| |
3266 | பொற்றிரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவா யோங்கும் நற்றிரு வாயி னண்ணி நறைமலி யலங்கன் மார்பர் மற்றதன் முன்பு மண்மேல் வணங்கியுட் புகுந்து பைம்பொற் சுற்றுமா ளிகைசூழ் வந்து தொழுதுகை தலைமேற்கொள்வார். | |
| 112 |
3267 | ஆடிய திருமுன் பான வம்பொனின் கோபு ரத்தின் ஊடுபுக் கிறைஞ்சி யோங்கு மொளிவளர் கனக மன்றில் நாடகச் செய்ய தாளை நண்ணுற வுண்ணி றைந்து நீடுமா னந்த வெள்ளக் கண்கணீர் நிரந்து பாய, | |
| 113 |
3268 | பரவுவாய் குளறிக் காதல் படிதிருப் படியைத் தாழ்ந்து விரவுமெய் யங்க மைந்து மெட்டினும் வணங்கி வேட்கை யுரனுறு திருக்கூத் துள்ள மார்தரப் பெருகி நெஞ்சிற் கரவிலா தவரைக் கண்ட நிறைவுதங் கருத்திற் கொள்ள, | |
| 114 |
| வேறு |
3269 | "மடித்தாடுமடிமைக்க"னென்றெடுத்துமன்னுயிர்கட்கருளுமாற்றால் அடுத்தாற்று நன்னெறிக்க ணின்றார்கள் வழுவிநரகணையாவண்ணம் தடுப்பானைப் பேரூரிற் கண்டநிலை சிறப்பித்துத் "தனிக்கூத்தென்றும் நடிப்பானை நாமனமே பெற்றவா" றெனுங்களிப்பா னயந்து பாடி, | |
| 115 |
3270 | மீளாத வருள்பெற்றுப் புறம் போந்து திருவீதி மேவித் தாழ்ந்தே ஆளான வன்றொண்ட ரந்தணர்க டாம்போற்ற வமர்ந்து வைகி, மாளாத பேரன்பாற் பொற்பதியை வணங்கிப்போய், மறலி வீழத் தாளாண்மை கொண்டவர் தங்கருப்பறியலூர்வணங்கிச்சென்றுசார்ந்தார். | |
| 116 |
| 3266. (இ-ள்.) நறைமலி அலங்கல் மார்பர் - தேன் மிகும் மாலை தாங்கிய மார்புடைய நம்பிகள்; பொற்றிரு...நண்ணி - அழகிய திருவீதியினை வணங்கிப் புண்ணியத்தின் விளைவாகி ஓங்கி விளங்குகின்ற நல்ல திருவாயிலினைச் சேர்ந்து; மற்றதன்...வணங்கி - அதன் முன்பு நிலமுற விழுந்து வணங்கி; உட்புகுந்து - உள்ளே புகுந்து; பைம்பொன்...கொள்வார் - பசும்பொன் வேய்ந்த இடங்களையுடைய சுற்றுத் திருமாளிகையினைச் சூழ்ந்து வலம் வந்து தொழுது கைகளைத் தலைமேற்கொள்வாராகி, |
| 112 |
| 3267. (இ-ள்.) ஆடிய...இறைஞ்சி - ஆனந்தக் கூத்தர்ஆடும் திருமுன்பாகிய அழகிய பொற்கோபுரத்தின் வழியே உட்சென்று வணங்கி; ஓங்கும்...நண்ணுற - பெருகும் ஒளிவளர்கின்ற பொன்னம்பலத்தில் ஆடுகின்ற சேவடியைச் சார; உள்நிறைந்து...பாய - உள்ளே நிறைந்து நீடுகின்ற ஆனந்த வெள்ளமாகிய கண்ணீர் இரு கண்களினின்றும் விடாது பொழிய, |
| 113 |
| 3268. (இ-ள்.) பரவுவாய் குழறி - துதிக்கின்ற வாய் தழுதழுத்துக்குழறி; காதல்.....தாழ்ந்து - பெரு விருப்பம் படியும் திருக்களிற்றுப்படியினை வணங்கி; விரவும்...வணங்கி - மெய் பொருந்திய ஐந்தங்கம் எட்டங்கம் என்ற முறையில் வணங்கி; வேட்கை...பெருகி - பெருகியஆசை வலுப்படத் திருநடனம் மெய்யுணர்வினுள்ளே |