134திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

சேர்த்தி - கேடு தரும் குணங்களை நீக்கியதனோடு நில்லாது, வீடுதரும் அன்பினைக் கைக்கொண்டு; அன்பு நெறி சேராவிடில் குற்றங்களை நீங்கிய மட்டிற் பயனில்லை என்பதாம்; அன்பு - இறைவர்பாற் செலுத்துவது; குற்றம் நீங்கிய ஒழுக்கமே வீடுதரும்; இறைபணி வேண்டா என்பாரை நோக்கிக் கூறியது; மேல் வரும் பாட்டில் இதனை விரிவாய் உறுதிபடக் கூறல் காண்க;- (8) இன்பம்....உண்டு - இன்பம் - உலகவின்பம்; ஏழை - வலியற்ற; மோழைமை - அறியாமை; முட்டை - கீழ்மை; அன்பரல்லார்...சேரார் - எதிர்மறையாற் கூறியது உறுதிகுறித்தற்கு;- (9) எள் தனை - எள்ளினளவும் - சிறிதும்; தனை - அளவு. வந்து...காட்டும் - எந்தை - என்று கூட்டுக;- (10) மருது...மால் - கண்ணன் கதை; கண்ணனாய் வந்த விட்டுணு; சுருதி - கேட்கப்படுவது; கேட்கப்படுவதாக; முத்து - முத்துப் போன்ற; பத்தர்பந்தம் - பத்தர்கள் மனத்துட் பந்தித்து வைக்கும்; தொண்டர் - தொண்டர்களுக்கு.
தலவிசேடம் :- திருஎதிர்கொள்பாடி - சோழ நாட்டில் காவிரி வடகரை 24-வது பதி; மேலைத் திருமணஞ்சேரி என வழங்குவது; 25-வது பதியாகிய மணஞ்சேரி என்ற பதி இதனை அடுத்து மிக அணிமையில் (1/2 நாழிகையளவு) கிழக்கில் உள்ளது; மணக்கோலத்துடன் வந்த அன்பனாகிய அரசகுமார னொருவனை இறைவர் மாமனாய் எதிர்கொண்டு அழைத்துச் சென்ற வரலாற்றினால் இப்பெயர் பெற்ற தென்பர்; ஐராவதம் பூசித்துப் பேறு பெற்ற பதி; சுவாமி பெயர் பார்க்க; சுவாமி - ஐராவதேசுவரர்; அம்மை - மலர்க்குழனாயகி; பதிகம் 1.
இது வேள்விக்குடியினின்றும் வடக்கே கரைவழியாய் 1? நாழிகையில் உள்ளது.
திருவேள்விக்குடியும் திருத்துருத்தியும்
திருச்சிற்றம்பலம்

"முப்பது மில்லை"
எனும் பதிகம்

  பண் - நட்டராகம்

மூப்பது மில்லை, பிறப்பது மில்லை, யிறப்பதில்லைச்
சேர்ப்பது காட்டகத் தூரினு மாகச்சிந் திக்கினல்லாற்
காப்பது வேள்விக் குடிதண் டுருத்தியெங் கோனரைமேல்
ஆர்ப்பது நாக மறிந்தோமே னாமிவர்க்காட்படோமே.

(10)

கூடலர் மன்னன் குலநாவ லூர்க்கோ னலத்தமிழைப்
பாடவல் லபர மன்னடி யார்க்கடி மைவழுவா
நாடவல் லதொண்ட னாரூர னாட்படு மாறுசொல்லிப்
பாடவல் லார்பர லோகத் திருப்பது பண்டமன்றே.

(1)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஆட்படுமாறு சொல்லி நிந்தைத் துதியாகப் பாடித்துதித்தது. பதிகம் 10ம் பாட்டுப் பார்க்க. குறிப்பு: இப்பதிகம் - முதல் முறை நம்பிகள் இப்பதியினை வழிபட்டபோது பாடியருளியது; இரண்டாம் முறை பாடியருளியது (திருவொற்றியூரினின்றும் வரும் இடையில்) காந்தாரப்பண் - மின்னுமா மேகங்கள் என்ற பதிகம், நோய் நீங்கப் பெற்றுப் பாடியருளியது.
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மூப்பதுமில்லை...ஊரினமாக - ஆர்ப்பது நாகம் முதலியவை மக்கள் நிலையில் எட்டாத இறைமைத் தன்மைகள்; இவ்வாறு எட்டமுடியாதவராதலின் நாம் ஆட்படிற் பயன் என்? என்றது குறிப்பு; மேல் வரும் பாட்டுக்களிற் கூறுவனவு மிவ்வாறே கண்டுகொள்க. நிந்தைத் துதிகள்; வேள்