|
  |  |  | 
  |  | உண்ணாதே துயில்கொள்ள - அருள்புரிவார் - உண்ணாதே கவலையினால் துயில் கொண்டமையினாலே   எனக் காரணப் பொருள் கொள்க. | 
  |  | துன்றுபெருங் கவலையினால் - அடியாரைப் பற்றிய பெருங் கவலையாதலின் அங்கணர்வந்து அது தீர   அருள் புரிவாராயினர்என்பது "தாள்சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்ற லரிது" என்ற திருக்குறளினாலும்   பெறப்படுதல் காண்க. | 
  |  | அருள்புரிவார் - அருளி - ஏவ - என வரும்பாட்டுடன் முடிக்க. | 
  |  | 13 | 
  |  | 3168. (வி-ரை.) ஆரூரன்றனுக்கு....அருளி - இது குண்டையூர்கிழாருக்கு இறைவர் கனாவில்   அருளியது. | 
  |  | நிதிக்கோமான்றனை ஏவ - நிதிக்கோமான் - அளகைக் கிறைவனாகிய குபேரன்; குபேரன்   சிவபிரான்றோழர். அட்ட திக்குப் பாலகர்களுள் ஒருவராய், நிதிக்கு அரசராய்ச், சிவபிரா னேவலின்படி   அடியார்களுக்கு வேண்டிய வளங்களை அங்கங்கும் கொண்டு உய்க்கும் நியமத்துட்பட்டவர். இளையான்குடி   மாற நாயனார் வரலாறும் (465), குங்குலியக்கலய நாயனார்வரலாறும் (844) பிறவும் பார்க்க. | 
  |  | ஏவ - நென்மலையாகக் குண்டையூரில் கொண்டு உய்க்கும்படி ஏவ - இது பின்விளைவினா லறிக. | 
  |  | பேரூர்....ஓங்கியதால் - பேரூர் - பெரிய ஊர்; இங்குக் குண்டையூரைக் குறித்தது.   மலைப்பிறங்கல் - மலை போன்ற பெருக்கு. பிறங்கல் - உயர்ச்சியுமாம்.   விசும்பும் கரக்க கரத்தல் மறைத்தல். விசும்பு கரக்க என்றது உயர்ச்சி குறித்தது. | 
  |  | ஏவ ஓங்கியது - இறைவர் ஏவுதலும் செயல் நிகழ்ச்சியும் உடன் நிகழ்ந்த விரைவு குறித்தது. | 
  |  | ஆரூரன்தனக்கு உன்பால் நெல் தந்தோம் - ஆரூரன்றனக்கு - ஆரூரருக்குப் படி சமைப்பதற்காக;   இஃது ஆரூரருக்கே நேரே தரப்பெறாமல் குண்டையூர் கிழாருக்குத் தரப்பெற்றமை என்னையோ? எனின்,   குண்டையூர் கிழாரின் மனக்கவலை தீர்வதற்கும் அவரது திருப்பணி நிறைவேறக் காண்பதற்குமாக   இறைவர் அருள் வைத்தபடி என்க. மேற்கூறப்படுவனவும் காண்க. | 
  |  | அடங்கவும் - முழுவதும் - ஊர்எல்லை நென்மலையின் உள்ளே அடங்க என்ற குறிப்புமாம், | 
  |  | பிறங்கி - பிறங்க - என்பனவும் பாடங்கள். | 
  |  | 14 | 
  | 3169 |                       | அவ்விரவு புலர்காலை யுணர்ந்தெழுவா ரதுகண்டே "யெவ்வுலகி னென்மலைதா னிது?"வென்றே யதிசயித்துச்
 செவ்வியபொன் மலைவளைத்தார் திருவருளின் செயல்போற்றிக்
 கொவ்வைவாய்ப் பரவையார் கொழுநரையே தொழுதெழுவார்,
 |  | 
  |  | 15 | 
  |  | வேறு | 
  | 3170 |                       | "நாவலூர் மன்ன னார்க்கு நாயனா ரளித்த நெல்லிங் கியாவரா லெடுக்க லாகு?; மிச்செய லவர்க்குச் சொல்லப்
 போவன்யா" னென்று போந்தார்; புகுந்தவா றருளிச் செய்து
 தேவர்தம் பெருமா னேவ நம்பியு மெதிரே சென்றார்.
 |  | 
  |  | 16 | 
  |  | 3169. (இ-ள்.) அவ்விரவு......கண்டே - குண்டையூர் கிழார் அன்று இரவு விடியற் காலையில்   துயிலுணர்ந் தெழுவாராய் அதனைக் கண்டே; எவ்வுலகின்..... |