[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்935

  குறிப்பும்படக் கூறியது முன்பாட்டிற் கூறிய இருவகைத் தோல்வி குறித்தது; கையர் - கீழ் மக்கள் என்ற குறிப்பும்பட நின்றது; இவர்கள் இடப்பாகத்தில் நின்றவர்கள்.
  மயிற் பீலி தீய - தம் கையில் கொண்டு அரசனுடலைத் தடவி நின்ற மயிற் பீலிக் கற்றை; தீய - கருக; வெப்பு மிகுதியின் சூடு தாங்கலாற்றாது மயிற் பீலி தீந்துபோக என்க.
  தென்னன் வெப்புறு தீ - இவ்வொன்றே மயிற்பீலி தீவதற்கும், தம்மை எறிவதற்கும் காரணமாதலின் முன்னும் பின்னும் கூட்டி உரைக்கும்படி இடையில் வைக்கப்பட்டது.
  எறிய மாசுடலும் கன்றி - எறிய - எறிதலால்; கன்றுதல் - கருகுதல் - வெதும்புதல்; மாசுடலும் கன்றி - இயற்கைக் கருமையுடன் செறிந்த செயற்கை மாசும் கூடிக் கருகிய உடல், வெப்புத் தீயினால் மேலும் கருகிற்று என்க. கன்றி - கன்றுதலால்; நடுக்கமெய்தி - "கண் திகைப்பிப்பது நீறு" என்ற பதிகம் காண்க;
  அருகு விட்ட ஏற நிற்பார் - அருகு - மந்திரித்து நோய் தீர்க்க அணுகச் சென்ற அணியதாகிய இடம்; ஏற - அகல; தூரத்தே - சேய்மையில்.
  நிற்பார் - நின்றார் - ஒத்தார் - என்று கூட்டி முடிக்க.
  அறிவுடையாரை ஒத்தார் - அறிவுடையாரல்லா ராயினும் அறிவுடையார் போன்றனர் என்பது; அறிவுடைமை போல்வதாவது அறிவுடை யோர் போன்று செயல் செய்தல்; ஈண்டு மன்னவனை அணுகி அருகு நிற்றலை விட்டுச் சிறிது அகன்று நிற்றல்; "அகலா தணுகாது தீக்காய்வார் போல்க, விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்"(குறள்) என்றபடி மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல மன்னர்ச் சேர்ந்தொழுகுதல் அறிவுடையார் செயல்; அதுபோல இங்கு அமணர் மிக அருகில் நிற்பதை விட்டு மிக அகலாமல் கற்றுத் தூரத்தில் நின்றாராதலின் அறிவுடையாரை ஒத்தனர்; "புத்திதா னுடையை போல விருந்தனை" (சித்தி - 1 - 42).
  அறிவிலா - நின்றார் - ஆனால் அச்செயலாற் பயன் கொள்ளமாட்டா தழிந்தனராதலின் அறிவிலா நெறியில் நின்றார் என்றார். அறிவிலா நெறி - அமண நெறி.
  இங்கு இவ்வாறன்றி, இந்நோய் எம்மால் தீர்த்தற்கு அரிதென விவேகம் வந்து அகன்ற அறிவுடையோர் போல என்றுரைப்பர் ஆறுமுகத் தம்பிரானார். நெருப்புச் சுடுமென்பதை யறிந்து விலகிக் கொண்டமையால் அறிவுடையாரை நிகர்த்தனர் என்பது இராமநாதச் செட்டியார் உரைக் குறிப்பு. பிள்ளையார் பெரியார்; அவரே தீர்க்கட்டும் என்று ஒதுங்கி நிற்பது அறிபுடைமையாதலின் அவ்வாறு செய்வார் போல; "கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற், சொல்லா திருக்கப் பெறின்"((குறள்) என்றதற்கேற்ப ஒதுங்கி ஏற நின்றனர் என்பது சதாசிவ செட்டியார் குறிப்பு.
  அறிவிலா நேறியில் நின்றமையாவது அறியமாட்டாது தமது புரை நெறியினையே பற்றிப் பின்னரும் மூண்டு நின்ற தன்மை.
 

766

2665
பலர்தொழும் புகலி மன்ன ரொருபுடை வெப்பைப் பாற்ற
மலர்தலை யுலகின் மிக்கார் வந்ததி சயித்துச் சூழ
இலகுமேற் றென்னன் மேனி வலமிட மெய்தி நீடும்
உலகினிற் றண்மை வெம்மை யொதுங்கினா லோத்த தன்றே.
 

767

  (இ-ள்) பலர்தொழும்....பாற்ற - பலராலும் தொழப்படும் சீகாழித் தலைவராகிய பிள்ளையார் அரசனது ஒரு பக்கத்து (வலப்பக்கத்து) வெப்பினைப் போக்க; மலர்தலை.....சூழ - மலர்தலையுடைய உலகின் அறிவினான் மிக்கோர்கள் அதிசயித்து வந்து சூழ;