990திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  (வி-ரை) இப்பாட்டு ஐயம்.* உவமை இந்த இடத்துக்கு ஏற்றதாகத் தோன்றாமையும், மகளிர் என்ற பன்மையும் கணவன் என்ற ஒருமையும் ஆக மயங்குதலும் உன்னுக; வைகை கடலுடன் சேராமையும் கருதுக. "கடல் ஒருவர்க்கு முதவாதவுவரியேன, மடுத்தறியாப் புனல்வைகை" (வாதவூ.உப.பட.) என்ற திருவிளையாடற் புராணக் கருத்துக் காண்க. இப்பாட்டின் கருத்து " ஆற்றினீர் கடுகவோடும்"(2711) என்று மேற்பாட்டில் கூறப்படுவதும் கருதுக.
  கார்கெழு பருவம் - கார்காலம் - இதுவரை ஆற்றியிருந்த சிறப்புப்பற்றி மகளிர் என்று பன்மையிற் கூறினார் என்றும், பன்மையாகவே கொள்ளினும் "ஏவல் இளையவர் தாய்வயிறு கரிப்ப" என்பதிற்போலத் தனித்தனித்கணவன்பால் என்றலுமாம் என்றும், ஆறுகள் எல்லாம் கடல்நோக்கிச் செல்லும் பொதுவியல்புபற்றிக் கூறினார் என்றும் இங்கு அடைகி காண்பாருமுண்டு. கற்பொடு பொருந்திக் கணவன்சொற் பிழையாது இல்லிருந்து நல்லறஞ் செய்தல் மகளிரது இயற்கை, முல்லையாதலின் அது முற்கூறப்பட்டது. எனவே முல்லை என்ற சொற்குப் பொருள் இருத்தலாயிற்று " (தொல் - போருள் - அக-5- ) நச்சினார்க்கினியர் உரை; " காரு மாலையும் முல்லை" என்பது சூத்திரம் .(மேற்படி - 6)
  உள்ளங் கணவன்பால் விரைவுறச் செல்லுதல் - "பின்வரும் கூடலாகிய குறிஞ்சித் திணையொழுக்கம் நிகழும்பொருட்டு; புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின்" என்பர் நச்சினார்க்கினியர்; "விரைவுற" என்பதும் பாடம். "மகளிர் உள்ளம் செல்வதற்கும் வைகை விரைந்து செல்வதற்கும் கார்ப்பருவம் ஒப்பக் காரணமாகும் குறிப்பும் காண்க.
  நீர்கெழு பௌவம் நோக்கி - செல்லும் - "பள்ளந்தா ழுறுபுனலில் கீழ்மேலாக" (திருவா) என்றபடி கீழ்நோக்கிச் செல்லும் நீர் மிக்க விரைவுடன் செல்லுதல் குறிப்பு. நோக்கிச் செல்லும்-என்றதனால் நோக்கமாகச் செல்லும் அளவேயன்றி அது கைகூடுவதில்லை என்ற குறிப்பும்போலும்.
  நிரை - திரை - இரைத்து - நிரை - வரிசையாக; திரை - அலைகளினால்; இரைத்தல் - ஓசைமிகுதல்; நிரை திரை இரைத்தல் - காமுறு மகளிர் உள்ளம் விரைவும் அலைவும் பதைப்பும் பொருந்தும் பண்புக்கு உவமை.
  செல்லுமாபோல் - செல்லும் - வினைபற்றிய உவமம்.
 

812

2711
ஆற்றினீர் கடுக வோடு மருங்குற வரச னோக்கி,
"நீற்றனி திகழ்ந்த மேனி நிறைமதிப் பிள்ளை யாரும்
வேற்றரு வருகர் நீரும் விதித்தவே டிடுக" வென்றான்;
"தோற்றவர் தோலா" ரென்று முன்னுறத் துணிந்திட்டார்கள்.
 

813

  (இ-ள்) ஆற்றின்நீர்....கடுக ஓடும் மருங்கு உற - (முன் கூறியவாறு பிள்ளையாரும் யாவரும்) ஆற்றில் நீர் வேகமாகச் செல்லும் இடத்தின் பக்கத்தைச் சேர;"நீற்றணி....இடுக" என்றான் - திருநீற்றின் அழகு விளங்கிய நிறைமதி போன்ற பிள்ளையாரும், அதனின் வேறாகிய உருவுடைய அருகர்களாகிய நீங்களும் இசைந்தபடி அவ்வவர் ஏடுகளை இடுங்கள் என்று சொன்னான்; தோற்றவர்...துணிந்திட்டார்கள் - "முன் தோற்றவர்கள் பின்னும் தோலார்கள்" என்று உட்கொண்டு முந்திக்கொள்வதற்கு அருகர் துணிந்தனர்.
  -----------------------------------------
  * எனது "சேக்கிழார்" பக்கம் 219 பார்க்க.