[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்877

  ஆனபோது அகன்றிட - அப்போதே அயர்ச்சி நீங்கிட; மந்திரசத்தி தொழிற்பட்டவுடன் பயன் தந்த விரைவு குறித்தது; போது - தேற்றேகாரம் தொக்கது; மின்சார வேகம் (Elctrict Spee) என்பது முதலாகத் தாமறியளவையில் சடசத்தியின் வேகம் பற்றி வழங்குவர் நவீனர்; ஆனால் இது சிவசிற்சத்தியின் றொழிற்பாடாதலின் நினைவின் மாத்திரையின் பயன் விளைப்பதாம்.
  அகன்றிட - அகன்றிடலான்; கருத்தொழிந் துரைமறந்த நிலையில் நோய் முற்றிக் கிடந்த அரசன், நோய் நீங்காத நிலையிலிருந்தேயும் கருதவும் உரைக்கவும் வல்லனாயினதன் காரணங் கூறியபடி.
  மான மில்லவர் - அமணர்; வஞ்சனையும் பொய்யும் நிறைந்தும் அது புறத்துத் தோன்றாவகை கரந்து ஒழுகுதலும், தமது செயல் பயன்றராமை கண்டும் திருந்தாது மேலும் அவ்வாறே செயல் செய்தலும் முதலாயின உடையவர்.
  மாற்றம் ஒன்று - மாற்றம் - சொல்; "வள்ளலார் நாமம் சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து"க் கூறிய (2584) முன்னை நிலையினின்று மாறுதல் பெற்ற என்ற குறிப்புப்பட இங்கு மாற்றம் என்றார். முன் அமணர் கூறியதும் பிள்ளையாரது நாமம் தான்; இங்கு அம்மையார் - அமைச்சனார் (2584) கூறியதும் அத்திரு நாமமேயாம்; ஆயின் இங்கு அதனையே மெய்யுணர் வளிப்போர் கூறியவாற்றால் அது முன்னை நிலையினை மாற்றியது என்க; ஒன்று - ஒப்பற்றது என்றும், பலபடியாகச் செல்லாது இனி ஒரே படியாய்ச் செல்வது என்றும் கொள்ள நின்றது.
 

721

 

2620. (வி-ரை.) அவரை நோக்கி....எண்ணி - ஈண்டு நோக்கி - என்றது கருத்தினுள் வைத்து ஊன்றி அளந்து என்ற அக நோக்கத்தினை உணர்த்தி நின்றது முன்பாட்டில் பார்த்து என்றது புறப்பார்வை யாதலிற் கூறியது கூறலண்மை யுணர்க; மேல் எண்ணி என்றதும் காண்க; எண்ணி - துணிந்து; "எண்ணித் துணிக கருமம்" (குறள்); மற்ற இவர் என்றது மற்றிவர் என நின்றது. எண்ணி - அமணர்பால் வைத்த மதிப்புப்பற்றிச் சீர்தூக்கும் நிலையுமாம்.

  இன்னவாறு எய்தும் நோய்க்கே ஏது - காரண காரிய முறைமையாலே செய்கையான் விளைந்தது இந்நோய் என்று வழியளவையான் அறிந்ததாம். ஏகாரம் இன்றியமையாத இயைபு குறித்தலின் பிரிநிலை.
  மன்னிய....அறிவேன் - இஃது அரசன் எண்ணி மனத்துட்டுணிந்த முடிபினைப் புறத்திற் கூறியபடி; அறிவேன் - எனது துணிவு உண்மையோ அன்றோ என்று அறிவேன். முன் உடன்பாட்டுக் கருதலளவையால் துணிந்த உண்மையினை, மேலும் எதிர் மறைக் கருதலளவையால் நிச்சயிப்பேன் என்றதாம்; மற்றவர் செய்கையால் நோய் வந்தது என்பதனை அஃது அருளால் அகலுமாயின் முடிந்த முடிபாகத் துணிவேன் என்றது கருத்து.
  மன்னிய சைவ நீதி - சமணம் போல் இடையில் வாராததும் இடையில் அழிவு பெறாததுமாகி நிலைபெற்ற என்பது மன்னன் மனத்துள் அப்போது எழுந்த உணர்வு பற்றிக் கூறியது.
  மாமறைச் சிறுவர் - அன்னவரருளால் - "மற்ற மாமறை மைந்தன்" (2585) என்று முன் கூறியதனை ஈண்டு ஒப்பு நோக்குக.
  "ஆணவத்தோ டத்துவித மானபடி" என்றாற்போல முன் அமணர் வயமாய் நின்ற அரசனுக்கு அமணராகிய பொய்யுணர் வளிப்போர் தன்செவி நிறைக்கக் கூறியதும் வள்ளலார் நாமமோயாயினும் அது செயிர்ப்பு (கோபம்) விளையக் காரணமாய் மற்ற மைந்தன் என ஒருமையிற் கூறச்செய்தது; ஈண்டு அந் நாமமந்திரமே வாயிலாக