932திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  குறிப்புப் பார்வையிற்றோன்ற; "நோக்கம் கண்டு" என மேற்கூறுதல் காண்க. வெப்பு மேன்மேல் தீதுறப்பொறாத நிலையில் பேசமாட்டாது பார்த்தான் என்ற குறிப்பும்பட நின்றது.
 

763

2662
தென்னவ னோக்கங் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர்
"அன்னவன் வலப்பால் வெப்பை யாலவா யண்ண னீறே
மன்னுமந் திரமு மாகி மருந்துமாய்த் தீர்ப்ப" தென்று
பன்னிய மறைக ளேத்திப் பகர்திருப் பதிகம் பாடி,
 

764

2663
திருவளர் நீறு கொண்டு திருக்கையாற் றடவத் தென்னன்
பொருவரு வெப்பு நீங்கிப் பொய்கையிற் குளிர்ந்த தப்பால்;
மருவிய விடப்பான் மிக்க வழலெழ, மண்டு தீப்போல்
இருபுடை வெப்புங் கூடி யிடங்கொளா தென்னப் பொங்க,
 

765

2664
உறியுடைக் கையர் பாயி னுடுக்கையர் நடுக்க மெய்திச்
செறிமயிற் பீலி தீயத், தென்னன்வெப் புறுதீத் தம்மை
யெறியமா சுடலுங் கன்றி, யருகுவிட் டேற நிற்பார்
அறிவுடை யாரை யொத்தா ரறிவிலா நெறியி னின்றார்.
 

766

  2662. (இ-ள்) தென்னவன் நோக்கம் கண்டு - பாண்டியனது நோக்கத்தினைக் கண்டு; திருக்கழுமலத்தார் செல்வர் - சீகாழியார் களுடைய செல்வராகிய பிள்ளையார்; அன்னவன்....தீர்ப்பது என்று - அவனுடைய வலப்பாகத்து வெப்புநோயினைத் திருவாலவாயில் இறைவனது திருருநீறே நிலைபெற்ற மந்திரமும் மருந்துமாகித் தீர்ப்பதாகும்" என்ற கருத்துட்கொண்டு; பன்னிய....பகர் - கூறிய வேதங்களின் கருத்தைப் போற்றி எடுத்துச் சொல்லுகின்ற; திருப்பதிகம் பாடி - "மந்திரமாவது நீறு" என்று தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடியருளிச் செய்து,
 

764

  2663. (இ-ள்) திருவளர்....தடவ - திருவளரும் திருநீற்றினைக் கொண்டு பிள்ளையார் தமது திருக்கையினாலே அரசனது உடலில் தடவியிட; தென்னன்......அப்பால் - பாண்டியன் ஒப்பில்லாத வெப்பு நோயினின்றும் நீங்கியதனால் அவ்வலப்பக்கம் தண்ணீர்ப் பொய்கைபோலக் குளிர்ந்தது; மருவிய....அழலெழ - பொருந்திய இடது பக்கம் மேலும் மிகுந்த அழலின் தன்மை எழுந்ததனால்; மண்டு.....பொங்க - செறிந்த தீயினைப்போல இருபக்கத்து வெப்பும் சேர்ந்து இடம்கொள்ள மாட்டாதென்று பொங்கவே,
 

765

  2664. (இ-ள்) உறியுடை....எய்தி - உறிதூக்கிய கையினை யுடையார்களும் பாயினை உடையாக யுடையார்களும் ஆகிய அமணர்கள் நடுக்கமடைந்து; செறி....தீய - செறிந்த மயிற்பீலிக் கற்றை தீந்துபோக; தென்னன்.....கன்றி - அரசனது வெப்பு நோயின் சூடு தம்மைத் தாக்குதலாலே மாசுகொண்ட உடலும் மேலும் கருகி வெதும்பியவர்களாய்; அருகுவிட்டு ஏற நிற்பார் - அரசனது அருகினின்றும் அகன்று தூரச்சென்று நிற்பவர்களாகிய அவ்வமணர்; அறிவுடையாரை...நின்றார் - அறிவில்லாத நெறியின் நின்றவராயினும் அறிவுடையார்களைப் போன்றனர்.
 

766

  இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.