| |
| தாளாண்மை உழவு தொழிற்றன்மை வளம் - உழவு தொழிற் பெரு முயற்சியினாலே வரும் நேரியவளங்கள். இவை நெல் முதலியனவும், காய்கனி முதலியனவும், பால்தயிர்நெய் முதலியனவும், இவைகொண்டு பெறும் பிறவுமாம்; இவற்றை மேல்வரும் பாட்டில் விரித்தல் காண்க. |
| வேளாண் குண்டையூர்க் கிழவர் - வேளாளர் என்பதனால் மரபுச் சிறப்பினையும், குண்டையூர்க் கிழவர் என்பதனால் ஊர்பற்றிய பெயர்ச்சிறப்பினையும் கூறியபடி. கிழவர் - கிழவர் மரூஉ. இது வேளாளர் மரபுக்கு வழங்கும் சிறப்புப் பெயர் இது முன்னாள் மிகுதியும் வழக்கிலிருந்தது; இந்நாள் அருகி வழங்குவதாயிற்று. தனிப் பெயர்கூறாது ஊர்பற்றிக் கூறியது மரபின் சிறப்புணர்த்திற்று. (தொல். பொருள் - மரபு - 74 உரை) தேவாரப் பதிகத்தினுள் இவ்வூரினையே சிறப்பித்தமை காட்டும் குறிப்புமாம். |
| ஆளாகக்கொண்டவர் தாள் அடைந்து - ஆளாகக்கொண்டவராதலின் அவர்தாளடைந்து எனக் காரணக் குறிப்புப்பட ஓதினார். |
| வழக்கினில் வென்று ஆளாகக்கொண்டவர் - தடுத்தாட்கொண்ட வரலாறு; நம்பியாரூரர் வரலாற்றில் குண்டையூர்க்கிழார் ஈடுபட்டு அன்பு செய்து ஒழுகினார் என்பது. |
| அன்பால் ஒழுகுவார் - இவ்வொழுக்க நிலை பற்றிய செயலை மேற்பாட்டிற் கூறுவார். |
| 10 |
| 3165. (வி-ரை.) செந்நெல் - செந்நெல்லின் மேன்மை பற்றி அரிவாட்டாய நாயனார் புராணமும், பிறவும் பார்க்க. |
| பொன்னன்ன செழும் பருப்பு - பொன்னிறம் பருப்பின் உயர்வு காட்டுவது. |
| தீங்கரும்பின் இன்னல்ல அமுது - இன் - நல்ல - இனிய என்பது சுவையினையும் - நல்ல என்பது குணத்தினையும் குறித்தது. அமுது என்றார் நேரே உணவாகப் பயன்படுதற் குறிப்பு. |
| வன்றொண்டர்க்கமுதாக - "வழக்கினில் வென்றாளாகக் கொண்டவர்" என்று முன்பாட்டிற் கூறியதற் கேற்ப வன்றொண்டர் என்றார். |
| படி - படித்தரம்; தினந்தோறும் அமைக்கும் அமுது படிக் கட்டளை, சமைத்தல் - அளவிட்டுச் செலுத்துதல். |
| 11 |
3166 | ஆனசெய லன்பின்வரு மார்வத்தான் மகிழ்ந்தாற்ற வானமுறை வழங்காமல் மாநிலத்து வளஞ்சுருங்கப் போனகநெற் படிநிரம்ப வெடுப்பதற்குப் போதாமை மானவழி கொள்கையினான் மனமயங்கி வருந்துவார்; | |
| 12 |
3167 | "வன்றொண்டர் திருவாரூர்மாளிகைக்கு நெல்லெடுக்க இன்றுகுறை யாகின்ற தென்செய்கே!" னெனநினைந்து துன்றுபெருங் கவலையினாற் றுயரெய்தி யுண்ணாதே அன்றிரவு துயில்கொள்ள வங்கணர்வந் தருள்புரிவார், | |
| 13 |
3168 | "ஆருரன் றனக்குன்பா னெற்றந்தோ" மென்றருளி நீரூருஞ் சடைமுடியார்நிதிக்கோமான் றனையேவப் பேரூர்மற் றதனெல்லை யடங்கவுநென் மலைப்பிறங்கல் காரூரு நெடுவிசும்புங் கரக்கநிறைந் தோங்கியதால். | |
| 14 |