946 | திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்] |
2673 | பிள்ளை யாரு "முங்கள் வாய்மை பேசு மின்க" ளென்றலுந், தள்ளு நீர்மை யார்கள் "வேறு தர்க்க வாதி னுத்தரங் கொள்ளும் வென்றி யன்றியே குறித்த கொள்கை யுண்மைதான் உள்ள வாறு கட்பு லத்தி லுய்ப்ப" தென்ன வொட்டினார். | | | 775 | | (இ-ள்) பிள்ளையாரும்...என்றலும் - பிள்ளையாரும் அமணர்களை நோக்கி உங்கள் சமயவுண்மைகளைப் பேசுங்கள் என்று கூறலும், (அதுகேட்டு); தள்ளு நீர்மையார்கள் - தள்ளப்படும் தன்மையுடையவர்களாகிய அவ்வமணர்கள்; வேறு...அன்றியே - வேறுதர்க்க உருவமாகிய கடா விடைகளால் வரும் வெற்றியையன்றி; குறித்த.... உய்ப்பது - "அவ்வவர் குறிக்கொண்ட கொள்கைகளின் உண்மைத் தன்மை உள்ள படியினைக் கண்முன்னே நிறுத்திக் காட்டுதல் ஈண்டு செய்யத்தக்கது" என்று ஒட்டினார்கள். | | (வி-ரை.) பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசுமின்கள் என்றது - முன்னர் அமணர்கள் பிள்ளையாரைப் பலராய்ச் சூழ்ந்து சினந்து வாதினில் வெல்ல எண்ணித் தாம் கோலும் நூல் எடுத்தோதித் தலைதிமிர்ப்பக் குரைத்தார்கள்(2654); அப்போது "நும்பொருள் எல்லை உள்ளவாறுபேசுக" என்று பிள்ளையார் அருளினர்(2655); பிள்ளையார்பாற் கொண்ட பரிவினால் அவ்வாதம் நிகழாமல் அம்மையார் தடுத்து, "அரசமது நோய் நீக்கியபின் இவ்வமணர் வல்லராகில் பேசுக" என்று குறுக்கிட்டுத் தடுக்க, அரசன் ஆணையின்படி நோய்தீர்த்தலையே இகலிய வாதமாகக் கொண்டு தெய்வத் தன்மையும் வெற்றியும் துணியப்பட்டன; ஆதலின், அவ்வாறு முன்பு தாமே அழைக்கவும் இடையில் தடுக்கப்பட்ட சமயநூல் வாதத்தினைத் தொடர்ந்து பேசுக என்று பிள்ளையார் அமணரை அழைத்தருளினர் என்க; சிலசில சிறு உண்மைகளையே கோட்பாடாகக் கொண்டு சிறுதெய்வங்களை வணங்கும் சிறுசமயங்கள், முழு உண்மைகளுக்கு நிலைக்களமாய் முழுமுதற் கடவுளும் சங்காரகாரணனுமாய் உள்ள சிவபெருமானையே கடவுளாகக் கொண்டதாய் விளங்கும் சைவ சமயத்தொடு மாறுபட்டு உலகை மயக்கினது அக்காலநிலை; அதனால் பொய் மிகுத்து மறைவழக்கமருகிப் பூதிசாதன விளக்கம் போற்றல்பெறாது சைவநெறி குன்றியது (1916); இதனை நீக்கிச் சமயங்களானவற்றின் தாங்களை உள்ளபடி அறிவித்து அளவுபடுத்தி நிறுவ வேண்டியது ஞானாசாரியரது கடமையாயிற்று. திருவருட் குறிப்பினை வினவி விடைபெற்ற பின்னரே பிள்ளையார் இதனை மேற்கொண்டனர்; 2636, 2637 பார்க்க. இக்காரணங்களால் அமணரை அவரது சமய உண்மை பேசுக என்று பிள்ளையார் அழைத்தனரேயன்றி இகலினாலன்று; "இகலில ரெனினும்"(2752); "இது வாகு மதுவல்ல தெனும்பிணக்க தின்றி, நீதியினா னிவையெல்லா மோரிடத்தே காண நின்றதியா தொருசமய மதுசமயம்" (சித்தி. 8 -13) என்றபடி உலகில் ஒன்றோடொன்றொவ்வாமல் உள்ள பற்பல சமயங்களின் கொள்கைகளையும் தன்னகத்தே கொண்டு அதனால் ஒன்றோடும் மாறுகொள்ளாமல் அவ்வவற்றுக்கும் படி முறை காட்டி நிற்பது சைவ சமயம்; ஆதலின் அது எச்சமயத்தினையும் வெறுப்பதோ மாறுகொள்வதோ அழிப்பதோ இல்லை; ஆயின் பரபக்க நிராகரணமும், சமயவாதமும், ஈண்டு வருவதுபோல் அழிவும் சைவத்துட் கேட்கப்படுதல் என்னையோ? எனின், தற்காப்பின் |
|
|
|
|