| |
3253 | அங்கு நீடருள் பெற்று ளார்வ மிகப்பொ ழிந்தெழு மன்பினாற் பொங்கு நாண்மலர்ப் பாத முன்பணிந் தேத்தி மீண்டு புறத்தணைந் தெங்கு மாகி நிறைந்து நின்றவர் தாமகிழ்ந்த விடங்களிற் றங்கு கோல மிறைஞ்சு வாரருட் டாவி லன்பரோ டெய்தினார். | |
| 99 |
| (இ-ள்.) அங்கு...புறத்தணைந்து - அவ்விடத்து நீடிய திருவருளினைப்பெற்று மனத்துள்ளேஆர்வம் மிகுதலின் மேலெழுந்து பொழியும் அன்பினாலே பொங்கும் புதிய பூவைப்போன்ற பாதங்களின் முன்னே பணிந்தேத்தி அங்குநின்றும் மீண்டு புறத்திற் சேர்ந்து; எங்குமாகி....இறைஞ்சுவார் - எங்கும் நீக்கமற முழுதும் நிறைந்து நின்றவராகிய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளிய இடங்களில் உள்ள நிலைபெற்ற திருக்கோலங்களைச் சென்று வணங்குவாராகி (நம்பிகள்); அருள்தாவில்...ஏகினார் - அருள்பெற்ற குற்றமற்ற அன்பர்கள் உடன் சூழ்ந்துவர அவர்களுடனே சென்றனர். |
| (வி-ரை.) ஏத்தி - இப்பதிகம் கிடைத்திலது! |
| எங்குமாகி நிறைந்து நின்றவர் - எங்கும் நிறைதல் இறைவரது முழுமுதற்றன்மை காட்டும் குணங்களுள் ஒன்று; சர்வவியாபகம் என்பது வடமொழி; நின்றவர் - எல்லாமாய் நிற்பவர்; எல்லாவற்றுள்ளும் நீங்காது நிற்பவர்; இத்தன்மை நின்ற திருத்தாண்டகம் - திருவுருத்திரம் முதலியவற்றுட் பேசப்படுவது. |
| மகிழ்ந்த இடங்களிற் றங்குகோலம் - எங்கும் நிறைந்து நின்றவரை எங்கும் காணலாமே; அதன் பொருட்டுப் பல இடங்களுக்கும் செல்வானேன்? எனின், சில விடங்களில் மகிழ்ந்து தயிரினெய் போல விளங்கியும், மற்ற இடங்களில் விளங்காது பாலினெய்போல மறைந்தும் வீற்றிருப்பார் இறைவராதலின், விளங்கி உள்ள இடங்களிற் சென்று கண்டு வணங்குதல் வேண்டப்படும் என்க; "அவன் மற்றிவ்விடங்களிற் (பத்தரது திருவேடமும் சிவாலயமும்) பிரகாசமாய் நின்றே" என்று சிவஞான போதத்தினுள் (சூ.12) மூன்றாமதிகரணத்துள் சிவாலய வழி பாட்டின் இன்றியமையாமைக்கு ஏதும் கூறியவாற்றான் அறிக; தங்குகோலம் என்ற குறிப்புமிது; வெளிப்பட நின்றிடுதல். |
| இறைஞ்சுவார் - வினைப்பெயர். |
| தாவில் அன்பரோடு - குற்றமற்ற மெய்யன்பர்கள். |
| 99 |
| வேறு |
3254 | வம்புநீ டலங்கன் மார்பின் வன்றொண்டர் வன்னி கொன்றை தும்பைவெள் ளடம்பு திங்க டூயநீ ரணிந்த சென்னித் தம்பிரா னமர்ந்த தானம் பலபல சார்ந்து தாழ்ந்து கொம்பனா ராட னீடு கூடலை யாற்றூர் சார, | |
| 100 |
3255 | செப்பரும் பதியிற் சேரார் திருமுது குன்றை நோக்கி ஒப்பரும் புகழார் செல்லு மொருவழி யுமையா ளோடு மெய்ப்பரம் பொருளா யுள்ளார் வேதிய ராகி நின்றார் முப்புரி நூலும் தாங்கி நம்பியா ரூரர் முன்பு. | |
| 101 |
| 3254. (இ-ள்.) வம்பு...வன்றொண்டர் - மணமிகுந்த மாலையினை அணிந்த மார்பினையுடைய நம்பிகள்; வன்னி...தாழ்ந்து - வன்னி, கொன்றை, தும்பை. |