| பேசுதிர் - சினந்த முறையிலன்றிப் பேசுக என்க; இதனால் வாதில் வெல்ல எண்ணி வாதத்திற் கறைகூவி முற்பட்டழைத்தோர் அமணர்கள் என்பதும், அதனை உடன்பட்டுப் பிள்ளையார் அவர்கள் மேற்கொண்டெழுந்த சமய வாதத்தினை ஏற்று ஒழுங்குபட்ட முறையில் அதனைத் தாமும் செய்ய உடன்பட்டு அழைத்தருளினர் என்பதும் பெறப்பட்டன. |
| ஊத்தை வாய் - பல் துலக்கிற் புழு முதலிய பிராணிகள் சாகும் என்று பற்றுலக்காத ஒழுக்கமுடையராதலால் ஊத்தை மிக்க வாய்; இதனால் வரும் துர்நாற்றத்தை மறைக்க அவர்கள் வாய்க்கு ஒரு மறைப்பு இட்டுக் கொள்ளுதலும் வழக்கென்பர். |
| பறிதலையர் - தலை மயிரைப் பறித்த நிலையினர்; ஒருவர் சமண ஆசிரமம் புகும்போது அதனில் முதியோர் பலர் சூழ்ந்து "இப்துக் - பிற்சுக்" (இப்போது துக்கம் - பின்னால் சுகம்) என்ற மந்திரம் சொல்லிக் கொண்டு அவரது தலைமயிரைப் பறித்தல் அவர் சமய வழக்குக்களுள் ஒன்று என்பர். |
| துள்ளி...கதற - துள்ளி எழுதலும், ஒழுங்குபெற ஒவ்வொருவராயன்றி அனேகராய் எழுதலும், சூழ்ந்து கொள்ளுதலும், பதறுதலும், முறை தவறிக் கதறுதலும் முதலியவை வாதமுறைக்கேற்காத செயல்கள்; பிள்ளையார் அருளியபடி நேரிய முறையில் வாதத்துட் புகாது இவ்வாறு பிழைபட நடந்து கொண்டதற்கு அமணர்களது பொறாமையும் சினமும் காரணமாம். |
| ஒள்ளிழையார்......உள்நடுங்கி - ஒள் இழையார் - நேரிய நூன்முறையினையே கொண்டு ஒழுகுமவர் என்ற குறிப்பும் காண்க; "ஆயிழையாய்" (சிவஞானபோதம் - 7 சூத் - 3 அதி - வெண்பா) என்றவிடத்து "நுணுகிய நூல்களை ஆராய்வது" "இழை நூலாகலான் ஈண்டுச் சாத்திரத்தை யுணர்த்திற்று" என்று எமது மாதவச் சிவஞான முனிவர் உரை வகுத்தமை கருதுக; பொறாராகி ஒள்நடுங்கி - முன்னை இரவில் கரந்து தீத்தொழில் செய்த அவர்கள் இங்கு நேரிலும் முறைதவறி ஒழுகத் தலைப்பட்டாராதலின், அதனால் யாது விளையுமோ என்ற அச்சத்தால், காணப்பொறாத நிலையும் மன நடுக்கமும் விளைந்தன; அன்றியும், இது தாய்மைக் குணமாகிய கருணையின் விளைவுமாம்; இதனை மேல்வரும் பாட்டில் விரித்து "இன்அருட் பிள்ளையாரிவர் திருமேனி எளியர் போலும் -உவர் எண்ணிலார்கள்" என்பதும் காண்க. அமணர்கள் மேலும் அடாத செயல்களைத் தமது கூட்டப் பெருக்கின் வலியினாலும் பொறாமை கொண்ட மூண்ட சினத்தாலும் செய்ய முற்படுவார்கள் என்ற கருத்து எழுந்தது; அதுகண்ட அமைச்சரும் அரசனும் இருக்கவும் அம்மையார் முற்பட்டுத் தடுத்தநிலை "அச்சந் தாய்தலை யன்பின் முன்பு நிற்குமே" (574) என்றவிடத் துரைத்த நிலையின் தன்மையாலறிக. |
| மூள்வார் என்ற குறிப்பும் அச்சங் காட்டியது. |
| 757 |
| 2656. (வி-ரை) இது மங்கையர்க்கரசியார் மனநடுங்கி அரசனை நோக்கி அமணர்களது தகாத செயலை முறையிட்டுத் தவிர்ப்பார்போன்று கூறியது. தென்ன வன்றன்னை நோக்கி என்ற குறிப்புமிது. |
| மற்று இன்னருட் பிள்ளையார் திருமேனி யெளியர் போலும் என்க; பிள்ளையார் திருமேனி எளியர் = உவர் எண்ணிலார்கள் = வள்ளலார் நல்கும் = பின்னை அமணர் பேச என்ற நான்கும் திருவுள்ளத்துட் கொண்டு அம்மையார் கூறியவற்றுள், முதற்கண் எழுந்தது பிள்ளையாரது திரு மேனியின் எளிமையேயாம்! அதவே தாய் தலையன்பின் தன்மை. |