| |
| இது சிதம்பரத்தினின்றும் மேற்கே செல்லும் குமாரகுடிக் கற்சாலையில் 4 நாழிகையளவில் அடையத்தக்கது. இவ்வழியில் 11/2 நாழிகையளவு மட்சாலையிற் செல்லுதல் வேண்டும். இவ்வழி நிவாநதியின் தென்கரையில் உள்ளது; (2) திருமுதுகுன்றம் நிலயத்தினின்றும் திருமணி முத்தாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கிச் செல்லும் கற்சாலைவழி 6 நாழிகையளவில் எறும்பூரையடைந்து, நிவாநதியைக் கடந்து தென்மேற்கில் 2 நாழிகையளவில் அடைவது மற்றொரு வழி; (3) திருமுதுகுன்றம் நிலையத்தினின்றும் தெற்கிலேனும் திருப்பெண்ணாகடம் நிலையத்தினின்று கிழக்கிலேனுங் கற்சாலைகள் வழி நிவாநதி வடகரைவழி 4 நாழிகைவந்து அவ்வழி நிவாநதியினைத் தாண்டி 2 நாழிகையில் நதியின் தென்கரையில் திருஎருக்கத்தம்புலியூரை அடைந்து அங்கு நின்றும் நிவாநதியின் தென்கரை வழியாய்க் கிழக்கில் 4 நாழிகையளவில் இதனை அடைவது மற்றுமொரு வழி; திருப்புறம்பயத்தி்னின்றும் தெற்கு நின்று நம்பிகள் வந்த வழி வேறு; எவ்வழியேயாயினும், ஆறு கடந்தும், மட்சாலை, ஒற்றையடிப்பாதைகளின் வழிச் சிரமத்துடன் தான்இவ்வூர் சேரத்தக்கது: மழை நாளில் மிகக் கடினம். |
3258 | கூடலை யாற்றூர் மேவுங் கொன்றைவார் சடையி னார்தம் பீடுயர் கோயில் புக்குப் பெருகிய வார்வம் பொங்க ஆடகப் பொதுவி லாடு மறைகழல் வணங்கிப் போற்றி நீடருள் பெற்றுப் போந்து திருமுது குன்றி னேர்ந்தார். | |
| 104 |
| (இ-ள்.) கூடலையாற்றூர்...புக்கு - திருக்கூடலை யாற்றூரில் மேவும் கொன்றை மாலை சூடிய நீண்ட சடையினையுடைய இறைவரது பெருமையினாலுயர்ந்த திருக்கோயிலினுள்ளே புகுந்து; பெருகிய...பொங்க - பெருகி எழும் ஆசையானது மேலும் அதிகரிக்க; ஆடகப் பொதுவில்...போந்து - பொன்னம்பலத்ததில் ஆடுகின்ற சத்திக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடிகளை வணங்கித்துதித்து நீடுகின்ற திருவருள் விடை பெற்றுச் சென்று; திருமுதுகுன்றில் நேர்ந்தார் - திருமுதுகுன்றத்திற் போய்ச் சேர்ந்தனர். |
| (வி-ரை.) பீடு உயர் - "பீடி னாலுயர்ந்தோர்களும்" (தேவா); பீடு - பெருமை. |
| பெருகிய ஆர்வம் பொங்க - முன்னமே பெருகியுள்ள பெருவிருப்பம் மேன்மேலும் அதிகரிக்க. |
| ஆடகப் பொது - பொன்னம்பலம்; ஆடகம் - பொன் - இங்கு ஞானமயமான சிற்றம்பலம் என்ற பொருளில் வந்தது; புறத்துப் பொன் மேய்ந்து விளங்குகின்றது அதன் புறத்தோற்றமாகிய குறியீடு. |
| நீடு அருள் - என்றும் நீடுகின்ற திருஅருள் விடை. |
| நேர்தல் - சென்று சேர்தல். |
| 104 |
3259 | தடநிலைக் கோபு ரத்தைத் தாழ்ந்துமுன் னிறைஞ்சிக் கோயில் புடைவலங் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து நடநவில் வாரை "நஞ்சி யிடை"யெனுஞ் செஞ்சொன் மாலைத் தொடைநிகழ் பதிகம் பாடித் தொழுதுகை சுமந்து நின்று. | |
| 105 |
3260 | நாதர்பாற் பொருடாம் வேண்டி நண்ணிய வண்ண மெல்லாங் கோதறு மனத்துட் கொண்ட குறிப்பொடும் பரவும் போது | |