| றிறம்பி வேறு முனிவு கொள்ளாது, அரசனையும் நாட்டவரையும் ஆட்கொண்டு திருத்தியருளும் கருணையே திருவுள்ளமே கொண்டு "பையவே சென்று....ஆகவே" என்று ஆசி புரிந்தமையாலும், மேல்வருவனவற்றாலும் உணரப்படுதலை உட்கொண்டு கூறியது. |
| மதுரை நண்ண - ஆலவாயின் முதற் பெயர்; "மதுரைத் தொன்னகர் வந்தணைகின்றார்" (2528) என்றதனைத் தொடர்ந்து கூறியவாறு காண்க. "மதுரையின் புறத்து" (2544); "மதுரை தோன்றுதலும்" (2559); மதுரை என்ற பெயர் போந்த வரலாற்றில் அறியப்படுமாறு போல இங்குப் பிள்ளையாரால் புனிதமாக்கப்படும் நகரமாம் என்ற குறிப்பு; |
| தீய அநுசிதம் அதனால் - தீமையை வாக்கினாலும் சொல்லாகா தென்ற மரபு பற்றித் கூறியது; தீய - தீயை உட்கொண்ட என்ற குறிப்பும் காண்க. |
| இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே - முன்னர் இதன் கொடுமை என்றதனால் நோயினையும்; தீய அநுசிதம் என்றதனால் நோய் மூலத்தையும், கூறியவாறே, தீர்வு என்றதனால் "அது தணிக்கும் வா" யினையறிவித்தபடி; "வாய்ப்பச் செயல்" என்றதனை வரும் பாட்டுக்களிற் கூறுதல் காண்க. "நோய்நாடி நோய்முத னாடியது தீர்க்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" (குறள்); என்று - என்று சொல்லி; என்று - என்றார் எனமேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
| அருகர்கள் - எதிர்பணிந் தெய்த - இரவு செய்த அனுசிதம் - என்பனவும் பாடம். |
| 2618. (வி-ரை.) காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் - அமணர்: காயம் கழுவாமை பிராணிகள் சாம் என்று உடல் குளியாதிருக்கும் சமணரது வழக்குக் குறித்தது; "கழுவாவுடலம்" (ஆளு - பிள் - திருவந் - 28); மனமாசு கழுவாமை - மனம் தூய்மை செய்யாது வஞ்சனை நிறைதல். |
| செய்யும் மாயம் - தாம் செய்த வஞ்சத் தீச்செயலினையும், அதனால் இது விளைந்த தென்றதனையும் வெளிப்படுத்தாது ஒன்று மறியாதார் போன்று நடித்து நோய் தீர்க்க முயலும் வஞ்சம்; மாயம் - பாசாங்கு - மறைவு - என்ற பொருளில் வந்தது. |
| வளர்ப்பதே - தணிப்பதன்றி வளர்ப்பதனையே செய்யும்; ஏகாரம் பிரிநிலை செய்யும் (ஆகும்) என்பதும் தொக்கு நின்றது. |
| வளர் வெண்திங்கள் மேயவேணியர்பால் ஞானம் பெற்றவர் - இறந்துபட நின்ற மதியினை வளர்வித்த இறைவன்பால் பெற்ற ஞானம் ஆதலின் அந்நிலையினின்ற அரசனையும் உய்விக்க வல்லது என்பது குறிப்பு; பால்ஞானம் - பாலின் வழிபெற்ற என்ற சரிதக் குறிப்பும் தர நின்றது. |
| விரும்பி நோக்கப்....பிணிதீரும் - விரும்பி நோக்க - "இருநோக் கிவளுண்கனுள்ள தொருநோக்கு, நோய்நோக்கொன் றந்நோய் மருந்து" (குறள்) என்புழிப் போலக் கொள்க; பாண்டியற்காகவே என்ற மறக்கருணை நோக்கால் வந்த நோய், விரும்பி நோக்கும் அறக்கருணை நோக்கினால் தீரும் என்பது; |
| விரும்பி நோக்கிற் - பிறவியும் தீரும் என்றது பார்த்த பார்வையால் மலநீக்கம் செய்து முத்தி சாதனம் தரும் பரமசாரியராதல் குறிக்கப்பட்டது; "சிரபுரத் தலைவர் தீண்டி - நீறு பூசப்பெற்று - முதல்வனையறியுந் தன்மை, துன்னினான் வினைக ளொத்துத் துலையென நிற்ற லாலே" (2717) என்றும், "மீனவற் குயிரை நல்கி மெய்ந்நெறி காட்டி" (2757) என்றும் வரும் தீக்கைமுறைக் குறிப்புக்கள் காண்க. "மன்ற |