[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்865

  பாண்டியன் கேட்பக் கிளக்கு மெய்ஞ்ஞானம்" (இருபா - 2) என்ற ஞானசாத்திரமும் காண்க.
  பிறவியும் தீரும் - தீராத பிறவியும் என உம்மை சிறப்பும்மை; எச்சவும்மையுமாம். மேல் தீக்கையின் விளைவாகிய சரிதக் குறிப்பும் காண்க.
 

விரைந்து நோக்க - என்பதும் பாடம்.

 

720

2619
மீனவன் செவியி னூடு மெய்யுணர் வளிப்போர் கூற
ஞானசம் பந்த ரென்னு நாமமந் திரமுஞ் செல்ல,
ஆனபோ தயர்வு தன்னை யகன்றிட, வமண ராகும்
மானமில் லவரைப் பார்த்து மாற்றமொன் றுரைக்க லுற்றான்;
 

721

2620
மன்னவ னவரை நோக்கி, "மற்றிவர் செய்கை யெல்லாம்
இன்னவா றெய்து நோய்க்கே யேதுவா யின" வென் றெண்ணி,
"மன்னிய சைவ நீதி மாமறைச் சிறுவர் வந்தால்
அன்னவ ரருளா லிந்நோ யகலுமே லறிவே" னென்றான்;
 

722

2621
என்றுமுன் கூறிப் பின்னும் "யானுற்ற பிணியைத் தீர்த்து
வென்றவர் பக்கஞ் சேர்வன்; விரகுண்டே லழையு" மென்ன,
அன்றவ ருவகை பொங்கி யார்வத்தா லணையை நூக்கிச்
சென்றநீர் வெள்ளம் போலுங் காதல்வெள் ளத்திற் செல்வார்;
 

723

2622
பாயுடைப் பாத கத்தோர் திருமடப் பாங்கு செய்த
தீவினைத் தொழிலை நோக்கி யுள்ளழி திருவுள் ளத்தான்
மேயவத் துயர நீங்க விருப்புறு விரைவி னோடு
நாயகப் பிள்ளை யார்தந் நற்பதம் பணிவா ராகி,
 

724

2623
மன்னவ னிடும்பை தீர மற்றவன் பணிமேற் கொண்டே
யன்னமென் னடையி னாரு மணிமணிச் சிவிகை யேறி
மின்னிடை மடவார் சூழ வேற்படை யமைச்ச னாரும்
முன்னணைந்தேகச் சண்பை முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.
 

725

  2619. (இ-ள்.) மீனவன்...கூற - பாண்டியனது காதிலே மெய்யுணர்வு அளிப்பவர்களாகிய அம்மையாரும் அமைச்சனாரும் முன் கூறியவாறு சொல்ல; ஞான சம்பந்தர் என்று...செல்ல - அதனுள் திருஞானசம்பந்தர் என்னும் திருப்பெயராகிய திருமந்திரமும் உடன் செல்ல; ஆன....அகன்றிட - அப்போது அயர்ச்சி தன்னை நீங்குதலால்; அமணராகும்...உரைக்கலுற்றான் - அமணர்கள் என்னும் மானமில்லாத மாக்களைப் பார்த்து ஒருசெய்தி சொல்லலாயினன்;
 

721

  2620. (இ-ள்.) மன்னவன்....எண்ணி - "மற்று இவர்களது செய்கைகள் எல்லாம் இப்படிப் பொருந்திய நோயினுக்கே காரணமா யிருந்தன" என்று மனத்துட் கருதி; மன்னவன் அவரை நோக்கி - அரசன் அவர்களைப் பார்த்து; மன்னிய.....என்றான் - நிலைபெற்ற சைவ நீதியின் பெருமறைச் சிறுவராகிய பிள்ளையார் இங்கு வந்தால் அவருடைய அருளினாலே இந்த நோய் நீங்குமாகில் அறிவேன்" என்று கூறினானாகி,
 

722