்க.