14திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

அதிசயித்து - "இதுதான் எந்தவுலகத்தின் விளைந்த நென்மலை" என்று அதிசயம் கொண்டு; செவ்விய.....போற்றி - சிவந்த பொன்மேரு மலையினை வில்லாக வளைத்த சிவபெருமானுடைய திருவருட் செயலினைத் துதித்து; கொவ்வைவாய்.....தொழுதெழுவார் - கோவைக் கனிபோன்ற வாயினையுடைய பரவையாருடைய கொழுநராகிய நம்பியாரூரரையே தொழுதெழுவாராகி,

14

3170. (இ-ள்.) நாவலூர்.......லெடுக்கலாகும் - திருநாவலூர்த் தலைவராகிய நம்பியாரூரருக்காகச் சிவபெருமான் கருணை செய்த நெல், ஆதலின் இதனை இங்குயாவர்களாற் சுமந்தெடுக்க முடியும்? (ஒருவராலுமியலாது); இச்செயல்.....யான் என்று போந்தார் - இந்தச் செயலினை அவர்க்குச் சொல்ல நான் போவேன் என்று போயினார்; புகுந்தவாறு..... ஏவ - நிகழ்ந்த படியினைத் தேவதேவராகிய சிவபெருமான் நம்பியாரூரருக்குச் சொல்லி ஏவியருளியபடி; நம்பியும்...போந்தார் - ஆரூர்நம்பிகளும் எதிரே சென்றருளினர்.

16

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
3169. (வி-ரை.) அவ்விரவு - இறைவர்தமது கனவில் வந்து சொல்லிய அவ்விரவு என்று அகரம் முன்னறி சுட்டு.
புலர்காலை உணர்ந்தெழுவார் குண்டையூர் கிழாரென்னும் எழுவாய் அவாய் நிலையான் வருவிக்க (3164); உணர்ந்து - துயிலுணர்ந்து; புலர்காலே உணர்ந்து என்றதனால் இது வைகறைக்கனா வென்பதும், அதனால் உடன் பயன்றருவதென்பதும் கருதப்படும். "புலர்வுறும் வைகறை" (2106) என்ற விடத்துரைத்தவை பார்க்க.
அதுகண்டே - அது - ஊர்எல்லையடங்கவும் விசும்பு கரக்க ஓங்கிய நென்மலை; அது - இது - இரண்டும் பொருள் ஒன்றனையே சுட்டின; அது என்பது முன் காணாது இன்னதென்றறிய வாராத கனவு நிலை குறித்த சேய்மைச் சுட்டு; இது கண்ட பின் மனத்தினுட் கொண்டு கருதவருதலின் அண்மைச் சுட்டு.
அதிசயித்து - அதிசயம் - கண்ணாற் கண்டாராயினும் இன்னதென் றறியவாராமையின் நிகழ்ந்த பெருமிதம். "அதிசயம் கண்டாமே" (திருவா).
திருவருளின் செயல் - அருள் - காரணம்; செயல் - அதனால் நிகழ்ந்த வெளிப்பாடாகிய பொருள்.
கொவ்வைவாய் - கொவ்வை - கோவைக்கனி. கோவை என்பது கொவ்வை என மருவி வந்தது.
கொழுநரையே - ஏகாரம் தேற்றம். திருவருள் வெளிப்படுதற்குக் காரணமாய் நின்ற உரிமை பற்றியது. கொழுநர் - தலைவர் என்பது குறிப்பு.
தொழுதெழுவார் - தொழுதலும் எழுதலும் உடனிகழ்ந்த நிலை குறித்தது. "கொழுநற் றொழுதெழுவாள்" (குறள்) என்புழிப் போல; கொழுநரையே என்ற குறிப்பும் காண்க.
எழுவார் - போந்தார் - என மேல் வரும் பாட்டுடன் முடிக்க.
எழுவார் - எழுவாராகி முற்றெச்சம்.
3170. (வி-ரை.) மன்னார்க்கு - மன்னர் - தலைவர்; மன்னார்க்கு - மன்னவருக்குத் தரும்பொருட்டு.
நாயனார் - தலைவர் - இறைவர்; "நாயனீரே" (774); நாதனார் என்ற பாடமுண்டு.