|
  |  |  | 
  |  | தாளாண்மை உழவு தொழிற்றன்மை வளம் - உழவு தொழிற் பெரு முயற்சியினாலே வரும் நேரியவளங்கள்.   இவை நெல் முதலியனவும், காய்கனி முதலியனவும், பால்தயிர்நெய் முதலியனவும், இவைகொண்டு பெறும்   பிறவுமாம்; இவற்றை மேல்வரும் பாட்டில் விரித்தல் காண்க. | 
  |  | வேளாண் குண்டையூர்க் கிழவர் - வேளாளர் என்பதனால் மரபுச் சிறப்பினையும், குண்டையூர்க்   கிழவர் என்பதனால் ஊர்பற்றிய பெயர்ச்சிறப்பினையும் கூறியபடி. கிழவர் - கிழவர்   மரூஉ. இது வேளாளர் மரபுக்கு வழங்கும் சிறப்புப் பெயர் இது முன்னாள் மிகுதியும் வழக்கிலிருந்தது;   இந்நாள் அருகி வழங்குவதாயிற்று. தனிப் பெயர்கூறாது ஊர்பற்றிக் கூறியது மரபின் சிறப்புணர்த்திற்று.   (தொல். பொருள் - மரபு - 74 உரை) தேவாரப் பதிகத்தினுள் இவ்வூரினையே சிறப்பித்தமை காட்டும்   குறிப்புமாம். | 
  |  | ஆளாகக்கொண்டவர் தாள் அடைந்து - ஆளாகக்கொண்டவராதலின் அவர்தாளடைந்து எனக் காரணக்   குறிப்புப்பட ஓதினார். | 
  |  | வழக்கினில் வென்று ஆளாகக்கொண்டவர் - தடுத்தாட்கொண்ட வரலாறு; நம்பியாரூரர்   வரலாற்றில் குண்டையூர்க்கிழார் ஈடுபட்டு அன்பு செய்து ஒழுகினார் என்பது. | 
  |  | அன்பால் ஒழுகுவார் - இவ்வொழுக்க நிலை பற்றிய செயலை மேற்பாட்டிற் கூறுவார். | 
|  | 10 | 
  |  | 3165. (வி-ரை.) செந்நெல் - செந்நெல்லின் மேன்மை பற்றி அரிவாட்டாய நாயனார்   புராணமும், பிறவும் பார்க்க. | 
  |  | பொன்னன்ன செழும் பருப்பு - பொன்னிறம் பருப்பின் உயர்வு காட்டுவது. | 
  |  | தீங்கரும்பின் இன்னல்ல அமுது - இன் - நல்ல - இனிய என்பது சுவையினையும் - நல்ல   என்பது குணத்தினையும் குறித்தது. அமுது என்றார் நேரே உணவாகப் பயன்படுதற் குறிப்பு. | 
  |  | வன்றொண்டர்க்கமுதாக - "வழக்கினில் வென்றாளாகக் கொண்டவர்" என்று முன்பாட்டிற்   கூறியதற் கேற்ப வன்றொண்டர் என்றார். | 
  |  | படி - படித்தரம்; தினந்தோறும் அமைக்கும் அமுது படிக் கட்டளை, சமைத்தல் -   அளவிட்டுச் செலுத்துதல். | 
  |  | 11 | 
  | 3166 |                       | ஆனசெய லன்பின்வரு மார்வத்தான் மகிழ்ந்தாற்ற வானமுறை வழங்காமல் மாநிலத்து வளஞ்சுருங்கப்
 போனகநெற் படிநிரம்ப வெடுப்பதற்குப் போதாமை
 மானவழி கொள்கையினான் மனமயங்கி வருந்துவார்;
 |  | 
  |  | 12 | 
  | 3167 |                       | "வன்றொண்டர் திருவாரூர்மாளிகைக்கு நெல்லெடுக்க இன்றுகுறை யாகின்ற தென்செய்கே!" னெனநினைந்து
 துன்றுபெருங் கவலையினாற் றுயரெய்தி யுண்ணாதே
 அன்றிரவு துயில்கொள்ள வங்கணர்வந் தருள்புரிவார்,
 |  | 
  |  | 13 | 
  | 3168 |                       | "ஆருரன் றனக்குன்பா னெற்றந்தோ" மென்றருளி நீரூருஞ் சடைமுடியார்நிதிக்கோமான் றனையேவப்
 பேரூர்மற் றதனெல்லை யடங்கவுநென் மலைப்பிறங்கல்
 காரூரு நெடுவிசும்புங் கரக்கநிறைந் தோங்கியதால்.
 |  | 
  |  | 14 |